Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடை போடுவதில் தவறிழைத்ததால் எதிர்கொண்ட அனுபவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எடை போடுவதில் தவறிழைத்ததால் எதிர்கொண்ட அனுபவங்கள்

இலங்கையில் நமது பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடித் தலையீடு என்ற அத்தியாயம் முடிவுற்று ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகி விட்டது. அந்த நேரடித் தலையீட் டுக்கு வழி செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி நேற்றுமுன்தினத்துடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன.

இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட வரலாற் றுப் புறச்சூழலை ஒரு தடவை சிந்தனையில் மீட்டுப் பார்ப்பது இன்றைய அரசியல் நிலைவரங்களையும் ஓரளவுக்கு எடை போடுவதற்கு உதவக் கூடும்.

இலங்கை விடயத்தில் இந்திய இராஜதந்திரம் அப்போது அடிசறுக்கித் தோற்றுப் போனமைக்கு இரண்டு தனிநபர் களின் ஆளுமைகளையும், திறமைகளையும், குணவியல்பு களையும் எடைபோடுவதில் இந்தியத் தலைமைகள் இழைத்த பெரும் தவறே பிரதான காரணமாயிற்று.

அவர்களில் ஒருவர் சிங்கள அரசியலின் கிழட்டு நரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. மற்றவர் ஈழத் தமிழர்களின் நம் பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இந்த இருவரையுமே தவறாக பிழையாக புரிந்து கொண்டு காய்களை நகர்த்தியதால்தான் வரலாற்றில் மறக்க முடியாத அவமானப் பட்டறிவோடு இலங்கையிலிருந்த தனது அமைதிப் படையை மூடை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற்றவேண்டிய இக்கட்டு இந்தியத் தரப் புக்கு ஏற்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் நயவஞ்சகக் குணவியல்புகளை எடைபோடத் தவறிய ராஜீவ் காந்தியின் புதுடில்லி நிர்வாகம், அதேபோல தலைவர் பிரபாகரனின் தனித்துவமான திறமைகளையும், ஆளுமைகளையும் கூட குறைத்து மதிப்பிட்டுத் தவறிழைத்தது.

ஈழத் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கும், கோரிக்கை களுக்கும் நீதியான தீர்வு ஒன்றை முன்வைக்கும் நேர்மையோ, அரசியல் உறுதிப்பாடோ, தேசப் பற்றுறுதியோ அப்போதைய இலங்கைத் தலைவர் ஜே. ஆரிடம் இருக்க வில்லை. அவர் சாராம்சத்தில் ஒரு கடும்போக்கு சிங்களத் தேசியவாதியாக செயற்பட்டவர். ஆழமான சிங்களப் பேரின மேலாண்மைவாதச் சிந்தனையில் திளைத்தவர். பெரும்பான் மைச் சிங்களவரின் நலன் பேணுவதில் வெறி கொண்டு செயற்பட்டவர்.

ஈழத் தமிழர்களின் நீண்ட அரசியல் போராட்ட வரலாற் றில் அவர்களுக்கு நீதி வழங்க மறுத்து, அவர்களது அரசியல் சுதந்திரங்க ளையும், அடிப்படை உரிமைகளையும் அடியோடு நிராகரித்து, அவர்களது விடுதலைப் போராட்டங்களை நசுக்கி, சிங்கள மேலாண்மைவாதப் பிதாமகராக விளங்கிய பெருமை ஜே.ஆருக்கே உண்டு.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் உண்மையான, நேர்மையான அக்கறையும், பற்றுறுதியும், உறுதிப்பாடும் தமக்கு உண்டு என்பது போல நடித்து, அந்த அரசியல் சாணக்கியப் பொறிக்குள் அனுபவமற்ற இளைஞர் ராஜீவ் தலைமையிலான இந்திய நிர்வாகத்தை சறுக்கி விழ வைத்தவர் ஜே.ஆர்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை செம்மையாகக் கையாளத் தவறிய இந்தியத் தலைமை தமிழர் தரப்பில் தலை வர் பிரபாகரனையும் கூட சரிவர எடைபோட முடியாமல் கோட்டைவிட்டது.

எத்தகைய துன்பங்கள், இடர்பாடுகள், கஷ்டங்கள் போன்ற வற்றுக்கு மத்தியிலும் தனது மக்களினதும், தன்னுடைய இயக் கத்தினதும் அரசியல் இலட்சியத்தை இம்மி பிசகாது முன் னெடுத்துச் செல்லும் அபாரத் துணிச்சலும், விடாத உறுதிப் பாடும், மன ஓர்மமும் மிக்கவர் பிரபாகரன் என்பதை இந்தியத் தலைமை உணர்ந்து கொள்ளத் தவறியது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு காரண கர்த்தாவாக அமைந்தவர் கொழும்புக்கான அப்போதைய இந்தியத் தூது வர் ஜே.என்.டிக்ஸிற். ஒப்பந்தம் கைச்சாத்தாகிப் பத்து ஆண்டு களுக்குப் பின்னர் அதன் தோல்விக்கான காரணங்களை, இலங்கையில் இந்தியத் தலையீடு பற்றிய தமது வரலாற்று ஆய்வு நூலில் அவர் விவரிக்கின்றார். ஜே. ஆர். ஜெயவர்த் தனாவை மிகைப்படுத்தி தவறாக தாம் மதிப்பீடு செய்த மையையும் அவர் ஒப்புக்கொள்கின்றார்.

""தமிழீழ இலட்சியத்தின் மீது பிரபாகரனுக்கு இருக்கும் தணியாத வேட்கை, தீராத வெறி, அவரது போர்த் தந்தி ரோபாய மதிநுட்பம், பேரிடர்களைத் தாங்கும் அவரது மனவு றுதி ஆகியன பற்றிக் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தப்புக் கணக்காகும்.'' என்கின் றார் டிக்ஸிற்.

""கொழும்பில் நான் கடமையாற்றிய நான்கு ஆண்டு காலத்தில் தமிழ்த் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் அனைவரையும் நான் சந்தித்திருக்கின்றேன். இயல்பாகவே, இவர்கள் அனைவரையும் விடப் பிரபாகரன் மேன்மையான வராக, வித்தியாசமானவராகத் தென்பட்டார். இந்த இளைஞர் மீது நான் குறைபாடுகள் கண்டு, தப்பபிப்பிராயம் கொண்டு இருந்தபோதும் இவரது ஆழமான இலட்சியப் பற்றையும் அரசியல், இராணுவத் திறனாற்றல்களையும் நான் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். இவர், நிறைவான அரசியல் சாணக்கியமும், போரியல் மதிநுட்பமும் படைத்தவர் என்ப தைப் பல்லாண்டு காலமான நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டு கின்றன. நீடித்து நின்று, உறுதி தளராது போராடும் ஆற்றல் இவரது சிறப்பான பண்பியல்புகளுக்கு மேலும் வலுச்சேர்க் கின்றது. இந்திய அமைதிப் படைகளின் போருக்குத் தாக்குப் பிடித்துத் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருவ தனால் இவர் மக்களின் வீர நாயகன் என்ற மதிப்பைப் பெற் றார்.'' என்றும் குறிப்பிடுகின்றார் டிக்ஸிற்.

அன்று இந்தியா எடைபோடுவதில் விட்ட தவறை இன்று கொழும்பு அரசியல் தலைமையும் விடுவதாகவே படுகின்றது. கொழும்பின் தற்போதைய அரசியல், இராணுவக் காய் நகர்த் தல்கள் அதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்தியாவின் அந்த அனுவப் பாடத்தைத் தானும் மீண்டும் ஒரு முறை பட்ட றியத் தயாராகின்றதோ கொழும்பு அரசும்......?

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.