Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் குண்டுத் தாக்குதல் - 18 படையினர் பலி

Featured Replies

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ

Roadside bomb kills 18 Sri Lanka troops By BHARATHA MALLAWARACHI, Associated Press Writer

11 minutes ago

COLOMBO, Sri Lanka - A roadside bomb exploded near a military truck Monday night in northeastern Sri Lanka, killing 18 soldiers, security officials said as a senior rebel leader declared the country's cease-fire "null and void."

http://news.yahoo.com/s/ap/20060731/ap_on_...anka_violence_1

கடைசிச் செய்திகள்

இலங்கை ராணுவ நடவடிக்கைகள் தீவிரம்

தமிழோசை

இலங்கையில் கண்ணிவெடித் தாக்குதலில் 18 ராணுவத்தினர் பலி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் திங்களன்று இரவு ராணுவத்தினர் பயணம் செய்த பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 18 படையினர் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்புப் பேச்சாளரை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மாவிலாறு பிரச்சனை சம்மந்தமாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகு திங்கள் இரவு இந்த கண்ணி வெடித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என ராணுவத் தரப்பு கூறுகிறது.

விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதல்

மாவிலாறு அணையைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ராணுவம் எடுத்த முயற்சிகளைத் தாங்கள் முறியடித்து விட்டதாகவும், இலங்கைப் படையினர் மீண்டும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று விட்டதாகவும், அங்கிருந்து எறிகணை மற்றும் பல்குழல் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இருந்த போதும், ராணுவத்தினர் அணையை மீட்க தொடர்ந்து முயன்று வருகிறார்கள் இதில் ராணுவத் தரப்பில் ஆறு படையினர் உயிரிழந்ததாகவும், மாவிலாறு அணையைத் திறந்து மக்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கை அமைச்சரும், ராணுவ விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்லவரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை கந்தளாய் அல்லாறு பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில், பதினெட்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு 11:10 மணிக்கு, மாவிலாற்றை நோக்கி துருப்புக்களை ஏற்றிச் சென்ற சிறீலங்கா படையினரின் பேருந்து வண்டி, தாக்குதலாளிகளின் கிளைமோரில் சிக்கியுள்ளது.

குறிப்பிட்ட பேருந்து வண்டியில் பயணித்த பதினெட்டு சிறீலங்கா படையினரும் ஸ்தலத்தில் கொல்லப் பட்டுள்ளனர். இத் தாக்குதலில் மேலும் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.

இக்கிளைமோர் தாக்குதலை சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதி செய்துள்ளார்.

pathivu

கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்துட்டுது... :lol::lol:

:D:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.