Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நோக்கி படகு பேரணி! ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு!

Featured Replies

இலங்கை நோக்கி படகு பேரணி! ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு!

 

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்ய வற்புறுத்தி, இலங்கை நோக்கி படகுகளில் பேரணி நடத்துவது என்ற போராட்ட அறிவிப்பை ராமேசுவரம் மீனவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 06.06.2013 அன்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க சம்மேளனத்தின் அவசர கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களையும், படகுகளையும் வருகிற 20-ந்தேதிக்குள் விடுதலை செய்யவேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் 22-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து அனைத்து விசைப்படகுகளிலும் வெள்ளைக்கொடி கட்டியபடி இலங்கை நோக்கி பேரணி நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்களில் ஒருவரான சேசுராஜ், இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் கடந்த 700 ஆண்டுகளாக மீன் பிடித்து வருவதாகவும், ஆனால் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் இலங்கை கடற்படையினர் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15380:march-toward-the-boat-rameswaram-fishermen-announcement&catid=36:tamilnadu&Itemid=102

 

 

மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் கடந்த 700 ஆண்டுகளாக மீன் பிடித்து வருவதாகவும், ஆனால் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் இலங்கை கடற்படையினர் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.