Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்கள் தாக்குதல்: கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்தது என்ற போக்கில் செயல்பட்டு வருகிறார் ஜெயலலிதா

Featured Replies

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப்பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இலங்கை கடற்படை அதை காதிலே போட்டு கொள்வதே இல்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.

மீனவர்கள் அதிர்ச்சி

இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சாக்கிட்டு, 5 படகுகளையும், அவற்றில் இருந்த 24 மீனவர்களையும் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அனுராதபுரம் சிறையில் இவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீளாமல் இருக்கின்ற நிலையில், நேற்றையதினம் 6-6-2013 அன்று கிடைத்த செய்திப்படி, கச்சத்தீவு பகுதியில் ரோந்து கப்பல்களுடன் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படையினர் மேலும் 25 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, தங்கள் கப்பலுடன் படகுகளை இணைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூன் 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, யாழ் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடலில் விழுந்து மீனவர் சாவு

கைது செய்த 49 மீனவர்களை அன்னியில், அந்தப் பகுதியிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களையும் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2 படகுகள் பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளானதாகவும், படகிலே இருந்த மீனவர் முனியசாமி கடலில் விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த 49 மீனவர்கள் தவிர, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் போஸ், பாபு, ரீகன் ஆகிய 3 மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படை போலீசார் சிறை பிடித்திருக்கிறார்கள். அவர்களை தங்களது ரோந்துப் படகில் வைத்தே விசாரித்து கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள். சுமார் 10 மணி நேரம் அவர்களை தங்கள் படகிலேயே போலீசார் வைத்திருந்து பின்னர் இந்த மூவரையும் விடுவித்திருக்கிறார்கள்.

போராட்டம் அறிவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால், இலங்கை நோக்கி ஜூன் 22-ந் தேதி அனைத்து விசைப் படகுகளிலும் வெள்ளைக் கொடி கட்டியபடி பேரணி நடத்துவோம் என்ற அறப்போராட்ட அறிவிப்பினை ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வெளியிட்டிருக் கிறார்கள்.

மேலும் குமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்த ஜெயசீலன், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் உட்பட 11 மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி சவூதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரான் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டு, அங்கேயுள்ள பந்தரா அப்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கொலைவெறி தாக்குதல்

தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிந்தது என்ற போக்கில் செயல்பட்டு வருகிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்-மந்திரிகள் மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் உரை ஒரு அமைச்சரால் படிக்கப்பட்டு, ஏடுகளுக்கெல்லாம் தரப்பட்டுள்ளது. அதில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் பல கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், ஆனால் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வதும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்தை ஆத்திரமடையச் செய்துள்ளதாகவும், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

நடவடிக்கை

உண்மையில் தற்போதுகச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் சீன வீரர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்துகிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவாலாகும். இதற்கான எதிர்ப்பு அதிகமான நிலையில் போர்க் கப்பல்களை இலங்கை அரசு அகற்றிய போதிலும் தற்போது மீண்டும் கச்சத்தீவு அருகே இலங்கை அரசு போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளது. பெரிய போர்க் கப்பல் ஒன்றும், ரோந்துக் கப்பல்கள் பத்தும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் அச்சமடைந்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெறவில்லை என்பதால், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அதைச் சுட்டிக்காட்டி தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து இந்திய மீனவர்கள் கடந்த பல ஆண்டு காலமாக இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் கடுமையாக ஒரு நடவடிக்கை எடுத்தாலன்றி, தமிழக மீனவர்கள் வாழ்வில் ஒளி தென்படப் போவதில்லை.

இவ்வாறு கூறியுள்ளார்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15434:fishermen-attack-letter-writing-and-acting-in-the-course-of-duty-are-the-possible&catid=12:politics&Itemid=105

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.