Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் உறவை வெட்டி விட்டது யார்?: கருணாநிதி

Featured Replies

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், என்னுடைய ஆருயிர் தம்பியுமான திருநாவுக்கரசருடைய மகன் அன்பரசனுக்கும், அம்பாசமுத்திரம் டாக்டர் கே.பி. அருணாசலத்தின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் நடைபெற்றுள்ள மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்திலே திருமணத்திலே கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்துவிட்டு இந்த மணவிழாவிற்கு நான் வந்துள்ளேன்.

இந்த மணவிழாவிலே பல கருத்துகளை நம்முடைய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நம்முடைய தம்பி திருநாவுக்கரசர் நான் அவரோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன். அதனால் நான் அதைப் பற்றி விரிவாக இங்கே பேச விரும்பவில்லை.

ஏனென்றால் பெருந்தலைவர் காமராஜருடைய பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மாமன்றத்தில் அரசியல் பேசுவதற்காக தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே அந்தப் பிரச்சினையை இதோடு நிறுத்தி விடலாம் என்று நான் தம்பி திருநாவுக்கரசரை கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக எனக்கு முன்னதாக பேசிய துரைமுருகன் உள்ளிட்ட பலரும் எடுத்துக்காட்டியதைப் போல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகள், கடந்த காலத்தில் ஒருவிதமான பல நிகழ்வுகளுக்குக் காரணமான ஆண்டுகளாக அமைந்துவிட்டது என்பதை நாம் உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பண்பாடு என்ற ஒன்று தமிழர்களுக்கு உரிய ஒன்று. அதிலும் தமிழர் பண்பாடு, தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் மொத்த தமிழினத்தினுடைய மரியாதையையும் காப்பாற்றுவதற்காக உள்ள பண்பாடாகும்.

அந்தப் பண்பாட்டின்படி இன்றைக்கு தமிழகத்திலே எல்லோரையும் நட்போடு பழகி நேசித்து, எல்லோரையும் விரும்பி, எல்லோரிடத்திலும் உறவு கொள்வதற்கான உரிமையோடு பழகி, இந்த மாமன்றத்திலே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து திருநாவுக்கரசரையும், அவருடைய குடும்பத்தாரையும், புதிய மணமக்களையும் வாழ்த்துகிறோம் என்றால், இந்த நிலைதான் திருநாவுக்கரசர் தமிழகத்திலே வளர்த்துள்ள பண்பாட்டின் சின்னம் என்று நான் சொல்வேன்.

அவர் எந்தக் கட்சியிலே இருக்கிறார் என்பதல்ல; எந்தக் கட்சிக்காக வாதாடுகிறார், போராடுகிறார் என்பதல்ல; அவருடைய உள்ளம் தமிழ் உள்ளமாக இருக்கிறதா? தமிழர்களின் நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தைப் போற்றுகின்ற பண்பாடு கொண்ட உள்ளமாக இருக்கிறதா? என்பதை எண்ணும்போது, நான் நிச்சயமாகச் சொல்வேன், அடித்துச் சொல்வேன், ஆயிரம் முறை சொல்வேன், அவருக்கு வேண்டிய நண்பர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். இது அந்தக் கட்சியினரின் குறை அல்ல. திருநாவுக்கரசர் பெற்றுள்ள மன நிறை.

அந்த நிறையின் காரணமாகத்தான், அவர் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் நம்மவர் என்ற அந்த முறையில் அவரோடு நான் பழகுகிறேன். அவர் சென்ற ஆண்டு ஒரு கட்சியிலே இருக்கலாம், இந்த ஆண்டு இன்னொரு கட்சியிலே இருக்கலாம். எங்கிருந்தாலும் அவர் நம்முடையவர்தான் என்கின்ற அந்த எண்ணத்தோடு இன்றைக்கு தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டிலே உள்ள பெரியவர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை ஏற்றிப் புகழ்கிறார்கள். இது எல்லோருக்கும் கை வந்த கலை அல்ல. தமிழகத்தில் திருநாவுக்கரசர், ஒருவருக்கு மாத்திரம் கை வந்த கலை, இந்தக் கலை என்று சொன்னால், அதை யாரும் மறுக்க இயலாது.

அப்படிப்பட்ட ஒரு அருமைத் தம்பியின் இல்லத்தில் நடைபெறும் மண விழாவிற்கு நான் நேற்று இரவு முதல் என்னுடைய செயலாளரிடம் எத்தனை மணிக்கு திருமணத்திற்குப் போக வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தி வலியுறுத்திக் கேட்டபோதும், அவர் 9.30 மணிக்கு திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னார்.

நானும் அதை நம்பி, 10 மணிக்குப் போனால் போதும் என்பதற்காக, காலைப் பணிகளை எல்லாம் முடித்து விட்டுப் புறப்படும்போது, திருமணத்திற்கு நேரமாகி விட்டது, முதல் நாள் 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னவர்கள், நேரமாகி விட்டது என்று என்னை அவசரப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல், காலை உணவை மதிய உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணிக்கொண்டு, காலையிலே உணவு அருந்தாமலே இந்த மணவிழாவிலே வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

இதற்காக மண விழா முடிந்ததும் என்னை திருநாவுக்கரசர் வலியுறுத்தக் கூடாது, காலை உணவு அருந்தி விட்டுச் செல்லுங்கள் என்று கூறக்கூடாது. அதற்கு நான் வீட்டுக்குச் செல்வேன் என்ற உறுதியை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக இவ்வளவு நண்பர்களைப் பெற்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தமிழ்நாட்டிலே இருக்கிறார் என்றால், அதற்கு முதல் இடம், என்னுடைய தம்பி திருநாவுக்கரசருக்குத்தான் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களைப் பெறுவது சாதாரணமல்ல, உறவினர்களைப் பெற்று விடலாம். அண்ணன், தம்பிகளைப் பெற்று விடலாம். ஆனால் நண்பர்களைப் பெறுவது சாதாரண விஷயமல்ல. அப்படிப்பட்ட நண்பர்களை, அவரை நேசிக்கின்ற, உண்மையிலேயே நேசிக்கின்ற, துரோகம் செய்யாத, தூய்மையான நண்பர்களைப் பெற்றுள்ள, ஒரு மாபெரும் இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவராக, பண்பாட்டின் சின்னமாக, என்னுடைய தம்பி திருநாவுக்கரசர் விளங்குவது நான் மிக மிக மகிழ்ச்சியடையக் கூடிய ஒன்று.

அப்படிப்பட்டவர் இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழாவில் மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்ற அதே நேரத்தில் கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டுமென்பதற்காக “இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை” என்ற மொழிக்கேற்ப, இனிய நிழல் இல்லாமல் வருந்துகின்ற தன்னுடைய பெண் மானுக்கு, ஆண் மான் தன்னுடைய நிழலைக் கொடுத்து, அந்தக் கோடையின் வெப்பத்தைப் போக்கும் என்று பழைய தமிழ் நூல்களில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தன் நிழல் கொடுத்தளிக்கும் கலைபோல மணமகனும், அதற்கேற்ப மணமகளும் இல்லறத்தைத் தூய்மையாக என்றென்றும் இன்பமாக நடத்த வேண்டுமென்று அவர்களை வாழ்த்தி - இந்தக் குடும்பம் வேறு, நம்முடைய குடும்பம் வேறு என்று கருதாமல், எல்லா குடும்பமும் ஒன்றுதான், ஒரே குடும்பத்து மக்கள்தான், ஒரே இன மக்கள்தான், அதனால்தான் இந்தக் காமராஜர் அரங்கத்திலே இவ்வளவு பெரும் திரளாக நாம் கூடியிருக்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டி, என்னுடைய அருமைத் தம்பி திருநாவுக்கரசர் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மணமக்களையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15734:who-has-cut-ties-with-congress-karunanidhi&catid=12:politics&Itemid=105

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.