Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினர் பாதுகாப்பிலேயே லலித்தும் குகனும் உள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த லலித், குகன் ஆகிய இருவரும் பொலிஸாராலும் புலனாய்வுப் பிரிவினராலுமே கடத்தப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது படையினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன்'' 

என்று அந்த வழக்கின் 6 ஆவது சாட்சி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
 
லலித், குகன் ஆகிய இருவரும் காணாமற்போனமை தொடர்பில் 6 ஆவது சாட்சியான, முற்போக்கு சோசலி சக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ஜனபே குமாரகே யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
 
அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது; 
அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை யாழ். நகரில் ஒட்டிக்கொண்டிருந்த போது யாழ். பொலிஸார் எம்மைக் கைது செய்தனர். 
 
இந்தக் தொடர்பில் ஊடகங்களுக்கோ, கட்சிக்கோ கூறவேண்டாம் என்றும் விடுதலை செய்வதாகவும் பொலிஸார் கூறினர். மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எமக்கு எதிராக அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றில் 5 தடவைகள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கை பொலிஸாரே திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
 
மன்னாரிலும் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது நாம் கைது செய்யப்பட்டோம். மன்னார் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எம்மிடம் விசாரணை நடத்தினர். மன்னார் பக்கம் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். பின்னர் வீட்டுக்கும் சென்று பொலிஸார் அச்சுறுத்தியதோடு காணாமற்போகச் செய்யப்படுவீர்கள் என்றும் கூறியிருந்தனர். 
 
அழுத்தங்களால் யாழ். உடுப்பிட்டியில் உள்ள எமது அலுவலகத்தை மூடி விட்டு வவுனியாத் தாண்டிக்குளத்தில் அலுவலகம் திறந்தோம். அங்கு என்.பி.யு.எச். 8342 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை சந்திரதாஸ், நிசாந் என்று அறிமுகப்படுத்தி தாம் புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவித்தனர். லலித் பற்றி விசாரித்தனர். 
 
மீண்டும் ஒரு முறை புலனாய்வுப் பிரிவினர் வந்தனர். அவர்களில் ஒருவர் தனது அடையாள அட்டையைக் காட்டினார். அதில் அடையாள அட்டை இலக்கம் 889362662V என்று இருந்தது. அவர்களும் லலித், குகன் பற்றி விசாரித்தனர். 
 
கிளிநொச்சியில் சுவரொட்டிகளை ஒட்டியபோதும் லலித்தைக் கைது செய்து மறுநாள் விடுதலை செய்தனர். லலித், ஜயதிலக இருவரும் யாழ். நகரில் வைத்து தாக்கப்பட்டிருந்தனர். 
 
லலித் காணாமற்போனது தொடர்பில் நான் அறிந்தேன். அவர் காணாமற்போன அன்று இரவு 11.22 அளவில் லலித்தின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தேன் அங்கு குழப்பமான நிலை காணப்பட்டது. அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. 
நான் நினைக்கிறேன் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளருமே இவர்களைக் கடத்தி உள்ளனர்.
 
அவர்கள் தற்போது இராணுவத்தினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்று கருதுகிறேன். புலனாய்வாளர்களைக் கண்டால் அடையாளம் காட்டுவேன். என்றார்.
http://onlineuthayan.com/News_More.php?id=762762101913880535#sthash.2Bu6Ts3X.dpuf

 

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.