Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலாதிக்கச் செருக்கோடு மேற்கொள்ளப்படும் செயற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலாதிக்கச் செருக்கோடு மேற்கொள்ளப்படும் செயற்பாடு

திருகோணமலை மாவட்டம் மாவிலாறு எல்லைப் புறப் பிரதேசத்தில் இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக விரிவடையாது எனத் தாம் நம்புகின்றார் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் தெரிவித் திருக்கின்றார்

யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்க கண்காணிப்பாளர்கள் பார்த்திருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் முனைப் புடன் மும்முனை நகர்வுக்கான பெரும் இராணுவ நடவடிக் கையை விரிவான ஏற்பாடுகளோடு அரசுப் படைகள் முன் னெடுக்கின்றன. விடாது வான் வழித் தாக்குதல்கள் நடக் கின்றன. விமானக் குண்டு வீச்சுகளால் அப்பகுதி அதிர் கின்றது. ஷெல், பீரங்கிகள் முழங்கிக் கொண்டிருக்கின் றன.

யுத்த நிறுத்தத்தை மீறி மிகப் பெரும் இராணுவ நகர்வு ஒன்றைப் பகிரங்கமாக இலங்கை அரசு, புலிகளின் பிர தேசத்துக்குள் முன்னெடுக்கின்றது.

அதை வன்மையாகக் கண்டித்து, முழு யுத்தநிறுத்த மீறல் என்பதைப் பகிரங்கப்படுத்தி, இலங்கை அரசின் இரா ணுவ முனைப்பை சர்வதேசத்துக்கும் அம்பலப்படுத்த வேண்டிய கண்காணிப்புக் குழுத் தலைவர், இந்த இரா ணுவ நடவடிக்கை பெரும் யுத்தமாக விரிவடையாது எனத் தாம் நம்புகின்றார் என்று தமக்குத் தாமே கூறித் திருப் திப்பட்டுக் கொள்கின்றார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சிலர் மத்தியில் உரை யாடிய கண்காணிப்புக் குழுத் தலைவர், மாவிலாறு யுத்தத் துக்கு தண்ணீர்ப் பிரச்சினை மூல காரணமல்ல, அதன் பின்புலத்தில் வேறு நோக்கங்கள், திட்டங்கள் இருக்கின் றன என்றும் கூறியிருக்கின்றார். ஆனால், அந்த நோக்கங் கள், திட்டங்கள் எவையாக இருக்கும் என்பதனை அவர் கோடி காட்டவில்லை.

இந்த மோதல் முழு யுத்தமாக விரிவடையும் வாய்ப்புக் குறைவு என்று கூறுவதன் மூலம், கண்காணிப்புக் குழுத் தலைவர் அசாத்திய நம்பிக்கை ஒன்றை ஏற்படுத்த முயன் றாலும் யதார்த்தம் அதுவல்ல என்பதுதான் உண்மை.

யுத்தநிறுத்தத்தைக் கண்காணிக்கும் ஐந்து நாட்டுப் பிரதிநிதிகளில் சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் பணி இந்த மாத இறுதியோடு முடிவுக்கு வரவேண்டிய நிலைமை உறுதியாகிவிட்டது. சுவீடன் நாட்டவரான தற்போதைய யுத்தநிறுத்தக் கண் காணிப்புக் குழுத் தலைவரே மாத இறுதியுடன் மூடை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு பணியிலிருந்து வெளியேறுவது இப்போதே பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

அப்படி இம்மாத இறுதியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுப் பிரதிநிதிகள் இங்கிருந்து வெளி யேற தற்போதைய கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் அறுபதிலிருந்து இருபதாகக் குறைந்துவிடும். அது இப்போதைக்குத் தவிர்க்க முடியாதது.

தாராளமாகக் கண்காணிப்பாளர்கள் பணியில் இருக் கவே பார்த்திருக்கவே யுத்தநிறுத்த உடன்பாட்டுக்கு முரணான வகையில் ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் முறையில் பெரும் இராணுவப் படையெடுப்பு நகர்வை அரசுத் துருப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. அப்படியி ருக்கையில், யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றில் ஒன்றாகக் குறையும்போது நிலைமை எவ்வாறு அமையும் என்று கற்பனை பண்ணிப் பார்ப்பது அப்படி ஒன்றும் கஷ்டமானதல்ல.

மோசமடைந்து வரும் இலங்கை நிலைவரம் குறித்தும், மாவிலாறு நோக்கி இலங்கை அரசு ஆரம்பித்துள்ள படை நடவடிக்கைகளின் பெறுபேறு மற்றும் போக்குக் குறித்தும் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக் கின்றது என்றும் அறிய வருகின்றது.

பல்வேறு மேற்குலக நாடுகள் இது விடயத்தில் இலங்கை அரசின் பொறுப்பற்ற போக்குக் குறித்துத் தமது இராஜ தந்திர வட்டாரங்கள் மூலம் இலங்கை அரசுத் தலைமைக் குத் தமது அதிருப்தியைத் தெரியப்படுத்தியிருக்கின்றன என்றும் தெரிகின்றது.

மாவிலாறு இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டதன் பின்னான நிலைவரம் குறித்து இந்திய அரசுத் தலைமையின் பிரதிநிதிகள் நேற்று புதுடில்லியில் கூடி ஆராயவிருந்தனர்.

இராணுவ முனைப்போடு விடயங்களைக் கையாள முயலும் இலங்கை அரசுத் தலைமை, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ அடக்குமுறை வாயிலான தீர்வைத் திணிப்பதையே தனது உள்ளார்ந்த திட்டமாகக் கொண்டிருக்கின்றது. மாவிலாறில் புலிகளுக்கு எதிராக வலிந்து தாக்குதல் ஒன்றை நடத்தும் அரசின் உள்நோக்கம் அதையே வெளிப்படுத்துகின்றது; தெளிவுபடுத்துகின்றது.

இத்தகைய இலக்கும், நாசகாரத் திட்டமும் கொண்டு இலங்கை அரசுத் தரப்பு இயங்கும்போது, மாவிலாறுச் சமர் முழு யுத்தமாக வெடிக்க வாய்ப்பில்லை என்று யுத்த நிறுத் தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் கூறுவதை நம்பி யிருக்க முடியாது.

அவர் கூறுவது போல, தண்ணீர் பெறுவதை உறுதிப் படுத்துவதற்கான சண்டை அல்ல இது. தனது மேலா திக்கத்தைத் தமிழர் தரப்புக்கு உறைப்பாய் உணர்த்தும் எண்ணத்தோடு தென்னிலங்கையின் புதிய அரசுத் தலைமை தீட்டிய திட்டத்தின் ஓர் அங்கமே இந்த நடவடிக்கை என்றே இதைக் கருத வேண்டியுள்ளது.

மாவிலாறு தண்ணீ“ப் பிரச்சினையை மட்டுமல்ல, தமி ழரின் தேசிய இனப்பிரச்சினையையும் கூடத் தீர்ப்பதில் இதே போக்கைத்தான் செல்நெறியைத்தான் காலங்கால மாகக் கைக்கொண்டு வருகின்றன தென்னிலங்கை அரசு கள். சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண் டிய விவகாரங்களைத் தமது அதிகார மமதையில், செருக்கோடு கையாண்டு, பல வந்தத்தைப் பிரயோகித்து, முழு நாட்டையுமே குட்டிச் சுவராக்கிய சிங்கள அரசுகளுக்கு எந்த வகையிலும் தான் சளைத்தது அல்ல என்பதை இந்த அரசும் இந்தச் செயற் பாடுகள் மூலம் நிரூபிக்கின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.