Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம்

கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகப் பொறுப்பெடுத்திருக்கிறார். மிக உயிராபத்தான கட்டத்தில் இருந்து தப்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அடுத்த கட்டமாக அவர் கடமையைப் பொறுப்பெடுத்துள்ளார்.

இராணுவத் தளபதியாக மீளவும் பொறுப்பெடுத்த நிலையில் தமிழர் தாயகம் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சரத் பொன்சேகா தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்களப் படைகளிடையே ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்களைக் களையும் நோக்கில் தான் மீளவும் சரத் பொன்சேகா அவசர அவசரமாக படைத் தளபதியாகக் கடமையை ஏற்க வைத்ததாகத் தெரிய வருகின்றது.

குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் கடமைக்குத் திரும்பினாலும் அவர் பழைய பொன்சேகாவாக இல்லை என இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை தமிழ் மக்கள் மீதான படுகொலை மற்றும் வன்முறைகளை இன்னும் கட்டவிழ்த்து விட்டு தமிழினத்தை அழிப்பதற்கான முயற்சிகளை அதிகப்படுத்தலாம் எனக் கருதப்படுகின்றது.

அண்மை நாட்களில் மாவிலாறு மீது படை நகர்வை மேற்கொண்டு அணைக்கட்டைத் திறந்து விடுவதற்குரிய முயற்சியில் படைத் தரப்பை ஈடுபடுத்துவதற்கு இராணுவத் தளபதியே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி தமிழர் தாயகப் பகுதி மீது நடத்தப்படும் வான் வழித் தாக்குதலுக்குப் பொன்சேகா தான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் அண்மையில் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியை அவதானிக்கின்ற போது இன்னும் விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை முழு அளவில் அறியாதவராக பொன்சேகா இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது கவலைக்குரியது. அதாவது விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை ஏழாயிரம் பேர் எனவும், அதில் கடும் போராளிகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் பேர் எனவும் பொன்சேகா மிகச் சுலபமாகக் கூறியிருக்கிறார்.

அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழர் தாயகம் மீது போரைத் தொடுத்த போது ஒரு சிகரட் ஊதி முடிவடைவதற்கு இடையில் விடுதலைப்புலிகளை ஒழித்து விடலாம் என கற்பனையில் இந்தியப் படை அதிகாரிகள் மிதந்தனர்.

ஆனால் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது என்பதை இந்திய இராணுவம் உணருகின்றளவிற்கு விடுதலைப்புலிகளின் தாக்குதல் திறன் இருந்தது. உலகின் வல்லரசுகளில் ஒன்றான இந்தியப் படையினருடன் கூட போரிட்டு தமது ஆற்றலை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். இதே சமயம் போர் காலச்சூழலில் சிறிலங்காவின் படைத் தளபதிகளாக இருந்தவர்கள் படைத்துறை அமைச்சுப் பொறுப்புக்களை வகுத்தவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளுடன் சுலபமாகப் போரிட்டு வெற்றி பெறலாம் என்ற தப்புக் கணக்குப் போட்டு இறுதியில் மூக்குடைந்து போனது தான் வரலாறு காட்டும் உண்மை.

இந்த நிலையில் தற்போது சரத் பொன்சேகா அந்த பட்டியலில் அடங்கி நிற்கின்றார். ஆனால், தமிழ் மக்கள் மீதான வன்முகைளை, கெடுபிடிகளை, வான்தாக்குதல்களை சிறிலங்கா தேசம் தமிழர் தாயகம் மீது தீவிரப்படுத்தலாம். ஆனால் விடுதலைப்புலிகளை போர் மூலம் வெல்லலாம், விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பிரதேசத்தை கைப்பற்றலாம், அல்லது உள்நுழையலாம் என சிங்கள தேசம் அல்லது சிங்களப் படைகள் கருதுமாக இருந்தால் அது ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.

ஏனெனில் அவ்வா றான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு பதிலடி கொடுக்க தமிழர் தாயகம் தயாராகவே இருக்கின்றது. எனவே, சரத் பொன்சேகா வெற்றி பெறலாம் என கருதுவாராக இருந்தால் அவரது அராஜகத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் அது இருக்கும்.

-மட்டக்களப்பு ஈழனாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.