Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்தம் இனி சாத்தியமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் இனி சாத்தியமில்லை

நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நாளை இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. போன்றதொரு நிலையில் இருதரப்புக்கு மிடையில் உக்கிர மோதல் வெடித்திருக்கும் நிலையில் நோர்வே சிறப்புத் தூதுவரின் வரவுகள் எந்தளவு திருப்பத்தை கொண்டு வரப் போகின்றது என்பது கேள்விக்குறி.

ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அது மெல்ல மெல்ல சாகடிப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசும் பேரினவாத சக்திகளும் மேற்கொண்டன.அதே வேளை சமாதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே மீதும் சிறிலங்கா அரச தரப்பிலிருந்தும் இனவாத சக்திகளிடமிருந்தும் வெறுப்புணர்வுடனான கருத்துக்களே வெளி வந்தன. நாட்டை விட்டு நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்ற தொனிப்பட பல்வேறு கருத்துக்கள் கண்டனப் பேரணிகள் என்பனவும் இடம் பெற்றன.

இந்த நிலையில் தென்னிலங்கையின் வெறுப்பை இன்னும் சம்பாதிக்கக் கூடாது என்ற கருத்தடிப்படையில் தான் நோர்வே ஒரு மௌனப் போக்கை கடைப்பிடித்திருந்தாலும் சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வே போர் நிறுத்தத்துக்கு எதிராக செயற்படும் சிறிலங்கா பேரினவாதச் சம்பவங்களை அந்தந்த இடங்களில் கண்டிப்பதுடன் சர்வதேசத்துக்கு உடனடியாக வெளிக் கொணர்ந்திருந்தால் சிறிலங்கா அரசின் முகத்தி ரையை கிழித்தெறிந்திருக்க முடியும்.

ஆனால் நோர்வேயின் மௌனப் போக்கு போர் நிறுத்த உடன்படிக்கையை சிங்கள பேரினவாத சக்திகள் சீர்குலைப்பதற்கு வாய்ப்பாக இருந்து விட்டது.

போர் நிறுத்த உடன்படிக்கை என்பது சர்வதேச சமூகத்தின் அவதானிப்பு. மற்றும் விருப்புடன் கைச்சாத்திடப்பட்டதாகும். இதற்கான அனுசரணையை வழங்கும் நோர்வேயை அமெரிக்கா தொடக்கம் ஒட்டு மொத்த நாடுகளும் ஏற்றுக் கொண்ட விடயம். எந்த ஒரு நாடும் நோர்வேயின் அனுசரணைப் பணிகுறித்து விமர்சனம் செய்யவில்லை.

இந்த நிலையில் சமாதான ஏற்பாட்டாளராக களமிறங்கிய நோர்வே சிறிலங்கா அரசு பயங்கரவாத செயல்களை நிறுத்தி போர் நிறுத்த உட ன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கான சூழலையும் உருவா க்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் நோர்வே செயற்பட வில்லை. ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவு, போர் நிறுத்த உடன்படிக் கையை முழுமையாக அமுல்படுத்துதல், ஜெனீவாப் பேச்சுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் இரண்டாம் சுற்று ஜெனீவாப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் பங்குபற்றுவதற்கான போக்குவரத்து வசதி யை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களில் நோர்வே தகுந்த மு றையில் செயற்பட்டிருக்கலாம். செயற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான சூழலை முழுமையாக புறக்கணித்து யுத்த சூழலை சிறிலங்கா அரசு மேற்கொண்ட போது சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை சர்வதேச சமூகத்தின் மத்தியில் வெளிக் கொணர்ந்திருக்க வேண்டிய பொறுப்பு நோர்வேக்குள்ளது.

ஆனால் இன்று தமிழர் தாயகம் மீது சிங்கள தேசம் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மட்டுமன்றி மாவிலாறு அணைக் கட்டை மனிதாபிமான ரீதியாக கையாளப் போவதாகக் கூறி விடுதலைப் புலிகள் மீது திணித்த யுத்தத்திற்கு விடுதலைப்புலிகள் தகுந்த பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

திருமலை மாவட்டத்தில் முழுவளவிலான யுத்த நிலைமை நிலவுகின்றது. முப்படைகளுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளன. போர் நிறுத்தம் நடை முறையில் இருக்கின்றதா என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும். கடற் சமர்களும் தரைச் சமர்களும் தொடர்கதையாகிச் செல்லு கின்ற நிலையில் நோர்வே சிறப்புத் தூதுவர் நாளை இலங்கை வரவிருக் கின்றார்.

இனி போர் நிறுத்தம் பற்றி எந்தளவிற்கு பேசியும் சுமூக நிலை யை உருவாக்குவது என்பது கடினமானதாகத் தான் தெரிகின்றது. ஏன் எனில் திருமலை கள நிலவரங்கள் தமிழினத்தின் வீரத்தை சர்வதேசத் துக்கு வெளிப்படுத்தியுள்ள நிலையில் இனி போர் நிறுத்தம் என்பது சாத் தியமில்லை.

-மட்டக்களப்பு ஈழனாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.