Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1300 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பாடல்கள் போற்றிய கேதார்நாத் எனும் திருக்கேதாரம்!

Featured Replies

உருக்குலைந்து கிடைக்கிறது உத்தர்நாத்.. இனி 3 ஆண்டுகளுக்கு நான்குபடை வீடு யாத்திரை அல்லது சார் தாம் யாத்திரை என்ற இமயமலை யாத்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.. குறிப்பாக பல கிலோ மீட்டர் மிக அபாயகரமான பாதையில் பயணித்தாலும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற கேதார்நாத் திருக்கோயிலை மீண்டும் பழைய நிலையில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி... உத்தர்காண்ட்டில் இமயமலை யாத்திரை சென்றோரில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவரும் அடக்கம்..குறிப்பாக இவர்களில் பலரும் கேதார்நாத் செல்லும் வழியில் சிக்கியவர்கள்...தமிழகத்துக்கும் கேதார்நாத்துக்கும் இன்று நேற்றைய உறவு அல்ல.. 1300 ஆண்டுகளுக்கு முந்தைய உறவு... அப்பரும் சுந்தரரும் திருஞானசம்பந்தரும் அருளித் தொகுத்தவை தேவாரப் பாடல்கள்.. இதில் மொத்தம் 122 திருத்தலங்கள் பற்றி பாடப்பட்டிருக்கின்றன. இந்த 122 திருத்தலத்தில் இப்போது உருக்குலைந்து போன கேதார்நாத்தும் அடக்கம். திருக்கேதாரம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுபவை அனைத்துமே கேதார்நாத்தையே..

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/24/tamilnadu-kedaranath-glorified-the-tamil-tevaram-177752.html

24-1372054752-thevaaram-600.jpg

கேதார்நாத் பதிகம் கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர் என்றே தமிழ் ஆன்மீகம் கேதார்நாத் சிவனை வழிபடுகிறது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன.

24-1372054777-keadrnath-55-600.jpg

முதலாவது பாடல் வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும் கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே

24-1372054851-keadrnath11-600.jpg

2-வது பாடல் பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

24-1372054984-keadrnath123-600.jpg

வடதிசை கேதாரம் தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறி லன்றே குளியீருளங் குருக் கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீர் உளஞ் சீபர்ப்பதம் தெற்குவடக் காகக் கிளிவாழைஒண் கனிகீறியுண் கேதாரமெ னீரே இப்படி ஏராளமான பாடல்கள் கேதாரம், பற்றி பேசுகின்றன. கேதார்நாத் கோயில் தேவாரப் பாடல் 

http://tamil.oneindia.in/news/2013/06/24/tamilnadu-kedaranath-glorified-the-tamil-tevaram-177752.html#slidemore-slideshow-1

வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள, வரிக்கெண்டை பாய சுனை நீல மொட்டலரும் கேதாரமே!

 

அங்கே எங்கேயையா வரிக்கெண்டை பாய்கிறது? கெண்டை கடல் மீன் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் thatstamil.com தளத்தில் மூலக் கட்டுரையினைப் பார்த்தேன்.

 

கேதாரனாதர் குறித்து சொல்லிக் கொண்டே வந்த கட்டுரையாளர், இறுதியில், பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம்,

திருக்கோணேஸ்வரம் ஆகிய ஈழத் தலங்களை, வட இந்திய கேதாரனாதர் தலத்துடன் குழப்பியது போல் பட்டது.

 

யாரோ போட்ட கீழே உள்ள பின் ஊட்டத்தில், திருத்தி விட்டார்கள்.

 

 

யோவ் அரவேக்காடு.... திருக்கேதாரம் வேற திருக்கேதீச்சரம் வேற. திருக்கேதீச்சரம் இலங்கையில் மன்னாருக்கு அருகில் மாதோட்டம் என்றழைக்கப்பட்ட இடத்தினருகே இன்றும் இருக்கிறது. கன்பீஸ் பணிக்காதே!

இலங்கையின் பஞ்சஸ்வரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரானவை என்று சந்தேகிக்கப்படுகிறது. ஈழத்மிழர் சித்து வெளியின் சிவனையும், தமிழ் நாட்வர் முருகனையும் பிரதான தெய்வங்களாக கொண்டிருந்தார்கள் போலிருக்கு. அதுவே 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கதிர்காமம், நாக தீபம் வரமுதல் தேவேந்திர முனையில் சிவன் கோவில் இருந்தது. சிதம்பரம் போன்ற தமிழ் நாட்டுச் சிவன் கோவில்களுக்கு 2,500 வருடம் போடுவதே கஸ்டம். ஆனால் அங்கே உள்ள முருகன் கோவில்கள் ஆண்டுகள் போட முடியாத பழமையானவை.

 

கேதீஸ்வரம், தமிழரின் பழைய பண்பாடான தாம் குடியேறும் நகரங்களுக்கு குடி பெயர்ந்து வந்த தாய் நகரப் பெயரை வைப்பது இந்த இரண்டு நகரங்களிலும் காணப்படுகிறது. இது நான் நினைப்பது போல் தமிழர் வடக்கிலிருந்து தேற்கெ வந்த சரித்திரத்தையும, கூறலாம். எதிர்க்கருத்தான, தெற்கிலிருந்து வடக்குக்கு போன சரித்திரத்தையும் கூறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.