Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் இனி பயிற்சிகள் இல்லை; புதுடில்லிக்கு கொழும்பு அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாதுகாப்புப் படையினரைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான விடயத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
 
இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச்  செல்லும் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக இலங்கை அரசு கருதுவதாகத் தெரிகிறது.
 
இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை அரசு உத்தேசித்திருப்பதாக அறியமுடிகின்றது.
 
இந்தியாவில் வெலிங்ரனில் பாதுகாப்புச் சேவைகள் உத்தியோகத்தர் பயிற்சிநெறியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை வேறு பயிற்சி நிறுவனத்துக்கு மாற்ற இந்தியா கேட்டபோதும் அந்தக் கோரிக்கையை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை நேற்றுக் கூறியுள்ளது.
 
தமிழ் நாட்டில் தமக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக் காரணமாக இந்த இரண்டு அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்யாமல் இலங்கைக்குத் திரும்பினர்.
 
பாதுகாப்பு காரணமாக இந்த இரண்டு இலங்கை அதிகாரிகளையும் ஆந்திர பிரதேசத்திலுள்ள உயர் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றுக்கு மாற்றுவதற்கு இந்தியா கோரிக்கையொன்றை முன்வைத்தபோதும் அதனை இலங்கை மறுத்துள்ளது.
 
இந்த இரண்டு அதிகாரிகளையும் இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பியிருந்த நோக்கத்தைப் புதிய பயிற்சி நிறைவேற்றாது என்பதனால் இந்தியாவின் முன்மொழிவை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இந்த இரண்டு அதிகாரிகளையும் மீளப்பெற்றமை இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளிடையேயான பயிற்சி ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் பாதகமாகாது என்றும் அவர் கூறினார்.

எத்தனை தரம் அதிர அதிர அடித்தாலும் சுரணை இல்லாவிட்டால் எதுவும் அதிரடியாகாது.

 

750 மேற்பட்ட மீனவர்கள் இராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதடற்விக்காத போர் நடவடிக்கை. இலங்கை மீது இந்தியா இராணுவத்தை அனுப்பியிருக்க வேண்டும். இத்தாலிய காவலாளிகள் கேரள மீனவரை கொன்றதற்கே  இந்திய அரசு பெரிய நடவடிக்கை எடுத்தது. எவ்வளவுதான் இந்திய அரசு நடித்தாலும், அது சந்தர்ப்ப சூழ்நிலையால் நடை பேற்ற ஆள்மாற்றாட்டக்கொலை. இதற்கு இந்தியா நட்ட ஈடுமட்டும்தான் இத்தாலியிடமிருந்து அறவிட முடியும். ஆனால் அந்த காவலாளிகளை பிடித்து இந்தியா போர்குற்றவிசாரணை அளவுக்கு ஊதிப்பெருப்பிக்க முயல்கிறது.

 

இலங்கை அடித்தால் அது அதிரடியாகாது. அது இந்திய புவிசார் பாதுகாப்பு கொளகையின் கீழ், பாகிஸ்தான் மாதிரி ஆபத்தான இலங்கையுடன் மிண்டுவது இந்தியாவுக்கு ஆபத்தான விடையம். ஆதாலால் இலங்கை சுட்டால் என்ன, அதிர அடித்தால் என்ன, இந்திய ராஜதந்திரம் அதை பொறுத்துக்கொள்ளும். இன்னொரு தமிழ்நாட்டில் தடவை இரகசியமாக பயிற்சி வழங்கப்படும்( அல்லது ஏற்கனவே தமிழ் நாட்டு இன்னொரு முகாமில் வழங்கப்படுகிறதா என்பதை யார் அறிவார்?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.