Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் கட்சியிலிருந்து விலகிக்கொள்ள முடியும்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறுப்பட்ட கருத்துக்களைவெளியிட்டு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. இதேவேளை தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டடுள்ளனர்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும் என்ற போதிலும், ஆளும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு அனைவரும் இணங்க வேண்டும்.

கடந்த தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அனைவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக எவரும் செயற்பட முடியாது அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=5531

மகிந்தருக்கு ஆப்பிருக்கு!

 

 

 

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!
by Editor on 27th-June-2013
 

Mahinda_Warning.jpg

அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக எச்சரித்துள்ளார்.

குறிப்பாக ஆளும் கட்சிக்குள் இருக்க முடியாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் என அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் விவகாரத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக, அரசதரப்பிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அமைச்சர்களும், ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று அலரிமாளிகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு அவசரமாக கூடியது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்தில் எவரும் குழப்பத்தை உருவாக்க முனைய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்திருக்க யாருக்கேனும் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் விலகிப் போகலாம் என்று மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கருத்துகள் உள்ளதாகவும், ஆனாலும், அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் தமது தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்றும் மகிந்த உத்தரவிட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

13ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆளும் கட்சியிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் அண்மையில் தனியான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதனாலேயே ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளதாக கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamilworldtoday.com/archives/19219

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.

ஆளும் கட்சிக்குள் சந்திரிக்காவின் கை ஓங்கியுள்ளது! பொதுபல சேனா
by Editor on 27th-June-2013
 

Chandrika.jpg

அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்‌ஷவை விட சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு ஆளுமை அதிகமாக இருப்பதாகவே தென்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

நாட்டின் இறையாண்மைக் காப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், சந்திரிக்காவிற்குப் பயந்துகொண்டு சில விடயங்களுக்குப் பின்நிற்பதாகவும், இதற்காக மகிந்த ராஜபக்‌ஷ வெட்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

”மாகாண சபை முறைமையை ஒழிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு” என்ற அமைப்பினால் பௌத்த சம்மேளனத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

”இன்று ராஜித்த, வாசு, ஜீ.எல் ஆகியோர் சந்திரிக்காவை இரகசியமாக சந்திக்கின்றனர். அத்துடன் மகிந்த ராஜபக்‌ஷவிடம் சென்று வேறு கதை பேசுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/archives/19269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.