Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விமானத்தின் கதவை திறக்கும் அளவுக்கு நான் எருமை மாடு கிடையாது "

Featured Replies

நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்தேன் - ரம்மித் ரம்புக்வெல்ல

Ramith1_CI.jpg

 

நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்ததாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

35000 அடி உயரத்தில் நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்ததாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், நித்திரையில் நடக்கும் நோய் காரணமாக இவ்வாறு விமானக் கதவினை திறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் அருந்திய காரணத்தினால் விமானக் கதவினை திறந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நித்திரை விழித்திருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட களைப்பினால் விமானப் பணத்தின் போது நித்திரை கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடு வானில் விமானத்தின் கதவினை திறக்கும் அளவிற்கு தாம் முட்டாள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது உடலில் அல்கஹோல் சேர்ந்திருந்தால் மருத்துவ அறிக்கையில் வெளிப்பட்டு விடும் எனவும் குற்றம் சுமத்துவோர் மருத்து அறிக்கை வெளியாகும் வரையில் காத்திருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தின் கதவை திறக்கும் அளவுக்கு நான் எருமை மாடு கிடையாது.
 
சிறுபராயத்தில் இருந்து, தூக்கத்தில் எழுந்து நடக்கும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும் தூக்க மயக்கத்தில் எழுந்து தான் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்;ததாகவும் மதுபோதையில் தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும்  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
ஏன் இந்த பிரச்சினை குறித்து என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை நான் பின்னரே அறிந்து கொண்டேன். சம்பவத்திற்கு முதல் நாள் நாங்கள் சரியாக நித்திரை கொள்ளவில்லை.  அத்துடன் விமானத்தின் கதவை திறக்கும் அளவுக்கு நான் எருமை மாடு கிடையாது. என் உடலில் மதுசாரம் இருக்கின்றதா இல்லை என்பதை பரிசோதனைகளின் பின்னர் அறிந்து கொள்ள முடியும்.
 
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையின் அமைச்சர் ஒருவரின் புதல்வர் என்பது பெரிய பொருட்டல்ல.  நான் மது அருந்தியிருந்தால், இன்னும் நான் அங்கேயே இருந்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய விமான சேவை ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 

 

விமானத்தின் கதவை திறக்கும் அளவுக்கு நான் எருமை மாடு- ரம்மித் ரம்புக்வெல்ல

எருமை மாடு கதவை திறந்திருக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றம்புகலையின் மகன் என்பதால் உண்மை இந்த அளவிலேயே திரிக்கப்பட்டிருக்கின்றது இல்லாமல் றம்புகலையாகவே இருந்திருந்தால்; "விமானப்பணியினருக்கு தூங்காமலே கனவுகாணும் பழக்கம் இருக்கின்றது. எனவே இந்தக் குற்றச்சாட்டு அவர்கள் கனவே அன்றி நிஜம் அல்ல"  என்ற வகையாக கதை மாற்றப்பட்டிருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனுக்கு தப்பாம பிறந்தபயல்.....ஆனால் ..இந்த மூளை  எல்லாம் பக்ஸ பரம்பரையுடையது....அப்ப இரண்டு ரத்தமும்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனையை எப்போது செய்யலாம்?? விமானம் தரையிறங்கியவுடன்.. அப்போது மதுசாரமும் கீழிறங்கியிருக்கும்.. பலே ஐடியா.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-02(14).jpg

பரிசோதனையை எப்போது செய்யலாம்?? விமானம் தரையிறங்கியவுடன்.. அப்போது மதுசாரமும் கீழிறங்கியிருக்கும்.. பலே ஐடியா.. :icon_idea:

விமானப்பயணிகளை மதுப் போதை பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது. அதற்கு, குறைந்த பட்சம், அந்த விமானக்கம்பனி அவர் மீது சில குற்ற்ச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். அவர் ப்யணத்தால் இறங்கிய இடத்தில் பொலிஸ்கூட பிரசன்னமாக இருக்கவில்லை.  விமான கம்பனி தனது அறிக்கையில் மது பற்றி எதையாவது குறிப்பிடுவது .01% சந்தர்ப்பம் மட்டுமே.  ஏன் எனில் பரிசோதனை ஒன்று நடக்காத இடத்து, அது அவர்களின் அப்பிப்பிராயமாக முடிந்து, அவர்கள் மீது வழக்கு தொடரமுடியும்.  அவர்கள் வேறு ஏதாவது நிரூபணம் இருந்தால் அதை குறிப்பிடலாம்.

இது சம்பந்தமான சர்வதேச சட்டங்கள் பற்றிய ஆலோசனைகளை ரம்புகவெலவுக்கு எயர் லங்கா ஏற்கனவே வழங்கியிருக்கும். அவர் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மல்லை.. பரிசோதனை அறிக்கை பற்றி ஜூனியர் ரம்புக்வெல சொன்னதால் அப்படிச் சொன்னன்.. பரிசோதனைக் கதையே முழுப்பொய் என்பது தெளிவாகுது..

ramith-rambukwella.jpg

தூக்கத்தில் நடந்து சென்றே விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாக, அரமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் இலங்கை ஏ பிரிவு கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரருமான ரமித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20483

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.