Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முஸ்லிம்களுக்கு முழு அளவில் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முஸ்லிம்களுக்கு முழு அளவில் உதவி

[வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 19:55 ஈழம்] [காவலூர் கவிதன்]

திருகோணமலை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அகதிகளுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நிவாரண உதவிகளையும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திருகோணமலை கிளை வழங்கி வருகின்றது.

பல மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த அகதிகளைப் பராமரிக்க, சிறிலங்கா அரசின் பாரபட்சமற்ற உதவியையும், புனர்வாழ்வுக்கழகம் கோரியுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கும் இதுபோன்ற கோரிக்கைகளை விடுத்துள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மிடம் உள்ள அனைத்து சேமிப்புக்களையும் பயன்படுத்தி போதிய உதவிகளை வழங்கி வருகிறது.

மேலுமம் பல ஆயிரம் அகதிகள் வந்த வண்ணமுள்ளதால் திருகோணமலை மாவட்டத்தில் தஞ்சமடையும் அகதிகளைப் பராமரிக்க உதவுமாறு உத்தியோகபூர்வமாக புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க முன்வருமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கோரியுள்ளது.

இதற்கிடையில், கிண்ணியா முஸ்லிம் சபை தலைமையிடமிருந்து, தங்களது மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் கிடைத்து வரும் உதவிகளுக்கு நன்றி கூறப்பட்டிருக்கும் அதேவேளை, தொடர்ந்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவிகள் தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அழிவில் பாதிக்கப்பட்ட போது, கிண்ணியா மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முழு அளவில் உதவியது போன்று, இந்த இக்கட்டான காலத்திலும் உதவும்படி முஸ்லிம் சபையில் கோரியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், மூதூர், கிளிவெட்டி, மெங்காமம், கங்கவெளி, சம்பூர், சேனையூர், கட்டைப்பறிச்சான், கடற்கரைச்சேனை போன்ற பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் தற்போது தங்கியுள்ள தற்காலிக குடியிருப்பு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கூறிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், பின்வரும் நிலையங்களில் தங்கியுள்ளனர் என்று புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது:

தற்காலிக இடம் குடும்பங்களின் தொகை

ஆலயம், கோயில், பாடசாலைகள் 6,000

பாட்டாளிபுரம் 529

நல்லூர் 275

புன்னையடி பாடசாலை 1,800

வெருகல் 825

கல்லடி 311

முகத்துவாராறு 410

மொத்தக் குடும்பங்கள் 10,150

இந்த இக்கட்டான காலகட்டத்தில், சர்வதேசமெங்கும் வாழும் மக்களும், மனிதாபிமான அமைப்புக்களும் உடனடி உதவிகளை வழங்குமாறு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.eelampage.com/?cn=27989

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.