Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ல் கைவைப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை யாழில் இந்திய தூதுரக அதிகாரி வி.மகாலிங்கம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தச்சட்டத்தில் கைவைப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை. தேவையாயின் 13 பிளஸோ அல்லது 13 டபிள் பிளஸோ தான் இனி சாத்தியம். இந்திய அரசின் தற்போதய நிலைப்பாடு அதுவே என இலங்கைக்கான இந்திய துணைதூதுவராலய கொன்சிலர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வாசு தேவநாணயக்காரவின் செயலாளர் கலாநிதி மோகனினால் எழுதப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான  நூலினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

 

அங்கு கலந்த கொண்டு சிறப்புரையாற்றிய  அவர், அண்மைய இரு நிகழ்வுகள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார். ஓன்று பஸில் ராஜபக்ஸவினது இந்திய விஜயம். இரண்டாவதுஇந்திய தேசிய பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் மேனனினது இலங்கை விஜயம். இவற்றின் போது 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது. இதனால் அதில் கைவைப்பது சாத்தியமற்றது என  அவர் தெரிவித்தார். 

 
  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனா மாகாலிங்கம் மீது கை வைக்கப்போகுது.......:D

சோனியாவை மகிந்தா திருத்தி எடுத்தாலும் மகாலிங்கத்தை குத்தியள் கூட்டத்தால் திருத்தமுடியவில்லை.  6 மாதததிற்கு முதல், ஆத்தாமல் அதுகின்றை வீட்டுக்குள் கூட உள்ளட்டும் பார்த்திட்டாங்கள். 

 

திருந்தினால்த்தானே.

 

 

ஒரு துணை தூதுவரால் யாழ்பாணத்தில் இப்படி பேச முடிந்ததற்கு  காரணம் ,

இந்தியாவின்  அனுமதி இன்றி சிறி லங்கா தனது விருப்பத்திற்கு எதையும் செய்துவிட முடியாது என்பதுதான் .

இந்தியா என்ற தேசம் தமிழனை விட சிங்களவனுக்கே புண்ணில புளியை விடும் நாடு. அது எமக்கு விளங்காமல் போனது தான் தமிழனின் சாபக்கேடு .

மகாலிங்கம் தன்னும் ஒரு நாள் திருந்தும் (திரும்பி கேரளா போனால்). ஆனால் புலம் பெயர் நாடுகளில் உல்லாச வாழ்க்கை நடத்திக்கொண்டு Hobbyக்கு அரசியல் எழுதுவதற்கு திருந்த வேண்டிய தேவை வருமா?....

 

சிங்களவனுக்கு எதிராக இந்தியா திரும்பிவிட்டதாக எழுதி தான் "U" Turn  அடிக்கிறார் அரிச்சுன். நாளைக்கு என்ன எழுதுவாரோ?

 

கோமாளிதனமாக பேசியிருக்கிறார் மகாலிங்கம். ஆனால் இலங்கை அரசு இந்திய தூதுவரை அழைத்து மகாலிங்கம் திருந்தாவிட்டால் மகாலிங்கத்தின் வீசாவை ரத்து செய்வோம் என்று ஏற்கனவே கூறியிருக்கும்.

 

மகாலிங்கம் இந்தியாவின் நிலைப்பாட்டை கூறுகிறாராயின் இதுவரையில் 13ம் திருத்தத்திற்கு நடந்ததிற்கு இந்தியா என்ன பண்ணியது? போர் முடிந்த பின்னர் பீரிசு டெல்கியில் வைத்து கொடுத்த இணை அறிக்கையில் பீரிசுக்கு பங்கில்லை என்று இலங்கை மறுத்தவுடன், எந்த நிலைப்பாட்டை பற்றி கிருஸ்ணா பேசும் போது "இலங்கை கொடுப்பதை மட்டும்தான் தமிழர் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்?

 

புளியை கரைச்சு, கச்சதீவை கொடுத்ததுதான்;  மன்மோகன் சிங்கின்  கச்சையும் கூட போட்டு. ஆனல் இந்தியாவுக்கு இந்த பேச்சுவார்த்தைகளால் Sour Mouth தான் மிச்சம். வெக்கம் கெட்ட முட்டாள்கள் "சிங்கார" மேனனை அனுப்பும் போது திட்டத்துடன் அனுப்பியிருந்தால் மகிந்த "13ம் திருத்தத்தை மாற்றுவது தவிர்க்க முடியாது" என்றவுடன் அதற்கான பதிலையும் கூறிவிட்டு போக முடியவில்லை? துணிச்சலாக அதன் பலனை இ்லங்கை சந்திக்க வேண்டிவரும் என்று ஒரு அறிக்கை வெளிவிட வக்கில்லை.

 

ஆனால் இலங்கை அப்படி அல்ல! உதாரணத்திற்கு:ஐ.நா பிரேணையை இந்தியா ஆதாரித்தவுடன் மகிந்தா எடுத்த நடவடிக்கைகளால், உடனே மன்மோகன் சிங், பகிரங்கமாக தெரிய வரத்தக்கதான மன்னிப்பு கடிதம் எழுதினார்.

 

2011ல் மன்மோகன் சிங் என்ன  பேசினர்?
 

 

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87362&p=667528

 

இரண்டு வருடங்களின் பின்னரும் சும்மா வந்து போயிருக்கிறார்கள்.

 

சிதம்பரத்தின் முதலீடுகள் மட்டும்தான் இலங்கையில் கையில் என்று நடிக்கிறார்கள். அது வெறும் நடிப்பென்பது எல்லோருக்கும் தெரியும். முசோலினி அம்மா வரைக்கும் நன்றாகத்தான் இலங்கையில் மாட்டியிருக்கிறார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.