Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடை அணிந்து வாழும் மானமுள்ளவரா வீரவன்ச?: மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். முதலில் இலங்கை பற்றிய விசாரணைக்குழுவை ஐநா சபை  கலைக்க வேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால் ஐநா செயலாளர் நாயகம் பான்கி மூன் இந்த கோமாளியை கணக்கில்கூட எடுக்கவில்லை. இவரும் உண்ணாவிரதத்தில் சாகவில்லை. பிறகு போலிஸ், காணி அதிகாரங்களை அகற்றாமல் வடக்கில் தேர்தலுக்கு அரசு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அரசில் இருந்து அகன்று விடுவேன் என்று சொன்னார். சிவசங்கர் மேனன் வந்து, சொல்ல வேண்டியதை சொன்னவுடன் அரசு தலை வணங்கி, 13ஆம் திருத்தத்தில் கை வைக்காமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் வடக்கு தேர்தலுக்கு செல்கின்றது. ஆனால் வீரவன்ச அரசில் இருந்து விலகவில்லை. இப்போது வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூடாது என புதிய கூச்சலை எழுப்புகின்றார், இந்த கோமாளி. இந்த கோரிக்கையை இவரது அரசு ஏற்காவிட்டால் என்ன செய்வாராம் இவர்? கடலில் குதிக்க போகிறாரா? இவரும், இவரை போன்ற இன்னொரு கோமாளியான சம்பிக்க ரணவக்கவும் ஒன்றில் அரசில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது...
 
ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை வடக்கின் முதல்வர் வேட்பாளராக கூட்டமைப்பு அறிவித்தவுடன் சம்பிக்க ரணவக்கவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. விக்னேஸ்வரனை பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சம்பிக்க, தயா மாஸ்டரை அவரது மஹிந்த அரசாங்கம் வேட்பாளராக அறிவித்துள்ளது என்பதை மறந்து விட்டது. விக்னேஸ்வரனை வடக்கின் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் சம்பந்தன், சிங்கள மக்களுக்கு ஒரு நல்லெண்ண செய்தியை அனுப்பியுள்ளார். இதுதான் கடை செய்தி என நான் எண்ணுகின்றேன். இலங்கை நாட்டின் நீதித்துறையில் உயர் பதவி வகித்த ஒருவரை நியமித்ததன் மூலம் ஒன்றுபட்ட நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு வாழ தயார் என சம்பந்தன் அறிவித்துள்ளார்.
 
இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை சிங்கள மக்களும் அரசாங்கமும், சிங்கள அரசியல் கட்சிகளும் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதையும் இனவாத கண்ணோட்டத்தில் பார்த்து சம்பிக்க ரணவக்க, பாலசிங்கத்துடன் விக்னேஸ்வரனை ஏன் ஒப்பிடுகிறார் என்பதையும், ஒப்பிட்டு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட முயல்கிறார் என்பதையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவரது கருத்தை சிங்கள மக்கள் ஏற்றுகொண்டால், சிங்கள மக்களுடன் தமிழர் ஒரே நாட்டில் வாழ முடியாது என்ற அர்த்தம் உருவாகிவிடும் என எச்சரித்து வைக்க விரும்புகின்றேன். 
 
மாகாணசபை தேர்தலில் நாம் சிலவேளை வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடலாம். ஆனால், எங்கே இருந்தாலும் நாம் இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் அணியில்தான் இருப்போம். அதுதான் அடிப்படை. வடக்கிலும், மத்திய மலை நாட்டிலும், வயம்ப மாகாணத்திலும் நாம் இதைத்தான் செய்வோம். இந்த தேர்தல் இனவாத மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் இயக்கத்தை ஆரம்பிக்கும் தேர்தல்.
 

மனோ கனேசன், நீதியரசர் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசத்தை சிங்கள மக்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லியிருக்கிறார். சிங்கள மக்கள், தமிழ் மக்களுடன் இணைந்து இலங்கைத்தீவை ஒன்றாக வைத்திருப்பத்தற்கு ஏறி அமர்ந்திருக்க வேண்டிய ரயிலை தவறவிட்டவர்கள். இந்த அவலச் சூழ்நிலையில்  யாரும் எதிர்பாராத, அரசியலில் இருக்காத ஒருவர் தமிழர் பக்கத்திலிருந்து பொறுப்பு எடுக்க முன்னால் வந்திருக்கிறார்.  அவருக்கும் புலி என்று சாயம் பூசி, சிங்கள மக்கள் தம்மைத்தான் ஏமாற்றினார்களாயின் அவர்கள்தான் நாட்டை துண்டாடுகிறார்கள்.  மத்தியில், வடமேற்கில் அவர்கள் அரசை தள்ளிவைத்து, வடக்கில் கட்சிச் சார்ப்பில்லாத வேட்பாளரான நீதியரசர் விக்கினேஸ்வரனை அவர்கள் ஏற்றுகொள்வதை வெளிக்காட்ட வேண்டும்.  அல்லாமல் சம்பிக்கவின் அரசுக்கு மத்தியிலும், வடமேற்கிலும் வாக்களித்து நீதியரசர் விக்கினேஸ்வரனையும் நிராகரித்தார்களாயின் அவர்கள் சரவதேசத்துக்கு ஒரு செய்தியை சொல்கிறார்கள். அதாவது "தமிழரும் நாங்களும் பச்சை மண்ணும், சுட்ட மண்ணும். இனி அந்த பச்சை மண்ணான தமிழரை சுட்டமண்ணான எம்முடன் இணைக்க முடியாது. அவர்களை வேறு ஒரு பாண்டமாக வணைந்துகொள்ளுங்கள் என்பதுதான்".

 

இலங்கையில் நடக்கும் அரசியலை அவதானித்து வரும் பல வெளிநாட்டு  தூவராலயங்கள், நீதியரசர் விக்கினேஸ்வரின் தெரிவு, தமிழர்கள் நடத்திய ஒரு அமைதிப்புரட்சி என்பதை அவதானித்திருக்கும். இதை சிலர், தமிழர் புலிகளை ஆயுதப் புரட்சியல் இறக்கியதற்கு அடுத்த முக்கியமான அரசியல் சம்பவமாகத்தான் காண்பார்கள். கிழக்கு தேர்தல் நேரம், கக்கீம், தான் அரசுக்கு எதிராக செயல்ப்படுவதாக காட்டி ஏமாற்றி, அதிகப்படியான  முஸ்லீம் மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ள, வேட்பாளர்களை முல்லாக்கள் முன்னால்  அவர்கள் அரசில் சேரமாடார்கள் என சத்தியம் செய்ய வைத்தார்.  அதன் பின்னர், கூட்டமைப்பு கொடுத்த முதலமைச்சர் பதவியை அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு,  தான் அரசில் இணைந்து அமெரிக்க சென்று மாகாண சபைக்கெதிராக பிரச்சாரம்செய்தார். அங்கிருந்தே திவிநெகும்ப சட்டத்திற்கு கிழக்கின் ஒப்புதல் கொடுத்தார். பின்னர் திரும்பிவந்து அரசுடன் இணைந்து திவி நெகுமவுக்கு எதிராக தீர்ப்புக்கொடுத்த சிராணியின் பதவி நீக்கத்தை  நிறைவேற்றி வைத்தார்.

 

ஜனநாயகத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கும் மேற்குநாடுகள், சிங்களத்திற்கே சிராணியின் பதவி நீக்கம் பாரதூரமான பின்னடைவு என்று நினைக்கின்றன.  அந்த நிலையில், அவர்கள், அதன் தாக்கம் முஸ்லீம்களின், தமிழரின் உரிமைகளுக்கு எவ்வளவு பின்னடைவு என்பதை தெளிவாகத்தான் கணக்கிட்டிருப்பர்கள். மு.க. இப்படியான தகிடுதத்த அரசியலில் இறங்கி இருக்கும் போது தமிழர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே வந்து நீதியரசர் விக்கினேஸ்வரனை தெரிவு செய்து தமது உரிமை போராட்டத்தில் அடுத்த சாதனையை நிலைநாட்டியதை அவர்கள் கவனியாமல் போகமாட்டர்கள்.  சம்பிக்க, விமல் போன்ற பன்னாடைகளின் விஷப்பேச்சால் மயங்கி  சிங்கள மக்கள் இந்த மலை ஒத்த  திருப்பு முனையை கவனிக்க தவறினார்களானால் அவர்கள், J.R.ன் கண்டி யாத்திரையில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தில் மயங்கி நாட்டை இந்த அழிவுப்பதையில் இட்டு சென்ற அதை நடத்தையை திரும்பவும் ஒருதடவை செய்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.  மத்தியில், வட மேற்கில் அவர்கள் அரசை நிராகரித்து, எதிர்க்கட்சிகளை ஆதரித்து அதன் மூலம் கட்சி சாரா நீதியரசர் விக்கினேஸ்வரனை வடக்கில் வரவேற்று, இலங்கையை ஆசியாவின் அதிசயம் பிளசான பாதை ஒன்றில் நடத்தி செல்ல வேண்டும். 

 

தமிழருக்கு, மனோ கணேசன் போன்ற சிங்களம் தெரிந்த அரசியல்வாதிகள், சிங்களத்தவர்களின் பேச்சுக்களை பற்றித் தெரிய வைப்பதுண்டு. இவற்றை அறிந்துகொண்டுதான் தமிழ் மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பது. ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் தெரியாத சம்பிக்க போன்ற அரசியல்வாதிகளின் விஷ பேச்சுகள்  நீதியரசர் விக்கிகினேஸ்வரன் போன்றவர்களின் பால் போன்றவற்றையும் சேர்த்துக் கெடுக்க செய்கின்றன. அதனால் அவர்கள் எப்போதுமே தமிழர்கள் நீட்டிய சமாதன கரத்திற்கு மொழியை முறித்துத்தான் திருப்பி அனுப்பி வந்தார்கள்.

 

தமிழ்மக்கள் தம்மிடமிருந்த நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல் அமைச்சர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அரசு, பிரதம நீதியரசர் சிராணியை பதவி நீக்கம் செய்துவிட்டு திருப்தி அடையாமல்  நிரந்தரமாக சிறையில் போட தேவையானவற்றை  செய்கிறது. எனவே இப்படியான மடுவும், மலையுமான நிகழ்வுகள் நடந்த பின்னர் வரவிருக்கும் தேர்தலை சிங்கள மக்கள் கவனமாக பயன் படுத்த வேண்டும்.  மத்தியிலும், வடமேற்கிலும் அரசை நிராகரித்து சம்பிக்கவுக்கு உண்மையை உணரவைக்க வேண்டும். 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.