Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் படித்துவந்த தமிழ் மாணவி தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.

 

தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின் உடலை பெறுவதற்காக தந்தை தாம்சன் மற்றும் உறவினர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். அங்கு அவரது உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து லிவர்பூல் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

http://tamil.oneindia.in/news/2013/07/17/world-chennai-girl-commits-suicide-london-179331.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த மாணவி ஜார்ஜினாவின் உடல் இன்று மறு பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எஸ்.தாம்சன் என்பவரின் மகள் ஜார்ஜினா தாம்சன். இவருக்கு விண்வெளி வீராங்கனை கல்பானா சாவ்லா போன்று விண்வெளி ஆய்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே இருந்து வந்தது. மிகவும் புத்திசாலி பெண்ணான ஜார்ஜினா, லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏரோஸ்பேஸ் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், ஜூலை 12ம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தான் தங்கி இருந்த அறையில் ஜார்ஜினா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாம்சன் சென்னையில் இருந்து லிவர்பூல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், ஜார்ஜினாவின் உடலை பார்க்க தாம்சன் 2 நாள் வரை அனுமதிக்கப்படவில்லை.

தாம்சன் சந்தேகம்

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாம்சன் தெரிவித்தார். ஜார்ஜினா தங்கியிருந்த அறையில் மின்விசிறியோ அல்லது இரும்பு வளையமோ ஏதும் இல்லை. அப்படி இருக்கும் போது, அவள் எவ்வாறு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும். துணி வைக்கும் 2 அலமாரிகள் மட்டுமே அங்கு உள்ளது. அவள் என்னை விட அதிக உயரமும் கிடையாது. அப்படி இருக்கும் போது அவள் தூக்கிட்டுக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

மறு பிரேத பரிசோதனை

மேலும் ஜார்ஜினாவின் மரணத்தின் உண்மை நிலையை கண்டறிய வலியுறுத்தி, லண்டன் நீதிமன்றத்தில் தாம்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து ஜார்ஜினாவின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறு பரிசோதனையின் முடிவில் ஜார்ஜினாவின் மரணம் தற்கொலையா என்பது குறித்து விவரம் தெரியவரும். அதனை தொடர்ந்து ஜார்ஜினாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிவர்பூல் பல்கலைக்கழகம்

ஜார்ஜினாவின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், போலீசாரின் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஜார்ஜினாவின் நண்பர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் தங்களின் வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் லிவர்பூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜார்ஜினா தனது குடும்பத்துடன் போதிய தொடர்பில் இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் 2 அல்லது 3 இமெயில்கள் மட்டுமே அனுப்பி உள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் ஜார்ஜினா தனது தந்தைக்கு அனுப்பிய இமெயிலில் தான் நலமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அடமானத்தில் வீடு

தாம்சன் தனது வீட்டை மகளின் படிப்பிற்காக அடமானம் வைத்து படிக்க வைத்துள்ளார். மகளின் மரணம் குறித்த மர்மங்கள் தீர்க்கப்படும் வரை, ஜார்ஜினாவின் பொருட்களை தான் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தாம்சன் தெரிவித்துள்ளார். பொருளாதார பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக, தனது மகளின் உடலை கொண்டு வர நிதியுதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை அணுக தாம்சன் முடிவு செய்துள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/07/19/world-indian-father-struggles-solve-mysteries-death-179473.html

  • கருத்துக்கள உறவுகள்

மகளை இழந்து தவிக்கும் தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..! அவளது ஆன்மாவும் அமைதி பெறட்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி பிபிசி போன்ற ஊடகங்கள் பெரிய முக்கியத்துவமே கொடுக்கவில்லை. குறித்த பல்கலைக்கழகமும்.. மெளனம் சாதிக்கிறது..! பிரித்தானிய அரசின் இந்திய உபகண்ட மாணவர்கள் மீதான கடும் விசா அழுத்தங்கள் மத்தியில் மற்று ஐரோப்பிய நாடுகள் தவிர்த்த வெளிநாட்டு மாணவர்கள் மீதான கடும் விசா நடைமுறைகளால் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை வருவாயை இழந்து வரும் நிலையில்.. இப்படியான விடயங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றுகிறது..!

 

அண்மையில்.. பிரித்தானிய பிரபல மருத்துவப் பரீட்சை ஒன்றில்.. கறுப்பின மாணவர்கள் மற்றும்.. இந்திய வம்சாவளி மாணவர்கள் கூடிய அளவில் திட்டமிட்டு சித்தி எய்தாமல் செய்யப்படுவதாக உண்மை கண்டறியும் குழு ஒப்புக் கொண்டிருந்தது.

 

இவர்களின் பொய் முகங்களை இன்னும் எத்தினை நாளைக்குத் தான் மறைக்கப் போகிறார்களோ..??! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அகதியெண்டு வந்து செட்டிலாகிறது கொஞ்சம் இழுக்காடு....
படிக்கவெண்டு வந்து செட்டிலாகிறது  கொஞ்சம்  மேல்த்தரம்....
 
ஆனால் சாரம்சம் ஒண்டுதான். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.