Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய் சொல்லும் சிங்கள ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கருப்பு யூலை நிகழ்வினை கரும்புலிகள் தினம் எனப் பொய் சொல்லும் சிங்கள ஊடகம்

ரீசேட்டுகளில் பின்லேடனின் பெயரை அனுமதியாத பிரிட்டன் பிரபாகரனின் பதாகை ஊர்வலத்துக்கு தாராள அனுமதி

சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து அதனைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதி ஐக்கிய இராச்சியத்தில் அந்த அமைப்பைச் சட்டபூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் தடை செய்து சில வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்டநிலையிலும் அந்த நாட்டில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறைந்துவிடவில்லை. புலிகள் இயக்கத்தினர் தடை செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இயங்கி வந்தார்களோ அந்த முறையிலேயே இன்று வரை செயற்பட்டு வருவதுடன் அங்கு வாழும் தமிழ்மக்களிடமிருந்து புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்காக உதவி நிதிகளைச் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு புலிகள் அமைப்புக்கு நிதி கொடுப்பவர்களில் ஒரு சிலர் அவ்வாறு நிதி கேட்டுவரும் புலிகள் இயக்கத்தினருக்கு பணத்தை விரும்பிக் கொடுத்த போதும் ஏனையோர் நிதி கொடுக்க விரும்பாது மனம் வெறுத்த நிலையிலேயே பணத்தினைக் கொடுத்து வருவதுடன் அவ்வாறு பணம் கொடுக்க மறுக்கும் தமிழர்களிடமிருந்து அவர்களைப் பலவந்தப்படுத்தி பயமுறுத்தி பணத்தைச் சேகரிக்கும் நடவடிக்கைகளையும் புலிகள் இயக்கத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் வழமை போலவே தமது பிரசார வேலைகளை புலிகள் இயக்கத்தினர் தடையின்றிச் செய்து வருகின்றனர். முன்போல குறித்த இயக்கத்தின் பேரில் இயங்க முடியாத சந்தர்ப்பங்களில் அதற்கு இணையான வேறு கிளை அமைப்புகளை உருவாக்கி வழமைபோல நிதிசேகரிப்பு பிரசாரம் போன்ற செயற்பாடுகளில் புலிகள் இயக்கத்தினரும் அதன் ஆதரவாளர்களும் ஈடுபட்டு வருவதும் அவ்வாறான புதிய இணை அமைப்புக்களின் பேரில் விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். அத்துடன், ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுடன் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களை எடுத்து சென்று பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். இவ்வாறு ஐக்கிய இராச்சிய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பின் நடவடிக்கைகள் செயற்பாடுகளுக்கு அந்த நாட்டு அரசாங்கமும் பொலிஸ் துறையும் அனுமதி வழங்கி வருகிறது.

அல்-ஹைடாத் தலைவர் பின்லேடனின் உருவப் படங்களுக்கு மட்டுமின்றி அவருடைய பெயர் பொறித்த ரீசேட் அணிபவர்ளைக் கூட கைதுசெய்யும் பிரித்தானிய பொலிஸ் துறையினர் மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தலைவராகக் கருதப்படும் பிரபாகரனின் உருவப்படங்களைத் தூக்கிச்செல்லும் ஊர்வலங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான பேச்சாளர் அல்லது நியாயவாதியாகிய அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியக் குடியுரிமை பெற்றுத் தருமாறு மனைவி குடும்பத்துடன் தலைநகர் லண்டனில் சகல வசதிகளுடனும் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த இரட்டைக் கொள்கை பற்றி இதுவரையில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலும் வாழ்கின்ற ஸ்ரீலங்கா நாட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆயினும், இதுபற்றி இந்தச் செய்தியாளர் ஒரு சந்தர்ப்பத்தில் பிரிட்டனிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரித்த பொழுது அவர் அளித்த பதிலில் பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து அதனை அந்த நாட்டில் சட்டபூர்வமாகத் தடை செய்தபோதும் ஸ்ரீ லங்கா அரசு புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதித் தடை செய்யவில்லையே எனவும் அத்துடன் அன்ரன் பாலசிங்கம் இலண்டனிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வரும்போது அவருக்கு கம்பளம் விரித்து வரவேற்று விமானப்படை ஹெலிகொப்டரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு ஸ்ரீ லங்கா அரசு அழைத்துச் செல்கிறதே எனவும் சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

இவ்வாறு இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா அரசும் பிரித்தானிய அரசும் சர்ச்சை கிளப்பிக் கொண்டிருக்கும் அதேவேளை, பிரிட்டனில் வசிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கடந்த வாரம் லண்டனில் ஹைட்பார்க்கில் கரும்புலிகள் தினத்தைப் பெரும் எடுப்பில் நடத்தியுள்ளனர். இலண்டன் தமிழ் இளைஞர்கள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்வலத்தில் பிரிட்டனில் வசிக்கும் பெருந்தொகையான தமிழர் ஒன்றுகூடியிருந்தனர். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாரிய உருவப்படங்கள் ஏந்தியவர்களாக பங்கு பற்றியவர்கள் கோஷங்கள் கிளப்பினர். இந்த ஊர்வலம் நிகழ்ச்சி கரும்புலிகள் நினைவு கூரும் நிகழ்வாக மட்டும் இல்லாது புலிகள் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் ஆதரவு தேடும் பாரிய பிரசார ஊர்வலமாகவே இருந்தது. பிரிட்டனில் இலண்டன் மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களும் இந்த ஊர்வல நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- திவயின: 30.7.2006 -

-தினக்குரல்

ஆண்டன் பாலசிங்கத்துடன் இந்தியா பேச்சு

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோ சனைப் பிரிவின் அதிகாரி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோதலை உடனடியாக நிறுத்த நட வடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகளை இந்திய அரசாங்கம் வலியுறுத்தி இருப்பதாக துìதரக வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே யுக்கும் இடையே பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்தே இந்தியா இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோதல் களை உடனடியாக நிறுத்துமாறு இந்தியப் பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவினால் லண்டனில் இருக்கும் ஆண்டன் பாலசிங்கத் திற்குச் செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர், ஆண்டன் பாலசிங்கத் தைத் தொடர்பு கொண்டு மாவிலாறு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

அமைதிக்கு விடுதலைப் புலிகள் இதனைவிட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவருடன் ஆண்டன் பால சிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நிலைமை குறித்துப் பேசியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

ராஜபக்சே, மன்மோகன் தொலை பேசி உரையாடலின்போது மாவிலாறு சம்பவத்துக்கு அரசியல் தீர்வு காணு மாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.

போர்ச் சூழ்நிலையில் இலங்கை யிலிருந்து அகதிகள் இந்தியாவிற்குச் செல்வது தங்களுக்குப் பெரும் பிரச்சினை யாகியுள்ளது என்று இந்தியப் பிரதமர் தெரிவித்ததாக அந்த ஊடகம் கூறியது.

TAMILMURASU-SINGAPORE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.