Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்புத் திருத்தம் 6 மாதம் ஒத்திவைப்பு; இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கியது இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்புத் திருத்தம் 6 மாதம் ஒத்திவைப்பு; இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கியது இலங்கை
 

 

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் முக்கிய சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த இலங்கை அரசு, இது விடயத்தில் இந்தியாவின் தலையீட்டையடுத்து தனது யோசனையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.



இதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆகியவை முடிவடைந்த பின்னரே இது விடயம் குறித்து அரசு மீள பரீசிலிக்கும் என அறியமுடிகின்றது.



கடந்த 9 ஆம் திகதி உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பு முக்கியஸ்தர்களுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.



அரச தரப்பினருடனான சந்திப்பின்போது, இந்தியாவின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை கை வைப்பதை புதுடில்லி நிர்வாகம் விருப்பவில்லை என்றும், எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் பொதுவானதொரு இணக்கப்பாட்டுடன் அதில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் சிவ்சங்கர் மேனன் ஆலோசனை வழங்கியுள்ளார்.



அத்துடன், 13 ஆவது திருத்தத்தில் எடுத்த எடுப்பிலேயே தன்னிச்சையாக இலங்கை திருத்தங்களை மேற்கொண்டால் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படும் அரசியல் நெருக்கடிகள் உட்பட மேலும் சில விடயங்களையும் மேனன் இதன்போது எடுத்துரைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.



இதனையடுத்தே, உத்தேச அரசமைப்பு யோசனையை இலங்கை அரசு தற்காலிகமாக 6 மாதங்களுக்குப் பிற்போட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும், 6 மாதங்களுக்குப் பின்னர் திட்டமிட்ட அடிப்படையில் அரசு, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் என்று உயர்மட்ட அரச அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=780692186621838117#sthash.Vrmp3xe1.dpuf

தமிழக மாணவரின் தொடர் போராடத்துக்கு கிடைத்த வெற்றியால் கருணாநிதியை வைத்து தமிழரை தொடர்ந்து ஏமாற்ற ஹிந்திய அரசுக்கு முடியாமல் போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.