Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள்- ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [தாயக செய்தியாளர்]

கண்டி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள் குறித்த ஒரு பார்வை:

- அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கிளர்ச்சி முறியடிப்பு கொள்கைகளை கடைப்பிடித்து, பிரச்சனைக்குரிய மக்கள் மத்தியில் திகிலூட்டும் நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிடும் முகமாக சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

- உளவியல் யுத்த முறையின் இன்னோர் பரிமாணத்தை செயற்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ள, பயங்கரவாத முறியடிப்பு யுத்த முறையில் கைதேர்ந்த சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் எனக் கூறப்படுபவர்.

- மக்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் தொடர்புகளை பேணி அவர்களின் நம்பிக்கையைப்பெறும் இவர், பின்னர் அதே மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஓயாது வெற்றிகரமாக செயற்பட்டார் என கூறப்படுகின்றது.

- 1996 இல் ஏ.எஸ்.பியாக இருந்த போது கட்டுக்குருந்த சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சிப் பிரிவில் இருந்துள்ளார்.

- 1997, 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு ஆரையம்பதியில் சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பாளராக இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அப்பகுதியிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் வந்து ஞாயிறு தோறும் கையொப்பமிட வேண்டும் என்று சிறப்பு அதிரடிப்படையினர் வற்புறுத்தினர். இவ்வாறு வரும் அப்பாவி மக்களை பதுங்குகுழி வெட்டுதல், முகாமை துப்பரவு செய்தல், முகாம் மலசல கூடத்தை கழுவுதல் போன்ற வேலைகளை செய்வித்து சிறப்பு அதிரடிப்படையினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். திருக்கோவில் பிரிவு கட்டளை அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

- தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா போன்ற பிரதேசங்களில் சிறப்பு அதிரடிப்படைக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் சிறப்பு அதிரடிப்படையின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

- புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்பான யுத்த காலங்களில் நேரடியாக நின்று தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பயங்கரவாத செயல்களையும் கட்டவிழ்த்து விட்ட இவர், சமாதான காலத்தில் மறைமுக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

- 2002 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கட்டளை அதிகாரியாக இருந்த இவர், சமகாலத்தில் வவுனியாவிலும் செயற்பட்டு, மக்களை தம்வசப்படுத்தும் புலனாய்வு செயற்பாடுகளை தொடங்கிய அதே நேரம் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

- 2004 இல் இவர் கிழக்கு மாகாண சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

- பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தில் செயற்பட்ட இவர், கிழக்கு மாகாண மக்களுக்கு சிம்ம சொர்ப்பணமாக விளங்கியதுடன் கிழக்கில் நடைபெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் கைது, சித்திரவதைகள், வீடுகள் எரிப்பு என சகல விதமான செயற்பாடுகளிலும் பின்னணியில் செயற்பட்டவர் ஆவார்.

- கிளைமோரில் கொல்லப்படும் போது சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பான பணிப்பாளராக இருந்தார். இப்பயிற்சிக் கல்லூரிக்கு உபுல் செனவிரட்ன பொறுப்பாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இக்கல்லூரியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (வி.வி.ஐ.பி) பாதுகாப்பு வழங்குவதற்கான சிறப்புப் பிரிவுக்கு அதிசிறந்த பயிற்சிகள் இவரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது. இவரின் கண்காணிப்பின் கீழான இந்த பயிற்சி சர்வதேச தராதரத்துடன் உள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க நிபுணர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- மக்கள் மத்தியில் இன மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டி விட்டுவிட்டு அப்பிரச்சினையைத் தீர்க்க முயலுபவராக மக்கள் மத்தியில் தோன்றும் இவர், பின்னர் மக்கள் மீது மறைமுகமாக வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடுபவராகவே செயற்பட்டு வந்தார்.

- இவர், கிழக்கு மாகாண சிறப்பு அதிரடிப்படை இயக்குனராக நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்கில் நிலமை இன்னும் மோசமாகியது. படையினருக்கு எதிராக மக்கள் அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தும் போது, மக்களுடன் சமரசம் செய்வதாக கூறி பேச்சுக்கு அழைத்து அவர்களை வீடியோப் படம் எடுப்பார். பின்னர் அம்மக்கள் சிறப்பு அதிரடிப்படையினரின் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவர். யுத்த நிறுத்த காலப்பகுதியில் திருக்கோவில் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மக்கள் மேற்கொண்ட அகிம்சை வழிப் போராட்டத்தை இரும்புக் கரங்கொண்டு நசுக்கி 8 பொதுமக்கள் கொல்லப்படவும் பலர் காயமடையவும் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இவர் ஆவார்.

- இந்த வகையில் இவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரியாக இருந்த பகுதியில் தொடர்புடையோரின் வீடுகளுக்கு செல்லும் சிறப்பு அதிரடிப்படையினர் வீட்டுக்கு இரண்டு சவப்பெட்டிகளை ஆயத்தப்படுத்துமாறு மக்களை அச்சுறுத்தியுள்ளனர். அது மட்டுமன்றி இவர் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரியாக இருந்த பகுதியில் மக்களுக்காக கதைத்த யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தமிழ்ப் பிரதிநிதி கூட சிறப்பு அதிரடிப்படையினரால் தொலைபேசியூடாக அச்சுறுத்தப்பட்டார்.

- யுத்த நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருப்பதை சிறுதுளி அளவு கூட விரும்பாத பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவராக விளங்கும் இவர், 25.05.2004 மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதியான 35 ஆம் கொலனி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிறப்பு அதிரடிப்படையினரை ஊடுருவ வைத்து யுத்த நிறுத்தத்தை மீறியதோடு அல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் சாதித்து வந்தார்.

- யுத்த நிறுத்த காலத்தில் புலிகளுடனான பிரதேச மட்ட கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளும் இவர் கலந்துரையாடலின் போது சமரசமாக கதைத்துவிடடு முகாம் திரும்பியதும் அதற்கு நேரெதிரான பல நடவடிக்கைகளை எடுப்பவர் ஆவார். இவர் போன்றவர்களது இச்செயற்பாடுகளாலேயே கிழக்கில் பிரதேச மட்டச் சந்திப்புகள் நடைபெறாமல் போயின.

- சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா கும்பல் மற்றும் முஸ்லிம் ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி காரியம் சாதித்து வந்தார். அதாவது சிறப்பு அதிரடிப்படையினரூடாக கருணா குழுவினரின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பவராக இவர் இருந்தார். பத்திரிகையாளர் நடேசன், கிழக்கு பல்கலைக்கழக பேராசியர் தம்பையா உள்ளிட்ட தமிழ்ப் புத்திஜீவிகள் உள்ளிட்டடோரின் கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்றும் முயற்சியில் இராணுவப் புலனாய்வுத்துறைக்கு (எம்.ஐ) துணையாக இவர் செயற்பட்டவராவார்.

தொடர்புபட்ட செய்தி: கிளைமோரில் சிறப்பு அதிரடிப்படையின் நட்சத்திர நாயகன் உபுல் செனிவிரட்ண பலி

http://www.eelampage.com/?cn=28047

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.