Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது! - கிழக்கில் இருந்து எழுவான்

Featured Replies

தாயகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தால் மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

Page%2012-2.jpg

போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் தொடக்கம் அம்பாறை வரையிலான கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால், இராணுவக் குடியிருப்புக்கும், கைத்தொழில் பேட்டைக்கும் என அபகரிக்கப்படும் அதேசமயத்தில், முஸ்லிம்களினாலும் பெருமளவான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புக்களினாலும், சிங்கள - முஸ்லிம் காடயர்கள் தமிழ் குடும்பங்களை கொன்று குவித்து தமிழ் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் இடப்பெயர்ந்து இன்றும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாதவாறு நிலைமைகளை ஏற்படுத்தி விட்டு இன்று காணிகளை அபகரிக்கின்றனர்.

வடக்கில் தமிழர்களின் காணிகளை இராணுவத்தின் தேவைக்கென சுவிகரிப்புத் திட்டத்தின் கீழ் சட்டப்படி காணிகள் அபகரிக்கப்படும் அதே சமயத்தில், கிழக்கில் முஸ்லிம்கள் எவ்விதமான கேள்வி கணக்கும் இல்லாமல் தமது தேவைக்கேற்ப காணிகளை அபகரிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, பொத்துவில் பகுதியில் தமிழர்க்குச் சொந்தமான காணிகள் கடல் அரிப்புப் போன்று சிங்கள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம்களினால் தொடர்ந்து அபகரிக்கின்றனர்.

அதுமாத்திரமல்ல, தற்போது சிறீலங்காவின் நீதித்துறை அமைச்சரும், முஸ்லிம் கொங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்திருந்தார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற காணி கொள்வனவு விற்பனை நடவடிக்கை செல்லுபடியற்றவையாகும் படியான சட்டத்தை கொண்டுவரப் போவதாக தெரிவித்திருந்தார். இது ஒரு முன்மொழிவு மாத்திரமே, ஆனால், கிழக்கில் இது சட்டமாக்கப்பட்டது போன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள நெல் வயல் காணிகளை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருகின்றனர். தமிழர்களினிடம் விற்ற காணியைதான் மீளப் பெற முயற்சிகள் எடுக்கப்படுகின்றதே தவிர, பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தமிழர்கள் விற்பனை செய்த காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கையாக இவை அமையவில்லை.

இது கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். இதன் ஒரு பின்னணியாகத்தான் கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்ட பொத்தானை பகுதியில் தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதல் இடம்பெற்றது. நீர்ப்பானசத் திணைக்களகம் மற்றும் விவசாயக் கமநலசேவைகள் திணைக்களகத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமான வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் அந்த காணிகளை அபகரிக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

போர் இடம்பெற்ற காலத்தில் தமிழர்கள் தமிழீழத்திற்காக போராட சிங்களவர்கள் தமிழர்க்கு எதிராக போராட, முஸ்லிம்கள் இரத்தம் சிந்தாது, சொத்துக்களை இழக்காது, முப்பது வருட காலத்தில் பெரும் போரை மையப்படுத்தி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்து தற்போது, பெரும்பான்மை இனத்துடன் இணைந்து கொண்டு பூர்விக மக்களையே ஓரம் கட்டும் நடவடிக்கையில் இன்று முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் எந்தப் பகுதியில் இருக்கின்றது என்பது கூட தெரியாத நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்ய முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலவு காத்த கிளிகளைப் போல்லாது, தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிராகத் தமிழர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயத் திட்டமாகவுள்ளது.

பின்னொரு காலத்தில் தமிழர்க்கான அரசியல் தீர்வு கிடைக்கப் பெற்றால் தமிழர்கள் எந்தப் பகுதியில் வாழ்வது என்ற பிரச்சினை ஆரம்பமாகும். மீண்டும் மண் மீட்புக்கான போராட்டம் தொடர்ந்தாகவே இருக்கும். இது ஒரு சிறுபான்மை இனங்களிடையே ஏற்படும் போராட்டமாக கூட அமையலாம்.

இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னர் என்ன என்ன வழிவகைகள் கையாண்டால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதை அரசியல் வாதிகளும், புத்திஜீவிகளும், கொள்கை வகுப்பாளர்களும் களத்தில் இறங்க வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/31691/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும்.

 

இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் அல்ல இப்பொழுதே கூறிவிட்டார்கள். "யோனக –Moors – சோனகர்" என அடையாளப்படுத்தப்படும் முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் பக்கங்களை புரட்டுவோமானால், இலங்கைத் திருநாடு சோனகர்களின் தாய்நாடு. இலங்கைச் சோனகர் இந்த நாட்டின் பூர்விகக் குடிகள். மாறாக, வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்த அராபியரின் வாரிசுகள் கிடையாது என்பதை கண்டு கொள்ளலாம்.

http://www.islamkalvi.com/portal/?p=8383

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழர்களின்  காணிகள் அபகரிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் தமிழ் அரசியல்க் கட்சிகள் கதிரைக்கு அடிபணியாமல்

தமிழர்களின் காணிகளுக்காகப் போராட வரவேண்டும்

சம்பந்தரின் சாணக்கிய அரசியலில் இதற்கு ஏதாவது வழி இல்லாமல் இருக்குமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.