Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ந.செல்வன் - புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ந.செல்வன் - புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் )

 
டந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர் புகைப்படத் துறையினில் இயங்கி வருகிறார். கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று புகைப்படத் துறையினில் ஆர்வம் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகினை கேமராவால் பதிவு செய்து வருகிறார். 

N.selvan.jpgஇதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய முன்னணி பத்திரிகைகளில் இவரின் 950 படங்கள் வெளிவந்துள்ளன. 350 க்கும் மேற்பட்ட கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இவரது புகைப்படங்களுடன் முகப்பு அட்டையினை வடிவமைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் பல தேசிய மாநில பரிசுகளை வென்றுள்ளது.

இவர் இதுவரை 7 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 15 முறை புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் ., 17 புகைப்படக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் 

இவரது ஓவியனின் ஒளிப்பயங்கள் நூலில் ஒரு புகைப்படக் கலைஞனின் மன உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரின் புகைப்பட அனுபவங்களை எழுத்தாக வடித்துள்ளார். இதுவரை தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை. ந.செல்வன் தற்போது நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு இளம் புகைப்படக் கலைஞர்களுக்கும், குறும்பட இயக்குனர்களுக்கும் முன்மாதிரியாக இருந்துவரும் ந.செல்வன் அவர்களை தாமிரபரணி பத்திரிக்கைக்காக சந்தித்தோம். 

உங்க புகைப்படப் பயணத்தை எப்போது தொடங்கினீர்கள்? 

12.JPGஆரம்பத்துல புகைப்படத்துறைல அவ்ளோ ஆர்வம்லாம் இல்ல. போட்டோ எடுக்க தொடங்கினது அப்படினா 1984 ல தான். அப்ப நான் குடந்தை அரசு நுண்கலைக் கல்லூரில இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் நம்ம துறைக்கு உதவியா இருக்குமேன்னு கேமரா வாங்கினேன்.கேமரா வாங்குன ஆறு மாசத்திலேயே என்னோட போட்டோ ஒன்னு ஜூனியர் விகடன்ல வந்துச்சு. அதுதான் எனக்கு தூண்டுகோளா அமைஞ்சுது. ஓவியத்து மேல இருந்த அதே ஈடுபாடு கேமரா மேலயும் வந்துச்சு. அன்னைக்கு தொடங்கின பயணம் தான் இன்னமும் அதே சீரா போய்ட்டு இருக்கு",

புகைப்படம் எடுப்பவர்களுக்கு என்ன மாதிரியான தகுதிகள் இருக்க வேண்டும்? 

இப்போதைய சூழ்நிலைல யார் வேணாலும் போட்டோ எடுக்கலாம், அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வேகமா வளர்ந்துருச்சு. கேமரா புல்லாவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துல வந்துருச்சு. நா ஆரம்பத்துல வச்சுருந்த கேமரால எல்லாமே மேன்வல் செட்டிங்க்ஸ் தான். Focus , apperture , ISO னு எல்லாமே மேன்வல் செட்டிங் தான். ஆனா இப்போ நிலைமை வேற. தகுதிகள் அப்படின்னு தனிய எதையும் சொல்ல வேண்டியது இல்ல. ஒவ்வொரு புகைப்படக்காரருக்கும் சமுதாயப் பார்வை அவசியம் இருக்கணும். அப்போதான் அவங்க எடுக்கற போட்டோவும் அத பிரதிபலிப்பவையா இருக்கும். Social Responsibility இருந்தா போதும்., கூட கேமரா டெக்னிக்கும் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் அவங்க எடுக்கற போட்டோ காலத்தை மீறி நிற்கும். பூக்கள்., இயற்கை காட்சிகள்னு எடுக்கறவங்களுக்கு கேமரா டெக்னிக்கல் தெரிஞ்ச போதும். 

நீங்க வரும் போது எவ்வாறு இருந்தது புகைப்படதுறை, இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது? 

8.jpg
நா வரும் போது இந்த street photography அவ்வளவா பிரபலமாகாத சமயம். அப்போவெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அட்டை படம் எடுக்கறதுதான் அதிகமா இருந்தது. கூட செய்திகளுக்கான புகைப்படங்கள் எடுக்கறதும் மட்டும் தான் அதிகமா இருந்துச்சு.அந்த கால கட்டத்துல தான் ஜூனியர் விகடன் visual taste னு ஒரு பகுதி ஆரம்பிச்சாங்க. அந்தப் பகுதி தமிழ்நாடு முழுக்க இருந்த இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோளா அமைஞ்சுது. நிறைய பேரு அப்பத்தான் போட்டோ எடுக்க ஆரம்பிச்சாங்க. அவங்க இருக்கிற ஏரியால நடக்கிற விசயங்கள பிரதி பலிக்கறதா இருந்துச்சு அந்தப் புகைப்படங்கள். அவங்களோட எண்ணங்களைப் பதிவு செய்ய நல்ல ஒரு தளமா இருந்துச்சு. அப்பத்தான் street photography பிரபலமாக ஆரம்பிச்சுது. அப்பத்தான் நிறைய புகைப்படக் கலைஞர்கள் உருவானாங்க. புகைப்படம் எடுக்கறதுல ஆர்வமும் நிறைய பேருக்கு உண்டாச்சு. 

இப்ப தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படத்திற்கான தளம் வேறு மாதிரியா ஆய்டுச்சு. இப்போ அதிக அளவுல புகைப்படம் எடுக்கறாங்க.அப்போ அந்த அளவுக்கு இல்ல. நிறைய திறமையான புகைப்படக் கலைஞர்கள் நம்ம தமிழ்நாட்டுல இன்னைக்கு இருக்காங்க. 

நீங்கள் எழுதியுள்ள "ஓவியனின் ஒளிப்பயணங்கள்" புத்தகம் பற்றி.. 

1_(2).jpg
தமிழ்ல கேமரா தொழிநுட்பம் பத்தி நிறைய புத்தகங்கள் இருக்கு. ஆனா எந்தவொரு பெரிய புகைப்படக்காரங்களும் அவங்க புகைப்படம் எடுத்த அனுபவம் பத்தி புத்தகம் எழுதுனது இல்ல. நா அந்தப் புத்தகத்துல என்னோட அனுபவங்களையும் புகைப்படம் எடுத்த அருமையான தருணங்களையும் பத்தி 16 புகைப்படக் கட்டுரைகளாக எழுதிருக்கேன். புகைப்படத் துறைக்கு புதுசா உள்ள வரவங்க அத படிச்சா புகைப்படங்கள் பத்தி ஒரு தெளிவு கிடைக்கும். ஒரு ஓவியன் புகைப்படக் கலைஞனாக மாறும்போது ஏற்பட்ட அனுபவம் தான் 'ஓவியனின் ஒளிப்பயணங்கள்'. 

புகைப்படத் துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு உங்கள் அறிவுரை? 

"அறிவுரைனு சொல்ல முடியாது. இப்ப வரவங்க ரொம்ப நல்லாவே எடுக்கறாங்க.சாமோகப் பொறுப்போடு பொறுமையும் இருக்கணும்.இது ரெண்டும் இருந்தாவே அவங்க எடுக்கற புகைப்படங்கள் காலத்தையும் மீறி நிற்கும்". என்று கூறும் ந.செல்வன் அவர்களின் புகைப்படங்கள் People Photography பிரிவைச் சேர்ந்தவை. மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவு செய்து வருபவை.

அவரின் புகைப்படங்களில் சில...

 
1.jpg

  

3.jpg

7.JPG

 தாமிரபரணி இதழுக்காக அவரைப் பேட்டி கண்ட போது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.