Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாகாண சபையும் மலையகமும் - மலையக சமூக ஆய்வு மையம்

Featured Replies

upcountry%20logo_CI.JPG

 

இன்னுமொரு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தப்ப பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணமும் தேர்தல் திருவிழாவை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது.
 
இந் நிலையிலேயே மாகாண சபைகளின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. அடிப்படையில் மாகாண சபைகளின் உருவாக்கமானது இனங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை. மாறாக பிரதேச அடிப்படையிலேயே அமைக்கப்படடது.
 
ஆங்கிலேயர் உருவாக்கிய மாகாணங்களில் எல்லைகளே மாகாண சபைகளின் நில எல்லைகளாக கொள்ளப்பட்டது. இதனால் எந்த மாகாணத்திலும் மலையக மக்கள் செறிவாக இல்லை. அவர்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சிதறி வாழ்கின்றனர்.
 
அரசியல் யாப்பின்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான இருப்பு கிடையாது. மத்திய அரசில் தங்கியிருக்கும் நிலையே உள்ளது. சட்டரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களில் பலவற்றை சட்டங்கள் மூலமும் (திவிநெகும), சுற்றறிக்கைகள் மூலமும், கொள்கை உருவாக்கம் என்பதன் ஊடகவும் மீள பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள அதிகாரங்கள் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையிடம் வழங்கப்படாமல் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மாகாண சபைகள் மலையக மக்களுக்க பெரிதாக பயன்படும் என கூறுவதற்கில்லை. மலையகத்தை தளமாகக் கொண்டதும், மாகாண சபைகளின் முறைகளை அங்கீகரிக்கின்ற எந்தவொரு அரசியல்அமைப்பும், நிறுவனமும் கட்சிகளும் கூட இரண்டு பண்புகளை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
 
1) மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை பேசுபொருளாக்கின்ற ஒரு களமாக மாற்றுதல் வேண்டும்.
 
2) மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக இருத்தல் வேண்டும். அவர்கள் மத்தியில் உயிரியல், பௌதீக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடி ஒன்றாக இருத்தல் வேண்டும்
 
ஆனால் இதுவரைகால மாகாண சபை அனுபத்தில் இந்த இரண்டு விடயங்களும் நடைபெறவில்லை. அபிவிருத்தி பற்றிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என காரணம் கூறலாம். ஆனால் பெரும்பாலான மலையக கட்சிகள் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றன. இந்த நெருக்கத்தை பயன்படுத்தியும் இவர்களால் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை என்றால் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது எதற்காக? 
 
மாகாண சபை என்பது ஒர் அரசியல் களம். ஆனால் மலையக மக்களுடைய விவகாரங்களை பேசு பொருளாக்கும் ஒரு களமாகவும் மாகாண சபைகளை பயன்படுத்த இவர்களால் முடியவில்லை. அது பற்றிய அரசியல் அறிவின்மையும், அரசாங்கத்துடன் இணைந்திருக்கம் நிலையுமே இதற்கு காரணம்.
 
இன்று மாகாண சபைகள் மலையக தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மலையக பிரதிநிதிகள் சந்தர்ப்பங்களை உருவாக்கவும் இல்லை. தானாக வந்த சந்தர்ப்பங்களை மலையக மக்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கவும் இல்லை. மறுபுறத்தில் அரசாங்கத்தை சார்ந்து (தங்கி வாழ்தல்) தான் இருத்தல் வேண்டும் என்ற போக்கு இவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் கிடைத்த சந்தர்ப்பங்களையும் குறைந்த பட்ச அதிகாரங்களையும் கூட தங்களையும் தாங்கள் சார்ந்த கட்சிகளையும் வளப்படுத்த மாத்திரமே பயன்படுத்தினர்.
 
இன்று மலையகத்தில் தொழிற்சங்க அரசியல் ஆதிக்கம் பெற்ற கட்சி அரசியல் மேலெழுந்துள்ளதால் இனத்துவம் சார்ந்த அரசியல் என்பது வளர்ச்சி பெறவில்லை. அதேவேளை தொழிலாளர்களின் உரிமைகளும் வென்றெடுக்கக் படவில்லை. 
 
இச் சந்தர்ப்பத்தில் வாக்களிக்கம்போது சில விடயங்களை கவனத்தில் எடுத்தல் வேண்டும். மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை பேசுபொருளாக்குகின்ற களமாகவும், அதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகவும் மாகாண சபையில் பணிகளை முன்னெடுத்து மலையக மக்களின் சுதந்திர சுகவாழ்வுக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்கக்கூடியவர்களுக்கே தங்கள் வாக்குகளை அளித்தல் வேண்டும். இந்த விடயத்தில் அவர்களை அடையளம் காண வேண்டியது முக்கயமாகும்.
 
தேளிவான இலக்கு, வலுவான கொள்கைகள், முறையான வேலைத் திட்டங்கள் என்பவற்றை கொண்டிருப்பவர்களையே தேர்ந்தெடுத்தல் வேண்டும் மலையக மக்களின் அரசியல் இலக்கு என்பது மலையக மக்கள் தங்களுடைய விவகாரங்களை தாங்களே பார்க்கக்கூடிய வகையில் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதாகும். முலையக மக்கள் ஒரு தேசிய இனம், மலையகம் அவர்களது தாயகம், மலையக மக்களுக்கென மொழி, கலாசாரம், பொருளாதாரம் உண்டு என்பதனை தங்களது அரசியல் கொள்கைகளாக கொண்டிருப்பவர்களாலேயே இந்த இலக்கினை அiடையாலம்.
 
மலையக மக்களின் கூட்டிருப்பை பாதுகாப்பதற்கும், கூட்டு உரிமையை பேணுவதற்கும் இந்த கொள்கை நிலைப்பாடு அவசியமானதாகும். மலையக மக்களுடைய நிலம் பறிக்கப்படுகின்றது. அவர்களின் வாழ்வுக்கு ஆதரமான பேரம் பேசும் பலத்தை தருகின்ற பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் பலவீனப்படுத்தப்படுகின்றது. அவர்களுடைய மொழி, கலாசாரம் புறக்கணிக்கப்படுகின்றது. இவை தொடர்ந்து இடம்பெறுமாயின் மலையக மக்களின் கூட்டிருப்பு, கூட்டு அடையாளம் என்பன சிதைவடையும். 
 
இக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும். மலையக மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை வெளியில் கொண்டுவருதல், மலையக மக்களின் இருப்புக்கு அச்றுத்தலாக இருக்கும் விடயங்களை எதிhத்துப் போராடுதல், மலையக மக்களின் மேன் நிலையாக்கத்திற்கான நடைவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பவையே இவ் வேலைத்திட்டங்களாகும். இதனை முன்னெடுப்பதற்கு தயாரானவர்களையே மக்கள் தெரிவு செய்து அனுப்புதல் வேண்டும். 
 
மாகாண சபைகள் மலையக மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டுமானால் மலையக மக்கள் செறிந்து வாழும் மாகாண சபைகளுக்கள் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தல் வேண்டும். அதுவரை மலையக பிரதிநிதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஊடாக மலையக மக்களின் விவகாரங்களை கையாளக்கூடிய பொறி முறை ஒன்றை உருவாக்குமாறு அழுத்தல் கொடுத்தல் அவசியம்.
 
மலையக அரசியலை அரசியல்வாதிகளிடம் மட்டும் கையளித்து விட்டு மலையக மக்கள் வாழாவிருக்க முடியாது. வலிமையான மலையக சிவில் சமூகத்தை உருவாக்கி மலையக அரசியல் சக்திகளுக்க அழுத்தம் கொடுக்கும் வழிமுறையை நாம் கண்டாக வேண்டும். மேலும் துரத்தப்படுகின்ற மலைகய மக்களுக்கு நிலையான அரசியல் களத்தை கட்டியெழுப்புகின்ற களமாக மாகாண சபைகளை பயன்படுத்துவோமாக.
 
மலையக மக்கள் வெறுமனே வாக்கு இயந்திரங்கள் அல்ல. இந்த நாட்டின் குடிமக்கள். இவர்கள் அரசியல் சமத்துவம் உள்ள இன்னுமொரு பிரிவினர் என்பதை உறுதி செய்ய இத் தேர்தல் களத்தை பயன்படுத்துவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.