Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 விதவைகள் வடக்கு தேர்தலில் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02(350)(1).jpg
இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர். 

தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது, 

"பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை. 

இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம் பெற்றதாக பொய்ப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சவாலை வெற்றிகொள்வோம்' என்றார். 

'இன்று இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. மாகாணசபையினூடாக வடக்கிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை மிகவும் பலம்பொருந்தியவர்களாக மாற்றுவதாகும். அவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம். தேர்தல் சட்டத்துக்கு மதிப்பளித்து பிரசார நடவடிக்கைகளில் பெண்களே ஈடுபட்டு வருகின்றோம். ஆனால், யாழ்ப்பாணத்துக்குள் தேர்தல் சட்டம் மீறப்படுகின்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். 

'வட மாகாணசபை உருவாவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கென முன்வந்துள்ள கட்சிகள் எவையும் பெண்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் வேலைத்திட்டமொன்றை முன்வைக்கவில்லை' என்று விதவைகள் முன்னணியின் தலைவி தம்பிப்பிள்ளை இருதயராணி மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் சுயேட்சைக் குழுவான விதவைகள் முன்னணியின் உறுப்பினர்கள், அம்மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கி தேர்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

இனிப் போகுமிடமில்லை – நவநீதம்பிள்ளையை சந்தித்த பின்னர் அனந்தி செவ்வி

 
 ] ananthi-sasi.jpgபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரின் சரணடைந்து காணாமற்போன தனது கணவர் எழிலன் உள்ளிட்ட பெருமளவானோரை மீட்டுத் தருமாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், எழிலனின் மனைவி அனந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா முகவரகத்தின் பணியகத்தில், நடந்த குறுகியநேரச் சந்திப்பின் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனந்தி சசிதரன்,

“போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் எனது கவணர் உள்ளிட்ட, பெருமளவு போராளிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் வண.பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் தலைமையில் சரணடைந்தனர்.

அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இதனால் நாம் பெரிதும் துன்பமுற்றுள்ளோம் என்பதையும், அவர்களை மீட்டுத் தருமாறும் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

எனது கணவரை சரணடைந்த பின்னர், காணாமற்போனது குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முறையிட்டேன். அவர்கள் எந்தத் தீர்வையும் தரவில்லை.

நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்தேன். அதிலும் எந்த முடிவும் வரவில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளேன்.

மனிதஉரிமைகள் தொடர்பான உயர் பிரதிநிதியான நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் நாம் முறையிட்டுள்ளோம்.

நான் கூறியவற்றை அவர் உன்னிப்பாக கேட்டறிந்தார் என்பதை அவரது முகபாவனையில் இருந்து உணரமுடிந்தது.

காணாமற்போனோர் தொடர்பாக ஐ.நா சிறப்புக் கவனம் செலுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

காணாமற்போனவர்கள் தொடர்பாக அவர் ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.naamthamilar.ca/?p=232908.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.