Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை...? - இந்தி எம்.பி கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ?
ராஜ்யசபாவில் சீறிய 'இந்தி' எம்.பி!
 
 
20pzy84.jpg
 
 
 
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறப்புமிகு எம்.பி.யின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பேச்சால் திமுக தலைவர் கருணாநிதியே வியந்து போய் உடனடியாக அந்த எம்.பியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி தருண் விஜய், தமிழின் பெருமைகளை விளக்கிப் பேசப் பேச அத்தனை பேரும் - குறிப்பாக தமிழகத்து எம்.பிக்கள் வாயடைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தருண் விஜய் பேசுகையில், "வடக்கில் உள்ள எனது சகாக்கள் சிலரின் அடக்குமுறை, அராஜகம் மற்றும் பிடிவாதப் போக்கினால், உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை இந்தி பேசும் மக்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

ஏழு கடல்களையும் தாண்டிய பெருமை படைத்தது தமிழ் மொழி மட்டும்தான். அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் காணலாம். செம்மொழியான தமிழ் அத்தனை உச்சங்களையும் கொண்டுள்ள தனிப்பெரும் மொழி. காலங்கள் பலவற்றைத் தாண்டியும் இன்னும் சிறப்பாக உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும்தான்.

தமிழ் மொழியை கெளரவப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்பு இருக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழில் சிறப்பு பெறுவோருக்கு சிறப்பு பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

அதேபோல அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு தனியாக இருக்கைகளை அமைக்க வேண்டும். அனைத்து வட இந்தியப் பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பரப்ப மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திட்டமிட வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வட இந்திய புனிதத் தலங்களான கேதார்நாத் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் வந்துள்ளனர். மேலும் வட இந்திய, தென்னிந்தியா இடையே நல்லுறவும் இருந்துள்ளது

தேசியக் கவிஞராகப் போற்றப்படும் பாரதியார் தான் உண்மையிலேயே தேசிய ஒற்றுமையின் தலை சிறந்த அடையாளம். வட இந்தியர்களின் டர்பன் அணிந்து, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் பாரதியார்.

தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த பெருமைகள் உள்ளன. ஆனால் அந்தத் தகுதிக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் நாம் கொடுத்திருக்கிறோமா? என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை!" என்று வருத்தத்துடன் முடித்தார் தருண் விஜய்.

தருண் விஜய் பேசி முடித்ததும், தேன் மழை பொழிந்து நின்றது போல இருந்தது. அவரது பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் நடப்பது கனவா, நனவா? என்றே தெரியாமல் விய்ந்து போய் அமர்ந்திருந்தனர். பின்னர் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் மேசைகளைத் தட்டி தருண் விஜய்யைப் பாராட்டினர்.

முன்னதாக தனது பேச்சைத் தொடங்கியபோது தமிழகத்து எம்.பிக்களைப் பார்த்து "வணக்கம்" என்று சொல்லி விட்டு பேச்சைத் தொடங்கினார் தருண் விஜய்.

தருண் விஜய், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான பாஞ்சசன்யாவின் முன்னாள் ஆசிரியர் ஆவார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும் ஆவார்.

 
 
 
 
நாம் காண்பதும், கேள்விப்பட்டதும் நனவா?
 
சாதாரண வட இந்திய பொட்டிக் கடைகளிலும், வடக்கத்தியரிடமும் நாம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும்போது, அவர்கள் இடைமறித்து, "துமாரா கன்ட்ரி க்யா ஹை?" என இந்தியில் கேட்டு, ஏதோ அயல்கிரகப் பிராணியை பார்ப்பதுபோல மேலும் கீழும் விநோதமாக நோக்குவர்.
 
நாம் எரிச்சலின் உச்சத்தில் சொல்வது, "மேரா கன்ட்ரி தமிழ் நாடு ஹை...இந்தி நகி மாலும் ஹை!" இப்படிதான் எமது பேச்சுக்கள் அமையும். அவர்களும் வேறு வழியின்றி "You don't know Hindi..?" என்று கேட்டுவிட்டு, மனதிற்குள் திட்டிக்கொண்டே(????) ஆங்கிலத்திற்கு அரை மனதுடன் மாறுவர்!
 
அப்படிப்பட்ட இந்தி வெறியர்கள் மத்தியில், எங்கோ சம்மந்தமில்லாத வட மாநில எம்.பி. ஒருவர், தமிழுக்காக இந்தி பாராளுமன்றத்தில் பேசியது ஒருகணம் மெய்சிலிர்க்க வைத்ததுதான்.
 
அவரை மனதார பாராட்டுவோம். vil-fleurs4.gif
 
நன்றி,  திரு. தருண் விஜய்!
 

Edited by ராசவன்னியன்

அருமை வன்னியர்.

 

இந்தியா பெருமைப்பட என்று ஒன்று இன்றும் மிஞ்சி இருந்தால் அது தமிழ் மட்டும்தான். தமிழ்நாடுக் கோமாளிகள் ஓட்டை சிரட்டை கஞ்சிக்காக அடிபட டெல்லிகி போய்வந்தாலும், டெல்கியில், இந்தியாவுக்கு ஒரு பெருமை தன்னும் இன்னமும் மிஞ்சி இருக்கு என்று ஒருவர் தெரிந்து வைத்திருப்பார்க்க புல்லரிக்கிறது.

 

இன்னொரு தடவை தமிழனை கிந்தியம் மதராசி என்று கூப்பிடாமல் தமிழன் என்று கூப்பிடட்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தருண் விஜய் அவர்களுக்கு..

வட இந்தியாவில் மட்டுமல்ல. கனடாவில் வாழும் வடஇந்தியர் கூட தமிழ்நாட்டவர் இந்தி பேச வேண்டும் அல்லது பேசக்கூடியவர்கள் என எதிர்பார்க்கிறார்கள்.. தமிழ்நாட்டில் வசித்தவன் என்று சொன்னபோது எனக்குக் கிட்டிய அனுபவம்..!

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தமிழனை ஒர் கணித மேதையினூடக பார்க்க அந்த தமிழன் தன் இனத்தை கதை கதையாம் திரியில் மக்களை ஈர்த்த மகராசர் என்று உலகோடு தன் இனத்தையே ஒப்பிட்டு கேவலப்படுத்துகிற நிலையில்தான் இன்னும் இருக்கிறான்.

நன்றி தருண் விஜய்..ஆனால் இங்குள்ள ஆரிய, திராவிட, இந்திய அடிமைகள் தமிழை ஒழித்து ஆங்கிலத்தையும், சமசுக்கிருதத்தையும் மட்டுமே கொண்டுவர விரும்புகின்றனர்... பார்ப்பன செயாவின் ஆட்சியில் அரசுப் பள்ளியில் கூட தமிழ் இனி இருக்காது... ஆனால் , பீகாரி தன மகனை பீகாரி மொழியில் படிக்க வைக்க விரும்பினால் அத்துணை உதவிகளையும் செய்கிறது தமிழ்நாட்டு பார்ப்பன செயாவின் அரசாங்கம் ....

நீங்கள் பேசுவதைக் கேட்டு விழிபிதுங்கி நின்றார்களாம் பார்ப்பன செயாவின் அடிமைகள்... என்ன செய்வது... தமிழை தூக்கிப் பேசினால் அம்மாவிடம் செருப்படி வாங்க அவர்கள் தயாராக இல்லையே.... :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.