Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எங்கே?

Featured Replies

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

-நிதர்சனம்

  • தொடங்கியவர்

இன்னமும் செய்திகளை பதிவிடக்கூடிய விசேட உறுப்பினர் தகுதி கிடைக்காததால் அறிமுக பகுதியில் பதிவிட்டுள்ளேன். மன்னிக்கவும்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

http://www.nitharsanam.com/?art=20153

நிதர்சனம் இணையத்தில் இருந்தது என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை

இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி

வெளியாகி உள்ளது.. உண்மையா?

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கு புத்தியே இல்லையா. யாழில் சகல சர்வதேச நிறுவனப்பிரதிநிதிகளும் தங்கியுள்ளனர். மக்களை பாதுகாக்க..தங்களைப் பாதுகாக்க.. மக்கள் தங்கு முகாம்களை பாடசாலைச் சூழலில்..ஆலய சூழலில்...வைத்தியசாலைச் சூழல் ஏன் பல்கலைக்கழக வளாகம் என்று சர்வதேச செஞ்சிலுவையின் ஐநா அகதிகள் அமைப்பின் ஆதரவோடு நடத்த முனையலாமே. இவை மாணவர்களை மட்டுமன்றி..அனைவரையும் பாதுகாக்க உதவும்.

முன்னர் யாழில் யாழ் போதனா வைத்தியசாலைச் சூழலில் 500 மீற்றருக்கு சுற்றாடலுக்கு யுத்த சூனிய வலயம் அமைந்திருந்தது செஞ்சிலுவைச் சங்கத்தின் அணுசரனையோடு. இப்படியான நடைமுறைகளை..குடாநாட்டில் உடனடியாக மேற்கொள்ளத் தூண்டுவதே சிங்கள இராணுவத்திடம் இருந்து வரும் மனிதப் படுகொலைகளுக்கான அச்சுறுத்தலைக் குறைக்க வழி செய்வதோடு..அவர்களின் மனிதப் படுகொலைகளை சர்வதேச சமூகத்தின் முன் உடனுக்குடன் வெளிப்படவும் வகை செய்யும். வெறுமனவே மாணவர்களைக் காணவில்லை..மக்கள் படுகொலை என்று சம்பவங்களும் இழப்புக்களும் பெருக..கண்ணீரும் கருத்தும் சிந்திட்டு இருப்பது மக்களைப் பாதுகாக்க உதவுமா..இல்ல..சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர போராளிகளுக்கு உதவுமா..!

மக்களை இராணுவம் கேடயங்களாகப் பாவிப்பதை தடுப்பதே தற்போது..யாழில் புலிகளின் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது..! இதை யாழில் உள்ள மக்களும்..மாணவர்களும்..மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இந்திய இராணுவ நடவடிக்கைகளின் போது மக்களைப் பாதுகாக்க பாடசாலைகள் எங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு...அவை மக்கள் பரிகரிப்பு நிலையங்களாக தாக்குதலாளிகளுக்கு இனங்காட்டப்பட்டன.. தற்போது கொபி அனானின் கவனம்..படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பக்கம் திரும்பி உள்ள இந்தச் சந்தர்ப்பத்தை யாழில் உள்ள மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சர்வதேச அமைப்புக்களை நாடுவதே சிறந்தது..இழப்புக்களைத் தவிர்க்க உதவும்..! :idea: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.