Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்: பசில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
DSC_00762.jpg

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும’ என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

 

‘எதிர்கால சந்ததியினர் துப்பாக்கியும் சயனைட்டும் ஏந்தும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். அவர்களின கைகளில் புத்தகமும் கொப்பியும் கொடுத்து வளவான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முன்வாருங்கள்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுததார்.

DSC_00762.jpg

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடம் சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் யாழ். மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்’ என்று சுட்டிக்காட்டினார்.

 

‘கடந்த காலங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளுராட்சி சபைகள் சரியான முறையில் இயங்கவில்லை. இவ்வாறான உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கக்கூடிய பலமோ திறமையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல தங்களில் குறைபாடுகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை குறைகூறி வருகின்றார்கள். அரசாங்கம் தரவில்லை என்று கூறுகிறார்கள்.

 

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கடந்தகால தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற போதிலும் அவர்களால் மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளாததை அனைவரும் உணர வேண்டும்.

 

அமைதி, சுதந்திரம், அபிவிருத்தி மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வகையில் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவில் நிறுத்தி எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு எமக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றும் அமைச்சர் பசில் கேட்டுக்கொண்டார்.

 

‘கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன் கொழும்பைச் சேர்ந்தவர். அவருக்கு வடமாகாணத்தைப் பற்றியோ மக்களின் வாழ்வுநிலை பற்றியோ எதுவுமே தெரிந்திருக்க வாய்பில்லை. இப்படிப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அதன் முதலமைச்சர் வேட்பாளரும் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுத்தரமாட்டார்கள்.

 

இங்குள்ள விவசாயிகள் பற்றியும் கடற்றொழிலாளர்கள் பற்றியும் நான் நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன். ஆனால் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவதற்கு வாய்ப்பில்லை. தொண்டமானாறு மற்றும் அராலியில் உள்ள அணைக்கட்டில் எத்தனை கதவுகள் இருக்கின்றன என்பது முதலமைச்சர் வேட்பாளருக்கு தெரியுமா?

நாட்டின் 8 மாகாணங்களிலும் அந்தந்த மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அதனூடாக அதன் அதிகாரத்தை பெறுவதற்கு வடமாகாண மக்களிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்பினை முதன் முதலாக வழங்கியுள்ளார்.

 

கடந்தகால தேர்தல்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச சமூகமும், புலம்பெயர் உறவுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியினை பெற்று அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமென மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற்ற போதிலும் அவர்களால் இதுவரையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்று பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

 

http://tamil24news.com/news/archives/101665

தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்: பசில்

 

தீர்வு கணப்படவேண்டுமே  அதற்காகத்தானே இத்தனை போராட்டமும் நடந்தது  ......

நான் அறிந்தவரையில அந்தாளுக்கு மூளாயில் வீடு இருக்குது.. இவன் பாவி அந்தாளை கொழும்பாக்கிப்போட்டான்.. நானும் கொழும்பில கொஞ்சநாள் வசித்ததால என்னையும் கொழும்பான் என்பாங்களோ?! :)

 

தீர்வுகிடைத்தால் மட்டும்தான் கூட்டமைப்பு வீட்டுக்கு போகவேண்டியிருக்காலாம். தீர்வு கிடைக்காவிட்டால் கூட்டமைப்பு போகாது. தீர்வு 65 வருடமாக கிடைக்காததால் கூட்டமைப்பு மேலும் மேலும் வளர்கிறது. அதாவது பசில், "கூட்டமைப்பல்ல கூட்டமைப்பை வளர்க்கிறது; நானே தான்  கூட்டமைப்பை வளர்க்கிறேன்" என்கிறார். 2/3 பெரும்பான்மையை வைத்து நாட்டின் நீதியரசரயே பதவி நீக்கம் செய்யும் அரசு, 18ம் திருத்தத்தை கொண்டு வந்த அரசு தனக்கு எதிர் கடை இருக்கட்டும் என்ற தாராள மனப்பான்மையால் தீர்வைக்கொண்டுவராமல் கூட்டமைப்பை வளர்த்து வருகிறது. தேர்தலுக்கு முதல் அரசியல் அமைப்பு திருத்தம் என்று தெரிவுக்குழுவை அமைத்த அரசு அதை ஏன் கைவிட்டது. ஏன் சம்பிக்க அதிலிருந்து  பதவி விலகினார் என்பதையும் பசில் பேச வேண்டும். தேர்தலுக்கு முதல் தெரிவுக்குழு எதையும் செய்யாது என்பத்தால் சம்பிக்க பதவி விலகினார். அதாவது தேர்தலுக்கு முதல் தெரிவுக்குழு தமிழருக்கு தேவையானதை செய்ய தயாரில்லை என்றதை அல்லவா சம்பிக்கவின் பதவிலகல் சொல்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போ, தேர்தலுக்கு முதல் தீர்வு எதையும் கொண்டுவராமல், இவர்கள் அல்லவா கூட்டமைபை தேர்தலில் வெல்ல வைக்கிறார்கள்.  

 

இந்த மாதிரி மோடையாகளுக்கு பேசும் பேச்சுக்களுடன் வந்திறங்கி வடமாகாணத்தில் எதையோ சாதிக்கலாம் என்று நினைக்கிறார் பசில். மோடையாக்களுக்கான பேச்சை பேசி பேசி தெற்கில் சுதந்திர சோல்பரியின் அரசியல் அமைப்பிலிருந்து கெமுனு ராச்சியத்துக்க்கு போய் இருக்கிறர்கள். இது வடமாகாணத்திலும் எடுபடும் என்று நினைத்து அங்கும் பேசிப்பார்க்கிறார். 

 

பதவியில் தூங்க ஆசையே இல்லாத மகிந்த சித்தாந்த ஜனாதிபதி தனது பதவி காலத்தை 2க்கு மேலாக மாற்றினார். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. D.S.காலத்திலிருந்து பதவிக்கு வந்த எல்லா இலங்கைத் தலைவர்களும் தமது பதவி காலத்தை ஜனநாயகத்துக்கு முரணான வகையில் நீடித்தார்கள். எந்த சிங்கள தலைமையும் ஒழுங்காக ஜனநாயகத்தை மதித்து கதிரையை விட்டு போனதாக சரித்திரம் இல்லை. தோற்கடிபட்ட பின்னர் கூட சிலதுகள் ஒட்டியிருக்க பார்த்தன. சிறிமா தான் பதவிக்கு வரவிட்டால் UNP மீது பாய தாயார் செய்து வைத்திருந்த JVP வெறிநாய் தான் அவர் மீது பாய்ந்தது. இலங்கை ஆமி புரட்சியையும் கூட கண்டது.  இலங்கையில் பதவிப் பிசு புதிதாக ராசபக்சாகளுக்கு மட்டும் வந்த ஒன்றல்ல  ஆனால் கைமுணுவுக்கு கதிர்காம கந்தன் கனவில் கொடுத்த வாளைக் கண்டுபிடித்து அரசராகும் முயற்சி மட்டும் இதுவரையில் வேறு எந்த தான் தோன்றி சிங்களத்தலைமைக்கும் வராத பிசு.

 

தீர்வு வந்தால் தான் கூட்டமைப்பு வீட்டுக்கு போகும். ஆனால் வெளியார் வந்து தமிழீழத்தை பிரித்து தமிழருக்கு கொடுத்தாலும் தெற்கில் சிங்கள அரசர் துட்டகை முணு பதவியை விட்டு இறங்கத்தாரில்லை என்றதையும் தெற்கில் பசில்சொல்ல வேண்டும். அதாவது தமிழருக்கு கூட்டமைப்பை மீறி ஏதாவது தீர்வு வந்தாலும் இனி சிங்களவருக்கு தீர்வு வர ராசபக்சா அரசர் குடும்பம் அனுமத்திக்காது என்றதை பசில் தெற்கின் மாகாணங்களில் பேச வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.