Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sep 29 அன்று Toronto வில்: சுனிலா அபேசேகரா நினைவுகளுடன் தோழமையைக் கொண்டாடுவோம் நிகழ்வு

Featured Replies

நினைவுக்கூட்டம் நல்லபடி நடை பெற வாழ்த்துக்கள்.

நினைவுக்கூட்டம் நல்லபடி நடை பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போக முடிந்த கனடிய உறவுகள் போறது நல்லது!

 

நான் அங்கிருந்தால், கட்டாயம் போயிருப்பேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

  Sunila-abeyasekara-260913-CTC-seithy-150

அண்மையில் காலமான மனித உரிமைப் போராளியும், சிங்களக் கலைஞரும் , மிக நீண்ட நாட்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்து வந்தவருமான சுனிலா அபயசேகர அவர்களது வாழ்வையும் , பங்களிப்பையும் நினைவு கூறும் முகமாக நேற்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஒரு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வினை கனடியத் தமிழர் பேரவை ஒழுங்கு படுத்தியிருந்தது.

  

இந்நிகழ்வில் தமிழ் , சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நிகழ்விற்கு வந்தவர்களை கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் வரவேற்றுப் பேசினார். அதன் பின்னர் கவிஞர் சேரன் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு Amnesty International கனடா பிரிவைச் சேர்ந்த John Argue அவர்கள் உரையாற்றினார். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் , கருத்து சுதந்திரம் தொடர்பாக அவர்கள் நீண்ட காலம் இணைந்து பணியாற்றியவர்கள். அவரைத் தொடர்ந்து ஸ்கை ரோஸ் என்னும் சமூக நீதிக்கான நிறுவனத்தினுடைய ரொறொன்ரோ பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் Jim Davis அவர்கள் கருத்துக்களையும் தன்னுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

 

Jim Davis மிக நீண்ட காலமாக அவருடன் பழகியவர் மட்டுமல்ல , இலங்கையில் தமிழ் மக்களுடைய போராட்டத்திற்காகவும் , பல்வேறுபட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்காகவும் அயராது உழைத்து வருபவர். Jim Davis அவர்களின் பேச்சினைத் தொடர்ந்து இலங்கையின் மிக முக்கிய பத்திரிக்கையாளர் Shama Ranawana , ஊடகங்களில் சுனிலா தொடர்பான பங்களிப்பினையும் , இலங்கையின் மனித உரிமைகள் வன்னியத்திற்கான இயக்கங்களுக்கான முன்னோடியாக அவர் விளங்கியதைப் பற்றியும் . அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை நிறுவனமான infok என்பதைப் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார்.

 

Shama Ranawana அவர்கள் ஊடக சுதந்திரத்திற்காக பாடுபட்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Shama Ranawana அவர்களைத் தொடர்ந்து, சிங்கள இசைத்துறையில் முன்னோடியாகவும் , ஒரு வரலாற்றுப் புகழ் மிக்கவராகவும் கருதப்படும் Premasiri khemadasa என்ற சிங்கள இசைக்கலைஞருடைய மகளான Anupa Khemadasa உரையாற்றினார். Anupa Khemadasa மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். ஐரோப்பா , கனடா போன்ற பல நாடுகளிலும் அவருடைய இசைக்கச்சேரிகள் நடந்திருக்கின்றன. சுனிலாவின் மிக நெருங்கிய நண்பியான அனிதா அவர்கள் சுனிலா பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

 

அவரைத் தொடர்ந்து கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் உரையாற்றினார். டேவிட் பூபால பிள்ளையினுடைய குடும்ப நண்பராக சுனிலா விளங்கி வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். டேவிட் பூபாலபிள்ளை அவர்களைத் தொடர்ந்து மிகப் பிரபலமான சிங்கள நடிகரான Ajith Jinadasa அவர்கள் உரையாற்றினார். Ajith Jinadasa 26 க்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் நடித்தவர். புகழ் பெற்றவர்கள் இயக்கிய படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார். சுனிலாவுடன் நெருங்கிப் பழகியவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து சிங்களப் படங்களிலும் நடித்திருக்கிறார். அவரும் சுனிலாவைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்,

 

அடுத்ததாக சட்டத்தரணியும், கனடியத் தமிழர் பேரவையினுடைய சட்ட ஆலோசகருமான கரி ஆனந்த சங்கரி அவர்கள் சுனிலாவுடன் தொடர்ச்சியாக ஜெனீவா மனித உரிமை அரங்குகளிலும், பிற மனித உரிமை ஆணைக் குழுக்களிலும் பணியாற்றி வந்தமை பற்றி நெகிழக் கூடிய வகையில் உரையாற்றினார். இறுதியாக கவிஞர் சேரன் சுனிலாவைப் பற்றிய தன்னுடைய கவிதையை ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்தார்.

 

இத்துடன் அஞ்சலிக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

 

செய்தி - நவஜீவன் அனந்தராஜ்-

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(1)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(2)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(3)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(4)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(8)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(6)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(7)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-533

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93775&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.