Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 வடமாகாண சபைத்தேர்தல் உரிமைக்கான அங்கீகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2013 வடமாகாண சபைத்தேர்தல் உரிமைக்கான அங்கீகாரம்

 

cf96139d4b8610b1bdaf6552e41baf04.jpg சிறிலங்கா அரசாங்கத்தாலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்பார்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் கடந்த 21ம் திகதி முடிவடைந்த நிலையில்

சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் தெளிவான ஒரு செய்தியை வழங்கியுள்ளார்கள்.
 
 
யுத்தம் மக்களை தின்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற ஒரு தேர்தல் இது என்று தான் கூற வேண்டும். அதாவது  21ம் திகதி இடம்பெற்ற வடமாகணசபை தேர்தல் ஒரு இன சமூகத்தின் அங்கீகார அளவீடாக சர்வதேசத்தினால் கணிப்பிடப்பட்டதென்பதை யாவரும் அறிவோம்.
 
இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் அதிகப்படியாக மக்கள் வாக்களித்து வரலாற்று சாதனையாக மாற்றியமைத்த தேர்தல் என்றால் அரசிற்கு சாட்டை அடி கொடுத்த இந்த வடமாகாணசபை தேர்தலேயாகும்.
 
தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளபட்ட போதிலும் அவை அனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன
 
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை தவிர்த்ததைப் போல் வடக்கிலும் மக்கள் வாக்களிக்களிக்காமல் இருந்தால் வடக்கினையும் கைப்பற்றலாம் என்ற அரசின் கனவை மக்கள் தகுந்த பாடம் கற்பித்து பகல் கனவாக்கிவிட்டார்கள்
 
தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடியவர்கள் எந்த கால கட்டத்திலும் தங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை சர்வதேச சமூகத்திற்கு மிகவும் தெளிவாக பறைசாற்றியுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போரினை தந்திரமாக நசுக்கிய பின்னர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை கடந்த 21ம் திகதி இடம்பெற்ற  தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.
 
வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் இனவாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின்  கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்,
 
அவர்களின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய அரசாங்கத்திற்கு வட மாகாணசபைத் தேர்தல் மூலம் மக்கள் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்
 
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரின் உரிமைக்கான ஏக பிரதிநிதிகள் என்பதனையும் அவர்களின் கொள்கைகள் தமிழரின் தனித்துவத்திற்கான கோட்பாடுகள்  என்பதனையும் அரசிற்கும், சர்வதேசத்திற்கும் தமது வாக்குகள் மூலம் ஆணித்தரமாக் விளக்கியுள்ளனர்.
 
25 வருடங்களுக்கு பின்னர் நேற்று இடம் பெற்ற வாக்குப்பதிவினை தடுக்கவும் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களை திசை திருப்புவதற்கும் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கைக்கூலிகளும் சிவில் உடைகளில் களத்தில் இறக்கப்பட்டனர்.
 
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகிலும் சுமார் பத்து பதினைந்து இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களும் நிலைகொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்ட போதிலும் அதற்கும் அஞ்சவில்லை மக்கள்.
 
மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாக்களித்துள்ளனர் என்றால் அது தமிழ் தேசியத்தின் மீதான பற்று இன்னும் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை என்றால் மிகையாகாது.
 
இந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தமது வாக்குகளை சலுகைகளை வழங்கி ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்தின் பக்கம் திருப்பி இருப்பார்கள் என்றால் நிலமை வேறு  விதமாக அமைந்திருக்கும்அதாவது சுமார் அறுபது வருடங்களாக இடம் பெற்று வந்த தமிழரின் போராட்டங்கள், அவர்களின் அற்பணிப்புக்கள், தியாகங்கள் உயிரிழப்புக்கள் அனைத்தும் இலவு காத்த கிளியின் கதையாக அமைந்திருக்கும். மேலும் காணாமல் போன உறவுகளின் கதையும் இரும்புக் கம்பிக்குள் மௌனித்து மரணித்திருக்கும்.
 
அடுத்த படியாக ஆட்சியிலுள்ள மகிந்த தலமையிலான அரசாங்கம் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் தான் இருக்கின்றார்கள் எனவே தமிழ் மக்களுக்கு நாட்டில் எந்த  விதமான பிரச்சனைகளும் இல்லை அவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர், எமது ஆட்சியை தமிழ் மக்களும் ஏக மனதாய் ஆதரிக்கின்றனர்.
 
எனவே அவர்களுக்கு அரசியல்  தீர்வு தேவையில்லை என்ற கருத்தை சர்வதேசம் எங்கும் சொல்லியிருப்பார்.ஆனால் வடக்கு மக்கள் சலுகைகள் மற்றும் அபிவிருத்தி என்ற தொணிப்பொருளில் யாழ் அலங்கரிக்கப்படுகின்றமை அனைத்துமே சர்வதேசம் ஈழத்தமிழருக்கு வழங்கும் 
 
நிவாரணங்கள் மற்றும் ஒரு நாட்டின் அரசால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவேண்டிய வாய்ப்புகள் என்பதனை யாழ்மக்கள் நன்கு உணர்ந்தவர்கள் என்பதையும் மேலும் எமக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்குமாறும் அரசுக்கு மிகவும் ஆழமாக சொல்லிவிட்டார்கள்.
 
அத்துடன் தமிழ் மக்களுக்கு சிறிலங்காவில் பிரச்சனை இருக்கிறதா? இல்லையா?  என்ற சர்வதேசத்தின் உன்னிப்பான அவதானிப்பிற்கு கிடைத்த விடையே இந்த தேர்தல்.
 
25 வருடங்களின் பின் வடமாகாணத்தில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், 
 
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி   28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கே கிடைக்கப்பெறும். எனவே வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் கைப்பற்றி தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
 
வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக 21-09-2013 அன்று நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலை எதிர் கொண்டது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.
 
வடமாகாணத் தேர்தல், தந்திரோபாயத்திற்கும், அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமது உரிமையை வென்றெடுப்பதற்கான ஆணையை வடக்கு மக்கள் இட்டுள்ளனர்.
 
எனவே தமிழ் மக்கள் எதனை எதிர்பாத்து ஏகமனதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது பிரதிநிதிகளாக அங்கீகரித்து வாக்களித்தார்களோ. அவ் அரசியல் தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தர உழைக்க வேண்டும் .
 
அது ஒருபுறமிருக்க ஆட்சியுள்ள மகிந்த தலமையிலான அரசு வடக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்த உடன் எல்லா மாகாணசபைகளுக்கு பெறுப்பாக ஒரு அமைச்சரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. 
 
அவ்வாறு நியமிக்கப்படும் அமைச்சரின் கீழே வடமாகாண முதலமைச்சர்கள் செயற்பட வேண்டிய சூழ்நிலையினை உருவாக மகிந்த தலமையிலான அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது எனவே கால நேர சூழ்நிலையினை உணர்ந்து தமிழ் தலமைகள் சரியான திசை நோக்கி நகர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
 
 
 

தமிழன்

 

நன்றி - உதயனிணையம்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.