Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தீர்மானம் - சம்மந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரின் நிலைப்பாட்டுக்கு மக்கள் ஆதரவு என்பது ரொம்ப தப்பு அது தேர்தலுடன் போய்விட்டதாகவே நினைக்கிறேன்

 

கடந்த தேர்தலா? (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொன்னபின் வந்தது)...  இந்த தேர்தலா? (ரணிலுடன் சிங்கக் கொடியை ஆட்டியபின் வந்தது)... அடுத்த தேர்தலா? (மஹிந்த முன் சத்தியப் பிரமாணத்தின் பின் வரப்போவது)

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் சம்பந்த்ஹரை தூக்கியடிக்க தயங்குவானேன்?

அங்கே உள்ள எல்லோருக்கும் தெரியும் மக்களாதரவு சம்ப-சும-விக்னேஸ் நிலைப்பாட்டுக்கே என்பது.

இல்லையென்றால் இப்போதைக்கு சுரேஸ் பிச்சுகொண்டுபோயிருப்பார். கஜன் பொன்னரும் தேர்தலை புறக்கணிக்கும் நிலை வந்த்ஹிராது.

புலத்தில்தான் நாம் மக்கள் அபிபிராயம் பற்றிய தப்பபிப்பிராயத்தில் உள்ளோம்.

கடந்த தேர்தலா? (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொன்னபின் வந்தது)...  இந்த தேர்தலா? (ரணிலுடன் சிங்கக் கொடியை ஆட்டியபின் வந்தது)... அடுத்த தேர்தலா? (மஹிந்த முன் சத்தியப் பிரமாணத்தின் பின் வரப்போவது)

 

தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்படும் என்பதையும்  , சுய நிர்ணயம் ( உள்ளக சுய நிர்ணயம் தான். )  எண்று தேர்தல் அறிக்கையில்  கூட்டமைப்பு சொல்லி வாக்கு கேட்டது...  அதை சம்பந்தனும்  விக்னேஸ்வரனும்  கூட பேட்டியும் கொடுத்தார்கள்... 

 

ஆக சுய நிர்ணயம் , தேசியம் , தனித்துவம் எண்டதெல்லாம்  சிங்க கொடி பிடிக்கிறது தானா...??    அந்த சிங்கள் கொடி எந்த வகையிலை  தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்துகிறது.... ??? 

 

எங்கட தலைவர் பேட்டி ஒண்றில் சொன்னார்  கூட்டணியினருக்கு தேர்தல் வரும் போது தான் தமிழர்களின்  விடிவு ,  சுதந்திரம் பற்றி எல்லாம் ஞாபகம் வரும்  அது மாநகரசபை தேர்தல் எண்டாலும் ஜனாதிபதி தேர்தல் எண்டாலும் சரி ஒண்டுதான்...  இப்படியே மக்களை ஏமாற்றும் கூட்டம்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக சுயநிர்னயத்துடன், ஒன்று பட்ட இலங்கைக்குள், இலங்கை தேசியக்கொடி, இலச்சினை, தாரை தப்பட்டையுடன் கூடிய தீர்வு. இதைதான் கூட்டமைப்பு சொன்னது. இதுக்குதான் மக்களும் வாக்களித்தனர்.

உள்ளக சுயநிர்னயத்துடன், ஒன்று பட்ட இலங்கைக்குள், இலங்கை தேசியக்கொடி, இலச்சினை, தாரை தப்பட்டையுடன் கூடிய தீர்வு. இதைதான் கூட்டமைப்பு சொன்னது. இதுக்குதான் மக்களும் வாக்களித்தனர்.

 

உரிமை போர் எண்டு எதை குறிப்பிடுகிறார்கள்...??  சிங்க கொடி பிடிச்சு மகிந்தவுடன் சமரசம் செய்வதையா...??

 

  • கருத்துக்கள உறவுகள்

கொசு அடிக்கும் மாகாண அதிகாரமே தர மறுக்கும் அரசுடன், சமஸ்டி உரிமை கோரி நடத்தும் உரிமை போராட்டம்.

நீங்கள் உரிமைப்போர்= தனிநாட்டுப்போர் எண்டு உங்கபாட்டில அர்த்தம் கொண்டா அதுக்கு சம்பந்த்ஹர் பொறுப்பல்ல.

6ம் திருத்தத்துக்கமைய தேர்தலில் போட்டியிடும் இந்த்ஹிரராசா உரிமை போர் எண்டு தனிநாட்டை சொன்னார் எண்டு நீங்கள் நினைப்பது உங்கள் அப்பாவித்தனம்.

கொசு அடிக்கும் மாகாண அதிகாரமே தர மறுக்கும் அரசுடன், சமஸ்டி உரிமை கோரி நடத்தும் உரிமை போராட்டம்.

நுளம்புக்கு மருந்து அடிக்கும் அதிகாரம் இல்லாமல் தானா அந்த அமைச்சுகளுக்கு முதலமைச்சர் முதல் உறுப்பினர்கள் எல்லாம் அடிபட்டவை... எதுக்கு மகிந்தவோடை விருந்து எல்லாம் சாப்பிட்டு படம் எல்லாம் எடுத்து காட்டினவை...

நுளம்பு மருந்து அடிக்க பம்பு இல்லை எண்டதை சொல்லவோ...??

நீங்கள் உரிமைப்போர்= தனிநாட்டுப்போர் எண்டு உங்கபாட்டில அர்த்தம் கொண்டா அதுக்கு சம்பந்த்ஹர் பொறுப்பல்ல.

6ம் திருத்தத்துக்கமைய தேர்தலில் போட்டியிடும் இந்த்ஹிரராசா உரிமை போர் எண்டு தனிநாட்டை சொன்னார் எண்டு நீங்கள் நினைப்பது உங்கள் அப்பாவித்தனம்.

என்னை கண்டது தனிநாடு கேட்டம் எண்ட உணர்வு உங்களுக்கு வந்தது மகிழ்ச்சியே... ஆனால் அதை நான் இங்கை கேக்க இல்லை...

கேட்டது உரிமை இல்லை எண்டால் பெறும் வளி போராடுதலா இல்லை காலிலை விழுதிறதா...??

நீங்கள் எல்லாம் உரிமை வேணும் எண்டால் கொலை செய்த எதிரியோடை விருந்து சாப்பிட்டு தான் செத்த வீட்டு செலவுக்கு காசு வாங்குவியளோ...??

பிறகு டக்கிளஸுக்கும் , கருணாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்....?? புதுசா ஆரம்பிக்கிற உங்களை விட ஏற்கனவே இருக்கிற டக்கிளஸ் என்ன குறைச்சல்...??

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், இதெல்லாம் எப்போதோ எதிர்பார்த்ததே, மற்றப்படி இதில் கவலைப்பட எதுவுமில்லை. உங்க கனக்கக் கதைக்கிறவை கடந்தகாலத்தை மறந்துவிட்டார்கள். அமிர்தலிங்கத்தாருக்கு இரத்தப்பொட்டு வைத்து எதிர்க்கட்சியாக்கி பாராளுமன்றம் அனுப்பியும் எந்தவிதமான விடுதலைச்சிந்தனையே இல்லாது கதிரைகளுக்குப் பாரமாக இருந்துவிட்டு ஜப்பான் ஜீப்புக்களில் வலம்வந்ததால்தான் இளைஞர்களை முள்ளிவாய்கால் வரைக்கும் காலம் கொண்டுவந்த அவலம் நடந்தேறியது. இதுபோல் எதிர்காலத்திலும் இவர்களே இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்குக் காரணமாக இருப்பார்கள். இணக்க அரசியல் அபிவிருத்தி இவைகள் புலத்துத் தமிழர்க்குத் தேவையெனில் டக்ளசுக்கும் அங்கயன் ராமநாதனுக்கும் ஓட்டுப்பொட்டிருப்பினம் எனும் சிந்தனைகூட இல்லாது கூத்தமைப்புக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு கனக்கப்பேர் வருகினம். கடந்தகாலங்களில் அமிர்தலிங்கம் வகையறாக்கள் செய்த தவறினை சம்பந்தனும் அவரது அடிப்பொடி சுமந்திரனும் விக்கு வினாயகமும் செய்து  மிகப்பெரிய அவலம் ஒன்றினை தமிழ்மக்கள் இவர்களை கொம்புசீவிவிட்ட குற்றத்துக்காகப் பரிசாகத் தரப்போகிறார்கள். இவர்களால் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இன்றல்லாது விடினும் இனிவரும்காலங்களில் உருவாகும்.

 

புலம்பெயர் தேசத்தில் விடுதலை வேண்டுவோர் களமிறங்கி வரும் துன்பங்களை தாங்கி களப்பலியாகி ஒரு நேரிய பாதையில் செல்லக்கூடிய அரசியல் களத்தினை ஏற்படுத்தாது புலத்திலுள்ளோரைமட்டும் நம்பி விடுதலை நோக்கிய வேள்வியை செவ்வனே செய்யமுடியாது. காரணம் எண்பதிகளில் சப்றாயுனிக்கோ எனும் நிதி நிறுவனத்தை நடாத்தி தமிழர்களது பெரும்தொகையான பணத்தைச் சுவாகாசெய்த தற்போதஒய செய்தி வியாபாரி சரவணபவனை எப்போது கூத்தமைப்பு உள்வாங்கியதோ, புலத்தில் அன்றே தங்கள் திருகுதாளங்களை மறைப்பதற்கான ஊடக தளத்தினை ஏற்படுத்தி விட்டார்கள். தவிர, லங்கஶ்ரீ எனும் பெயரில் சிங்களத்தியை பங்காளராகக்கொண்ட புலம்பெயர் செய்திஊடகம் தற்போது வக்குரோத்துத் தனமாக தனிநபர்களை குறிவைத்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது இவ்வூடகம் அண்மைக்காலங்களில் தங்களது எஜமானது அரசியல் இருப்பை நியாயப்படுத்த கேவலமான சொற்பிரயோகங்களுடன் சிவாஜிலிங்கம் அவர்களை விமர்சித்துள்ளது.

 

தெர்தல் பிரச்சார மேடைகளில் இராணுவத்தை வடபகுதியிலிருந்து அகற்றுவோம் எனக்கூறு ஓட்டுப்பொறுக்கி, இப்போது இரணுவத்தைக் குறைப்பதற்காக மகிந்தவிடம் மன்றாடுவோம் எனக்கூறுமளவுக்கு இணக்க அரசியல் வந்து, கடைசியாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாம் உத்தேசித்துள்ளோம் எனும் பதத்தினைபாவிக்கவேண்டிய நிலைக்கு மூடிய கதவுப்பேச்சுவார்தை கொண்டுவந்திருக்கு. அதாவது அரசாங்கத்துடன் இணைந்து, பாரம்பரிய பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங்களி ஏற்படுத்துதல் உயர்பாதுகாப்புவலையம் எனும்பெயரில் தமிழர் பிரதேசங்களைத் துண்ணாடுதல், தமிழ்ப்பெண்டிர்களுக்குக் கட்டாயக் கருத்தடைசெய்தல், தமிழர் நிலங்களைப் பல்தேசியக்கம்பனிக்குத் தாரைவார்க்கிறோமென அவற்றைக் கபளீகரம் செய்தல், புத்தர்கோவில்களைக் கட்டுதல் இவைபோன்ற தமிழர் இனவழிப்பில் ஈடுபடுவோம் எனவும் பொருள்கொள்ளாம்.

 

எட தமிழா இக்கேடுகெட்ட கூத்தமைப்பை நம்பாதே என நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். இவர்களை நம்பினால் இன்னுமொரு முள்ளிவாக்காலைத் தமிழர்காக தயார்செய்வார்கள்.

 

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் சேர் பொன் இராமநாதன் அருணாச்சலம் வரிசையில் விக்கு வினாயகமும், இருக்குது அதற்கான இக்கால உதாரணம் மன்மதராசா எனும் இவரது மச்சினனது திருவிளையாடல்கள். கோழி பகை குஞ்சு உறவு என்று இதைத்தான் சொல்லுறது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.