Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுதிய தமிழ் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுதிய தமிழ் கடிதம்

16 அக்டோபர் 2013


மனோ கணேசன்
தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
ஏற்பாட்டாளர் - மக்கள் கண்காணிப்பு குழு
தலைவர் - மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு
இணைத்தலைவர் - அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம்

கௌரவ சி. வி. விக்கினேஸ்வரன்
முதலமைச்சர் - வட மாகாணசபை
வடக்கு மாகாணசபை செயலகம்
யாழ்ப்பாணம்

அன்பின் ஐயா,

விடயம்: தமிழ் தடுப்பு காவல் மற்றும் சிறைகூட கைதிகள்

வடக்கு மாகாணசபை தேர்தலுடன் ஆரம்பித்த மேலதிக உறுப்பினர் மற்றும் அமைச்சரவை பதவிநிலை நியமன பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன என நான் நம்புகின்றேன்.

இந்நிலையில் நிரந்தரமான தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, சர்வதேச சமூகத்தின் துணையுடன் அரசாங்கத்துடன் ஒரு பரப்பில் நின்று பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அதேவேளையில், வடமாகாண முதல்வர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் என அன்புடன் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மனிதாபிமான விடய வரிசையில், மிக நீண்ட காலம் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினை முன்னுரிமை பெற வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பை தெரிவித்து கொள்வதுடன், இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நான் எழுதியுள்ள ஆங்கில கடிதத்தின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இந்த கைதிகளுக்கு (01) பொது மன்னிப்பு அல்லது (02) சட்டரீதியான பிணை ஆகிய ஏதாவது ஒரு அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுவதே தமிழ் கைதிகளினதும், கைதிகளின் குடும்ப உறவுகளினதும் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்பதை தெரிவித்துகொள்கின்றேன்.

வட மாகாணசபை தேர்தலை அடுத்து நாட்டில் தலையெடுக்க தொடங்கியுள்ள புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் நமது சமூகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்டு, நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கும் பெற்று தரப்பட வேண்டும் என நான் மிக உறுதியாக நம்புகின்றேன்.

நமது இனத்தின் விடுதலை நோக்கில் நேரடியாகவும் , மறைமுகமாகவும், தாம் நம்பிய வழியில் சென்றுவிட்ட காரணத்தால் இன்று சிறைகூடங்களில் தமது ஆயுளின் கணிசமான பெரும் பகுதியை கழித்து கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு சுதந்திரத்தை பெற்று தருவதற்கு உங்கள் பதவி அங்கீகாரத்தை பயன்படுத்தி ஆவன செய்வீர்கள் என் நம்புகின்றேன்.

நன்றி.
இங்ஙனம்

மனோ கணேசன்
தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி
திகதி: 16/10/2103/புதன்கிழமை/கொழும்பு

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97739/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனின் அரசியல் கைதிகள் தொடர்பான முதன்மையான இந்தக் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

அரசியல் கைதிகளின் விவகாரம்  தொடர்பில்,  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், வட மாகாண முதல்வர் விக்ணேஸ்வரனுக்கும் தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில்  அவர் இதனை கோரியுள்ளார்.

 

ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம்

 

'அரசியல் நோக்கங்களுக்காக குற்றங்கள் புரிந்தார்கள் என்ற அடிப்படையில் நீண்ட நாட்களாக பெருந்தொகையானோர் சிறைகூடங்களிலும், தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட புதிய ஆரம்பத்தின் அடிப்படையில் இந்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் யுத்தத்திற்கு பிந்திய கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

அது மட்டும் அல்ல, சிறைக்கூடங்களில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாகவும், நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்து நோய்வாய்ப்பட்டதன் காரணமாகவும் பல கைதிகள் உயிரிழக்கவும் கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

வடமாகாணசபை தேர்தலையடுத்து இன்று புதிய ஒரு ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மகிழ்ச்சியின் அடையாளங்கள் வடக்கிலும், தெற்கிலும் தோன்றியுள்ளன.

இந்த மகிழ்ச்சியை, அரசியல் நோக்கங்களுக்காக குற்றம் புரிந்தார்கள் என்ற அடிப்படையில்  நீண்ட நாட்களாக சிறைகூடங்களிலும், தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்ட கைதிகளுக்கும் பெற்று கொடுக்குமாறு கேட்டு கொள்கின்றேன். 

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் நடைபெற வேண்டும் என நீங்கள்  கூறியுள்ளீர்கள். உங்கள் கருத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.

இது தொடர்பான பொதுவான ஒரு நிலைப்பாடு அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில்  விரைவில் உருவாகும் என நான் நம்புகின்றேன். 

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற அம்சம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் அதேவேளையில் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில் தீர்வுகள் காண்பதற்கு நீங்கள் வட மாகாண முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

இந்த வரிசையில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஆணையாளர்களின் அறிக்கை சிபாரிசுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நீண்டக்காலம் சிறைகளில் இருக்கும் கைதிகளின் பிரச்சினை முதலிடம் பெறவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இந்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அல்லது சட்டரீதியான பிணை ஆகிய ஏதாவது ஒரு அடிப்படையில் நிவாரணம் வழங்குமாறும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டுகொள்வதுடன், இந்த மனிதநேய விவகாரம் தொடர்பில் தேவையான ஒத்துழைப்பை உங்கள் நிருவாகத்துக்கு வழங்குவதற்கு நாங்கள் தயார்  எனவும் தெரிவித்துகொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.