Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தவருக்காய் சட்ட சபயில் கலைஞர் உருக்கம்

Featured Replies

ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்!

ஆகஸ்ட் 19, 2006

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு, தொப்புள் கொடி உறவு. இந்த உறவு,நமது சகோதர, சகோதரிகள் இலங்கையில் கொல்லப்படுவது நமக்கு இனிப்பான செய்தி அல்ல என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உருக்கமாக தெரிவித்தார்.

இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதிமுக தலைவர் கண்ணப்பன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், முல்லைத் தீவில் 61மாணவிகள் இலங்கை ராணுவத்தால் குண்டு வீசிக் கொல்லப்பட்டது குறித்து இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என இலங்கை துணைத் தூதரகம் கூறியிருக்கிறது. இலங்கைக்கு பாகிஸ்தான், சீனாஆகிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகிறது. அமெரிக்கா தனது தூதரை இலங்கைக்கு அனுப்பி அந்த நாட்டு அதிபருடன் பேச வைத்துள்ளது.

இப்படி பல சம்பவங்கள அடுத்தடுத்து அங்கு நடந்து வருகின்றன.இதை நமது மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது திரிகோணமலையில் அமெரிக்க தளம் அமைக்க எடுத்த முயற்சியை தடுத்தார்.

இப்போது மீண்டும் திரிகோணமலையில் கால் ஊன்ற அமெரிக்கா முயலுகிறது. மாணவிகள் கொல்லப்பட்டதை ஐ.நா. பொதுச் செயலாளரே கண்டித்துள்ளார். ஆனால் இந்திய அரசு மௌனமாக இருப்பது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

இந்திய கடற்படை இலங்கைக்கு உதவியுள்ளது. ரேடார் வசதிகளையும் நமது அரசு கொடுத்துள்ளது. ஆனால் இந்த வசதிகளை தமிழர்களை அழிப்பதற்கு இலங்கைக்கு உதவியாக அமைந்து விட்டது என்றார்.

இதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், ஈழத்தமிழர்பிரச்சினையை 2 விதமாக பிரிக்கலாம். ராஜீவ் காந்திக்ககு முன்பு, ராஜீவ்காந்திக்குப் பின்பு. ராஜீவ்காந்திக்கு பின் என்ற நிலைவராமலிருந்திரந்தால் ஈழத்தமிழர்களின் நிலையே இன்று வேறாகி இருக்கும்.

1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத தேர்தலில் திமுக வெற்றி பெற்று நான் முதல்வராகப் பொறுப்பேற்றேன். மரியாதை நிமித்தமாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியை சந்திக்க நான் டெல்லி சென்றேன். முரசொலி மாறனும் உடன் வந்திருந்தார்.

அப்போது ராஜீவ் காந்தி, என்னிடம், இலங்கைப் பிரச்சனையை நீங்கள் தீர்கக வேண்டும். வவுனியாவுக்கு நீங்களும், முரசொலி மாறனும், கோபால்சாமியும் (வைகோ) சென்று பிரபாகரனை பார்த்து முடிவு எடுத்து வாருங்கள் என்றார். இதறகான விமான வசதி, போக்குவரத்து ஏற்பாடு செய்துதருவதாகவும் கூறினார்.

செந்னை சென்று தெரிவிப்பதாக கூறினேன். அப்போது ராஜீவ்காந்தி பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். சென்னை திரும்பினேன். அதற்குள் கோபால்சாமி எனக்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு வவுனியாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு என்னென்னவோ நடந்து விட்டது. ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் ரத்தம் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் இந்தியாவில் இருந்து எழுந்த உணர்ச்சி மாய்ந்து போயின. இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் நமது இதயம், தொப்புள் கொடி உணர்வு உள்ளவர்கள். சிறுவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியது சரியானதுதான்.

அந்த தீர்மானத்தை இந்த அவையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறோம். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பற்கு இது ஒரு உதாரணம். தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தது தவறு என்றால் அந்தத் தவறை திரும்ப திரும்ப செய்துகொண்டு தான் இருப்போம்.

இலங்கை அரசின் கவனத்தை கவர தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக இலங்கை தூதரகம் கூறியுளளது. இத்தீரமானத்தை கொண்டு வருவதால், இறந்தவர்கள் பிழைத்து விடமாட்டார்கள். என்றாலும் இலங்கை அரசின் கவனத்தை மட்டுமல்ல, இந்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு வரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் நடவடிக்கை என்ன எடுப்பது, எப்படி அணுகுவது என்பதை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்றார்கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2006/08.../19/karuna.html

  • தொடங்கியவர்

இலங்கை பிரச்சினை: ராஜீவ்காந்திக்கு முன்-பின் என பிரித்து பார்க்க வேண்டும்: சட்டசபையில் கருணாநிதி விளக்கம்

சென்னை, ஆக. 19-

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை முல்லைத்தீவில் 61 மாணவிகள் சிங்கள ராணுவத்தால் குண்டு வீசி கொலை செய்யப் பட்டது குறித்து இந்த அவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த இலங்கை அரசின் தென்னிந்திய துணைத் தூதரகம் திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்று கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தனது தூதரை அனுப்பி இலங்கை அதிபரிடம் 2 மணி நேரம் பேச்சு நடத்தி இருக்கிறார். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங் கள் கொடுத்து வருகிறது. இந்திய அரசு இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்திரா காந்தி பாரத பிரதமராக இருந்த போது திரிகோணமலையில் தளம் அமைக்க எடுத்த முயற்சியை கண்டித்தார்.

இப்போது மீண்டும் அமெரிக்கா திரிகோணமலை வட்டாரத்தில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறது. மாணவிகள் கொலை செய்யப் பட்டதை ஐக்கிய நாட்டு செயலாளர் கோபி அனன் கண்டித்துள்ளார்.

ஆனால் நமது நாடு எச்சரிக்கை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்திய கடற்படை உதவி செய்தது இலங்கைக்கு ரேடார் வழங்கியது. ஆகியவை இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை அழிப்பதற்கு மேலும் உதவுவதாக அமைந்து விட்டது.

திரிகோணமலை வட்டாரத் தில் தமிழர்கள் அனாதை யாக்கப்பட்டிருக்கிறார்கள். அரிசி, உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை.

எனவே தொண்டு நிறுவனங் கள் மூலம் இவற்றை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் மாநில அரசும் இதற்கு உதவ வேண்டும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி:- இந்த பிரச் சினை மிகவும் முக்கியமான பிரச்சினை என்றாலும் எந்த அளவுகோல் கொண்டு தீர்மானிப்பது, விமர்சிப்பது என்ற நிலை. ஈழ தமிழர் பிரச்சினையை 2 விதமாக பிரிக்கலாம். அது ராஜீவ்காந்திக்கு முன் ராஜீவ்காந்திக்கு பின்.

ராஜீவ்காந்திக்கு பின் என்ற நிலை வராமலிருந்திருந்தால் ஈழத்தமிழர்களின் நிலையே இன்று வேறாகி இருக்கும்.

1989-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நான் முதல்வராக பொறுப் பேற்றேன். மரியாதை நிமித்தமாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியை சந்திக்க நான் டெல்லி சென்றேன். முரசொலி மாறனும் வந்திருந்தார்.

அப்போது ராஜீவ்காந்தி என்னிடம் இலங்கை பிரச்சினையை நீங்கள் முன்னின்று தீர்க்க வேண்டும். இலங்கை வவுனியாவுக்கு நீங்களும், முரசொலி மாறனும், கோபால்சாமியும் சென்று வவுனியாவில் பிரபாகரனை சந்தித்து பேசி ஒரு முடிவு எடுத்துவாருங்கள் என்று கூறினார். இதற்கான விமான வசதி, போக்குவரத்து ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார். மீண்டும் ராஜீவ்காந்தியை சந்தித்து விட்டு சென்னை சென்று தெரிவிப்பதாக கூறினேன். அப்போது ராஜீவ்காந்தி பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். எனக்கே ஆச்சரியம்.

சென்னை திரும்பினேன். அதற்குள் கோபால்சாமி எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வவுனியாவுக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு என்னென்னவோ நடந்து விட்டது. இலங்கை அரசிலும் பல்வேறு பிரச்சினை எனவே எடுத்த முயற்சியில் தடங்கள் ஏற்பட்டுவிடாது என்றாலும் அந்த முயற்சியை தொடரும்படி ராஜீவ்காந்தி என்னிடம் கூறினார். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் ரத்தம் சிந்தவேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து எழுந்த உணர்ச்சி மாய்ந்து போயின. ஜெயலலிதா இந்த சபையில் கோபத்தோடும் வெறுப்போடும் இந்த பிரச்சினையை அணுகினார். இதே மனநிலை எல்லோருக்கும் இருந்தது.

இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் நமது, இதயம், தொப்புள் கொடி உணர்வு உள்ளவர்கள். அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியது சரியானதுதான். அந்த தீர்மானத்தை இந்த அவையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறோம். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தது தவறு என்றால் அந்த தவறை செய்து கொண்டுதான் இருப்போம். இலங்கை அரசின் கவனத்தை கவர தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக இலங்கை துணை தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வருவதால் இறந்தவர்கள் பிழைத்துவிட மாட்டார்கள். என்றாலும் இலங்கை அரசின் கவனத்தை மட்டுமல்ல இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை என்ன எடுப்பது, எப்படி அணுகுவது என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

http://www.maalaimalar.com/asp/news/dis_ne...sp?artid=147366

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றுவதை எவராலும் தடுக்கமுடியாது”

[வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 00:44 தமிழீழம்] [கனகசபை]

""விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியே தீருவார்கள். அதனை எவராலும் தடுக்க முடியாது ""என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தர்மபுரியில் இடம்பெற்ற மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு வைகோ மேலும் தெரிவிக்கையில்: கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள நிலவரங்களை கண்டறிய நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்றேன். அங்கே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் சிங்கள இராணுவம் பிடித்து விட்டதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை தெரிந்து கொண்ட கருணாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடைய சுப்பிரமணியம் என்பவரை தொடர்பு கொண்டு எங்கள் நிலை குறித்து கேட்டார்.

"எங்களை இராணுவம் சுற்றி வளைத்த செய்தியை தெரிந்துகொண்ட கருணாநிதி நான் உயிரோடு திரும்ப மாட்டேன் என முடிவு செய்து கொண்டார். அதன் பின்னர் தான் நான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அந்தக்கடிதத்தில் நான் சிங்கள, இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், கடுகளவும் தி.மு.க.,வுக்கு களங்கம் விளைவிக்காமல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என தெரிவித்து இருந்தேன். தற்போது 17 ஆண்டுக்கு பின் பொய்யான தகவல்களை கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு இலங்கை பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண முடிவு செய்திருப்பதை நான் கெடுத்து விட்டதாக கருணாநிதி பொய் சொல்லி வருகிறார். இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை. எதிர்வரும் 30 ஆம் திகதி சென்னையில் இலங்கை துõதரகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்øகத்தமிழர்களுக்கு பாதுகாப்புக்கோரி சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். இவ்வளவும் ஈழத்தமிழர்களுக்காகத் தான். சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

http://www.nitharsanam.com/2006/08/25/50448.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.