Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநராக இராணுவ அதிகாரி இருப்பதை நாம் விரும்பவில்லை- முதலாவது அமர்வில் விக்னேஸ்வரன் -

Featured Replies

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, அதேபோல வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதையும் நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர வேண்டும் என நாங்களும் மக்களும் விரும்புகின்றோம் என வட மாகாண சபையின் முதலாவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை காலை உரையாற்றும்போது தெரிவித்தார்.

இன்று காலை கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடமாகாணசபை கட்டிடத்தை வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் திறந்து வைத்தனர்.  வடமாகாண கொடியினை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சிறிலங்கா தேசிய கொடியினை ஆளுநர் சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வுகளில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாகாணசபையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதன் போது சபையின் தவிசாளராக சீ.வி.கே.சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

சபை நிகழ்வுகள் ஆரம்பமானதும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வட மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இடம்பெற இனிமேல் அனுமதிக்க முடியாது. அத்துடன் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.  வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வினை விரைவில் காணவுள்ளது.

போருக்கு பிந்திய வடக்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச சமூகம் வட பகுதி தமிழ் மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.

வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது. 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தேர்தல் ஆணையாளரை அரசாங்கம் வழிநடத்த வேண்டும்.  13வது திருத்தச் சட்டம் ஓட்டைகள் நிறைந்த பாத்திரம் போல இருக்கின்றதை உணர்ந்திருந்த போதும், நாங்கள் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம்.

இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது என்றார்.

வடக்கில் இராணுவப் பாவனைக்காக காணி அபகரிக்கப்படுவதை நிறுத்தி, அந்தக் காணிகளை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான கால அட்டவணை ஒன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டும்.

தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை புரியாத பொலிஸார் வடக்கில் இருப்பது, அன்றாட வாழ்க்கைக்குத் தடையாகும். எனவே உள்ளூரில் இருந்து பொலிஸார் தெரிவுசெய்யப்பட வேண்டும். வடமாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடு, முன்னேற்றம் தொடர்பில் காலம்தோறும் ஆராயப்படும். இலஞ்ச ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

மக்கள் சேவையை மதிக்காத அலுவலகர்கள் கண்டறியப்பட்டு சீர்திருத்தப்படுவர். வடமாகாண ஆளுனர் கடந்த தேர்தல் காலத்தில் பக்கச் சார்பாக செயற்பட்டார். தென்னிந்திய மக்கள், கட்சித் தலைவர்களின் பங்கை பெரிதும் விரும்புகிறோம். தென்னிந்திய இளைஞர், யுவதிகளின் வேகம் எங்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றது. அந்த சேவையை நாம் மறக்கவில்லை.

1990ம் ஆண்டுகளில் வடக்கில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதில் அக்கறையெடுப்போம்.  நாங்கள் பிரிவினைவாதிகள் இல்லை என்பதை தெற்கில் உள்ள சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடமாகாண சபை எதிர்த்தரப்பு நண்பர்களுக்கு நேசக்கரம் நீட்டுகிறோம். அவர்கள் எம்மோடு இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இராணுவ அடக்குமுறையின் கீழ் நடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். வடக்கில் துறைமுகங்கள் அமைத்து அண்டைய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வோம்.  இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.np8.jpgnp9.jpgnp7.jpgnorth-province.jpgnorth-province-1.jpgnorth-province-2.jpgnorth-province-3.jpgnorth-province-4.jpgnorth-province-5.jpgnorth-province-6.jpgnorth-province-7.jpg

 

- See more at: http://www.thinakkathir.com/?p=53386#sthash.Ksi5bIYq.dpuf

விக்கினேஸ்வரன் அவருக்கு பொடிகாட் ஆக திரியப்பார்க்கும் அந்த பாறங்கல்லு மண்டையை திருப்பியெடுக்க வைக்க வேண்டும். யாழ்ப்பூங்காவில் அவருக்காக கட்டப்பட்ட மாளிகையை, மாகாண, மாநகர சபை உடமையாக்க வேண்டும்.

விக்கினேஸ்வரனின் பேச்சு கேட்டேன் .மிக சிறப்பாக இருந்தது ,தொட வேண்டிய இடமெல்லாம் தொட்டிருந்ததுதான் அதில் விசேடம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை.. விக்கி நிற்கும் போட்டோவில் சிங்கக்கொடி பறக்குது.. சும்மா விடலாமா? புறப்படு தமிழா.. புறப்படு.. கீபோர்ட்டை உடைத்திடு..

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.