Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகள். தொகுத்து நூலாக்குங்கள் சுபேஸ்.

நன்றி அக்கா.. கவிதகளை நூலாக்கும் எந்த திட்டமும் இல்லாமல்தான் இருந்தேன்.. ஆனால் எங்குமே வெளிவராத என் சிறுகதைகளை நூலாக்கும் திட்டமிருந்தது.. ஆனால் என் கவிதைகளை வன்னிமண்ணிண் கவிதைத்தோழன் ஒருவன் தானே நூலுருவாக்கி வெளியிடுகிறான் அக்கா.. அடையாளம் ஏதுமற்றவன் சிறுகதை எழுதி வெளியிட்டால் எவன் வாசிப்பான்..? இந்தக்கவிதை நூல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் என்ற அடையாளத்தையாவது தரட்டும்.. :)

Edited by சுபேஸ்

  • Replies 55
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தத்தை சொன்ன பறவை..

------

 

10428008_10152624610134891_3669290440201

வெயில் மடிந்த இப்பின்னிரவில்
உயிர் பிடிக்கிறது
உன் மேலான பிரியத்தின் ஊதாச்செடி...

 

இரவின் வாசற்படிகளில்
இறங்கிவருகிறது நினைவு
ஒளிந்துகொள்ள ஏதுமற்ற
நிர்வாணத்தில் நான்...
இந்த இரவின் மௌனத்திலும்
வெளியே இலை துடிக்கும் ஓசையிலும்
இன்னமும் அருந்தி முடிக்காத 
மேசை மேலிருக்கும் தேநீரிலுமாய் 
சிதறுகின்றன உன் ஞாபகங்கள்....

 

கோடை தின்ற ஈர உரையாடலின் 
மீதம் கசியும் துளிகளிலிருந்து
வேர் பிடிக்கிறாய் நீ..
முன்னொருபொழுது ஒட்டிகொண்ட‌
உன் மஞ்சல்ப்புன்னகையுடன்
நினைவுத் துண்டுகள் தங்கி விட்ட 
நிலமெங்கும் 
சிதறிப் பூக்கிறது உன் வாசனை....

 

நினைவின் துடுப்பசைத்து
ஓட்டமெடுக்கும் மனக்கால்கள் 
வரைந்துபோகின்றன
ஒருபொழுது நமக்கிடையே
பிரியங்களாய் பூத்திருந்த பெருங்காதலை...

 

கால நதியில்
மிதக்கும் சோடி இறகுகளாய்
காதலை நிலமெங்கும்
விதைத்தபடி
பூத்திருக்கும் மலர்களுடனும்
வண்ணாத்திப்பூச்சிகளுடனும்
நெடுந்தூரம் நடந்தோம்
தெருவோர‌ மரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதகதப்பில் லயித்துக்கிடந்தன.....

 

இரவு எழுதும் கவிதையும்
பகல் எழுதும் புன்னகையுமாய்
நிரம்பி இருந்தாய்
நீயென் வெற்றிடம்களில்....

 

பின்னொரு நாள் 
உன் விழிகளில்
காதலின் கடைசிக்கணம்
முடிவுறுவதைக் கண்டபோது
காத்திருப்பின் மேடையில்
என்னை அமர்த்திவிட்டு
பிரிவுசொல்லி 
ஞாபகங்களை விட்டுச் சென்றாய்

 

இருளின் வாசம் அவிழ
நினைவுகளைப் புதைக்கமுடியாக் காட்டில்
நீயற்ற பயணத்தின் நெடுவழியில் 
தனித்து நான்..

 

இப்பொழுதெல்லாம்

திரும்பவே முடியாத நேசத்தின் தூரத்திற்கு 
தொலைந்த நம் நாட்களாய்
பரணில் கிடக்கும் ஞாபத்தாள்களில்
கசங்கிக் கிடக்கும் தனிமையாய்
கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கிய
காத்திருப்பின் வடுக்களாய்
கைவிடப்படும் தனிமைப் பொழுதுகளோடு
வழிகிற காலமாய்
நாற்புறமும் எனை வெற்றிடமாக்கி
முடிகிறாய் நீ...

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10409111_10152624914839891_4423026282579

எந்த நதியை நான் குடித்தேன்..

எந்தக் கடலை நீ அருந்தினாய்..

வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..

ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான் உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..

என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..

நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..

என் கரையெங்கும் நீயிருந்தாய்..

கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..

அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்

நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..

ஒருகோப்பை வைனும்

உன் ஒரு துளி புன்னகையும்

என் வாழ்வை நிரப்புமென்று

என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..

கால்கள் தொடாத நிலமொன்றை

ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..

நீயிருந்தாய் நானிருந்தேன்..

எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்

உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..

காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..

அண்ணார்ந்து பார்த்தேன்

ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..

ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..

குனிந்தபோது அத்தனை வேகமாய்

உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..

நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..

காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து

என் கைகளில் வழிந்த கோப்பை...

ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..

அவற்றின் புன்னகையை பறித்த

துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..

பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த

காதலை ஏந்திய வீதிகள்..

வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்

உனைப் பார்த்து நானறியேன்..

யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..

பின் யார் நம் காதலைப் பறித்தது..

நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..

வாழ்வை ஒரு இசையைப்போல,

காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,

ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல

பருகிக்கொண்டிருக்கையில்

எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..

உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்

எங்கோ தொலைந்துவிட்டது..

பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..

வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..

என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,

என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..

வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்

மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..

உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்

நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்

என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..

கரைகளில் உனை ஒழித்துக்

கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன

கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10431443_10152628067684891_5913901547961

வாழ்வின் பெருமழையே..

என் முற்றத்தில்

என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...

இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,

கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..

என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..

அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று

முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..

வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,

உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..

அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்

நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..

யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..

என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..

நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..

யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்

பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்

சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்

இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..

என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்

பின் வெட்கத்தில்

வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த

ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு

நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..

யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..

யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..

கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..

என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..

என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..

கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..

காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..

மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..

என் தேகம் எங்கும் நுழைந்து

ஆன்மாவின் அருகிருந்து

காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்

கண்டால்

இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

Edited by சுபேஸ்

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11705134_10153082850899891_6208496674032
வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்
இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்
இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன
மரங்கள்
வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு
என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே
உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்

உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது
பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல
பரிதவிப்பது
வசந்தமாய்ப் பூப்பது 
வாழ்வின் கணங்களை ரசிப்பது
பின் அதனுள் உருகிக்கிடப்பது
காதல் அல்லவா.

 

ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம் 
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்
என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்
துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான்
காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..

 

பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான்

உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது
தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்
இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்
எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய்
இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..

 

ஓ..என் தோழியே..
நேசிப்பதென்பதும்
நேசிக்கப்படுவதென்பதும்
காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல
எத்துணை இனிமையானது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம் 
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்//

சிறப்பான வரிகள். தொடருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.