Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்?
03 நவம்பர் 2013


வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  முதலமைச்சர் விக்னேஸவரனுடன் கலந்துரையாடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனின் உறவினர் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.

முதலில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரனை முன் ஆசனத்தில் அமரச் செய்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்த்த முனைவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதற்கு இது வரை மறுப்புத் தெரிவிக்காமல் ஆழமாக சிந்திப்பதாகவும் அந்தக் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸவரனுக்கு பாதுகாப்பு வழங்கும் காவற்துறை உத்தியோகத்தர்களை கூட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவு செய்ததாகவும் ஆனால் பாதுகாப்பு வழங்கும் காவற்துறையினரை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றும குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான் இலங்கைத் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் கட்சியினால் தீர்மானிக்கப்படும் விடயங்களை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சிபாரிசுக்கு இணங்கவோ அல்லது அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசணைப்படியோ தன்னிச்சையாக தீர்மானிக்க வேண்டாம் என இரா சம்பந்தன் விக்னேஸவரனிடம் எடுத்துக் கூறியதாகவும் இலங்கைத் தமிழரச்கட்சி தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படி இருப்பினும் இந்த விடயங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்குள்ளும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிலும் கலந்துரையாடல்கள் தொடர்வதாக தெரியவருகிறது.

இதேவேளை பொதுநலவாய மகாநாட்டில் இலங்கையின் தரப்பில் இருந்து வடக்கின் நிலமைகளை எடுத்துக் கூறுவதற்காக வாய்ப்பை வழங்கலாம் என்ற வாய்மூல உறுது மொழியை வழங்கி முன் ஆசனத்தில் முதலமைச்சரை அமர வைத்து ஊடக பிரச்சாரங்களை மேற்கொண்ட பின் பேசுவதற்கான வாய்ப்பை வேறு காரணங்கள் கூறி தட்டிக்கழிப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்து இருப்பதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  நெருக்கமான அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98464/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்னேஷ்வரனின் சம்மந்தி வாசுதேவநாயக்காரா,
வாசுதேவநாநாயக்காரா உறவினர் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு

 

இந்த மூன்று உறவுகளும் சேர்ந்து தமிழ் மக்கள் தலையில் என்ன பாறாங்கல்லை போடுற திட்டம்??

வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்?

03 நவம்பர் 2013

வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  முதலமைச்சர் விக்னேஸவரனுடன் கலந்துரையாடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனின் உறவினர் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.

முதலில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரனை முன் ஆசனத்தில் அமரச் செய்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்த்த முனைவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதற்கு இது வரை மறுப்புத் தெரிவிக்காமல் ஆழமாக சிந்திப்பதாகவும் அந்தக் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸவரனுக்கு பாதுகாப்பு வழங்கும் காவற்துறை உத்தியோகத்தர்களை கூட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவு செய்ததாகவும் ஆனால் பாதுகாப்பு வழங்கும் காவற்துறையினரை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றும குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான் இலங்கைத் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் கட்சியினால் தீர்மானிக்கப்படும் விடயங்களை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சிபாரிசுக்கு இணங்கவோ அல்லது அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசணைப்படியோ தன்னிச்சையாக தீர்மானிக்க வேண்டாம் என இரா சம்பந்தன் விக்னேஸவரனிடம் எடுத்துக் கூறியதாகவும் இலங்கைத் தமிழரச்கட்சி தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படி இருப்பினும் இந்த விடயங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்குள்ளும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிலும் கலந்துரையாடல்கள் தொடர்வதாக தெரியவருகிறது.

இதேவேளை பொதுநலவாய மகாநாட்டில் இலங்கையின் தரப்பில் இருந்து வடக்கின் நிலமைகளை எடுத்துக் கூறுவதற்காக வாய்ப்பை வழங்கலாம் என்ற வாய்மூல உறுது மொழியை வழங்கி முன் ஆசனத்தில் முதலமைச்சரை அமர வைத்து ஊடக பிரச்சாரங்களை மேற்கொண்ட பின் பேசுவதற்கான வாய்ப்பை வேறு காரணங்கள் கூறி தட்டிக்கழிப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்து இருப்பதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  நெருக்கமான அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98464/language/ta-IN/article.aspx

 

தொடர்ந்து புனையுங்கோ..புனையுங்கோ. தமிழரசு கட்சி வட்டாரங்கள் என்று சொல்லி புளுடா விடுங்கோ. நாங்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள், நீங்கள் செய்கிற திலுமுல்லுகள் பற்றி தெரியாத பாவிகள் என்று தொடர்ந்து நினைத்த்து புனையுங்கோ.

 
அது சரி உங்கதை தோழர் சித்தார்த்தன் எப்படி இருக்கிறார். அவர் இப்ப தமிழரசு கட்சி வட்டாறதுக்குள் வந்திட்டாரே?. என்னே அதிசயம். மற்றது இவளவு பேருடனும் நெருக்கம் எப்படி உங்களுக்கு வந்தது. ஓ துவும் அந்த சித்தனின் வேலையா?. தொடருங்கள். பார்த்து ரசிக்க நாங்கள் இருக்கின்றோம். 

இது என்ன செய்தியப்பா இது, இதுவும்

 

புலன் உள்ள செய்தியா

 

அல்லது

 

புலன் இல்லாத செய்தியா? 

 

எங்களின் புலனுக்கு அறிவித்தல் கொடுத்துப்போட்டு போட்டவர்களா. 

 

உடனே வந்துவிட்டார் களத்துக்கு. :D

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன செய்தியப்பா இது, இதுவும்

 

புலன் உள்ள செய்தியா

 

அல்லது

 

புலன் இல்லாத செய்தியா? 

 

எங்களின் புலனுக்கு அறிவித்தல் கொடுத்துப்போட்டு போட்டவர்களா. 

 

உடனே வந்துவிட்டார் களத்துக்கு. :D

தொழில் நுட்ப வசதிகள் அதிகம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வாசுதேவா, வடமாகாண முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாட்டிற்குள், அவர் தனது உறவினர் என்ற சலுகையைப் பயன்படுத்தி முதலமைச்சரைச் சங்கடத்தில் மாட்டிவிடக்கூடிய நாகரீகமற்ற மனிதரல்ல. 

 

சும்மா கட்டுக்கதைகளை எடுத்துவிடுவதில் அர்த்தமில்லை.  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதும்,  நெருக்கமான தகவல்கள் கூறுவதும், எப்போதோ புளித்துப் போய்விட்ட உடான்சுகள் என்பது தற்போது எல்லோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வாசுதேவா, வடமாகாண முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாட்டிற்குள், அவர் தனது உறவினர் என்ற சலுகையைப் பயன்படுத்தி முதலமைச்சரைச் சங்கடத்தில் மாட்டிவிடக்கூடிய நாகரீகமற்ற மனிதரல்ல. 

 

சும்மா கட்டுக்கதைகளை எடுத்துவிடுவதில் அர்த்தமில்லை. 

 

தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதும், 

நெருக்கமான தகவல்கள் கூறுவதும், எப்போதோ புளித்துப் போய்விட்ட உடான்சுகள் என்பது தற்போது எல்லோருக்கும் தெரியும்.

 

காலகாலமாக தொடரும் பத்திரிகை வரிகள் தானே  இவை

 

ஆனால் அதை நாம் எந்தளவுக்கு நம்புகின்றோம்

தூக்கித்திரிகின்றோம் என்பதைப்பொறுத்தே

அதன் ஆயுள் இருக்கும்

இன்னும் வேகிறது என்றால்  தப்பு அவர்கள் மேலன்று.

(அதிலும் இனம் சார்ந்த இது   போன்ற  விடயங்களிலும் :( )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவி பசங்களா அடுத்த ஆளுனர் உங்கள் உறவினராம்..... இது என்ன கூட்டு குடும்பமா நடத்துறிங்க..அவரும் நாணயக்கார வமிலியாம்..(.family)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.