Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம்! அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம்! அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல்
News_47760.jpg

ஹவானா, நவ. 1-

அணு ஆயுத ஆபத்து இல் லாத உலகம் உருவாக வேண் டும் என்ற தனது இதயப்பூர்வ மான விருப்பத்தினைஇந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியுடனான சந் திப்பின் வாயிலாக உலக நாடு களுக்கு வெளிப்படுத்தியுள் ளார் கியூபப்புரட்சியின் மகத் தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ.

மேலும் அணிசேரா இயக் கம் இன்றும் முக்கியத்துவத்து டன் விளங்குகிறது என்றும், பூவுலகின் தெற்கு நாடுகள் அனைத்தும் இன்னும் நெருக் கமாக ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலை வர் டாக்டர் ஹமீது அன்சாரி பெரு மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பய ணம் மேற்கொண்டார். இந்த நாடுகளில் இந்திய கலாச் சாரத் திருவிழாக்களை அவர் துவக்கி வைத்தார்.

தனது பய ணத்தின் ஒருபகுதியாக கடந்த இரண்டு நாட்களாக கியூபா வில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அன்சாரி, கியூபா வின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோவையும் ஜனாதிபதி ரால்காஸ்ட்ரோவையும் சந்தித் தார்.பிடல் காஸ்ட்ரோவுட னான சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. எனி னும், காஸ்ட்ரோவை சந்திக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தை அன்சாரி கியூப அரசுக்குத் தெரிவித்தார்.

இதையடுத்து கடைசி நிமிடத் தில் பிடல் காஸ்ட்ரோவுட னான சந்திப்பு உறுதிப்படுத் தப்பட்டது.87 வயதாகும் உலகின் மகத்தான தலைவர்களில் ஒருவரான பிடல் காஸ்ட்ரோ வுடன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையா டியது பற்றி, வியாழனன்று தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் மிகுந்த ஆச்சரியத்துட னும், மகிழ்ச்சியுடனும் அன் சாரி தெரிவித்தார்.

தற்சமயம் நேரடி அரசியல் வாழ்வில் பிடல் காஸ்ட்ரோ ஈடுபடவில்லை என்ற போதி லும் என்றென்றும் கியூப மக் களை ஆகர்சிக்கிற தலைவ ராகவே அவர் இருக்கிறார் என் பதை உணர்ந்தேன் என அன் சாரி தெரிவித்தார். இந்த உலகத்தில் பெரும் எண்ணிக்கையில் அணு ஆயு தங்கள் குவிந்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதற்கான சந் தர்ப்பமாக எங்களது சந்திப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளார் பிடல் காஸ்ட்ரோ எனத்தெரி வித்த ஹமீது அன்சாரி, ஒரு சிறு அணு ஆயுத விபத்து கூட உலகத்தையே அழித்துவிடும் என்றும் அப்படிப்பட்ட விபத்து நிகழ்வதற்கு காத்துக் கொண் டே இருக்கிறதுஎன்றும் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத் ததாகத்தெரிவித்தார்.

பெருமளவில் அணுஆயு தங்களைக் குவித்துள்ள அமெ ரிக்கா, ஒருமுறை தனது சொந்த மண்ணிலேயே தவறு தலாக ஒரு அணுகுண்டை போட்டுவிட்டது; நல்லவேளை யாக அது வெடிக்கவில்லை என்றும் காஸ்ட்ரோ நினைவு கூர்ந்ததை அன்சாரி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையில் கியூபாவுக்கு எதிராக பொருளா தாரத் தடைகளை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் அமெரிக் காவின் தீர்மானம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப் பட்டதா என்ற கேள்விக்கு பதி லளித்த அன்சாரி, ஐ.நா. சபை யில் கியூபாவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தே இந் தியா வாக்களித்துள்ளது என் றும், கியூபா மீதான தடைகள் ஐ.நா. விதித்த தடைகள் அல்ல; அமெரிக்கா விதித்த தடைகளே என்றும் குறிப்பிட் டார்.

இந்த விஷயத்தில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் கியூபா பக்கமே நிற்கின்றன என்றும், இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவுடன் நிற்கிறது என்றும் அவர் சுட்டிக்காட் டினார்.

 

   நன்றி - தீக்கதிரிணையம்

 

  • கருத்துக்கள உறவுகள்

கியூபா வின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோவையும் ஜனாதிபதி ரால்காஸ்ட்ரோவையும் சந்தித் தார்.
அத்துடன் குடும்ப ஆட்சிமுறை இல்லாத உலகத்தை படைப்போம்.........
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஏதோ கிடுக்கிப்பிடி போட்டுவிட்டதுபோலை.. இந்தியா தனது எதிர்ப்பைக் காட்டிவிட்டது.. :D

அமெரிக்காவுக்கெதிராக அணுஆயுத ஏவுகணைகளை கியூபாவில் பொருத்த முயன்று அணு ஆயுத போரையே தன் சுயநலத்துக்காக ஆரம்பித்த இந்த கோமாளியை உயர்த்தி பேசுகிறார் இந்திய கோமாளி. அமெரிக்கா எப்போதாவது நினைத்திருந்தால் "மருந்து கடத்தினார்" என்று சொல்லிக்கொண்டு போய் இவரையும் மனுவல் நோறியாக்கோவை கொண்டுவந்தது போல கொண்டுவந்திருக்கும். கம்யூனிசம் எவ்வளவு அழிவானது என்று காட்ட இப்படி ஒரு பகிடி சேட்டை நாட்டை அமெரிக்காவேதான் கைலாகு கொடுத்து உலகம் எங்கும் அழைத்து சென்று காட்டுகிறது. சுதந்திரம் என்று பொய் சொல்லிக்கொண்டு சப்வே பிச்சைகாரர்களை அமெரிக்க அரசு விட்டு வைத்திருப்பது ,உழைக்க மறந்தவர்களுக்கு ஒரு பாடம் என்பது போலவே கம்யூனிசத்தால் மக்களுக்கு வரும் அழிவைக்காட்ட இவரையும் விட்டு வைத்திருக்கு.

 

இன்றும் உலக நாடுகளின் அணுக்குண்டுகள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்தார்த்தால் அதைவிட கூடத்தான் ரூசியாவில் இருக்கும். அணு ஆயுதங்களை ரூசியா வைத்திருக்கலாம், ஆனால் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட ரூசியாவால் இனி ஒரு போரை வெல்ல முடியாது என்பதை இந்த "கியூபா வின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ" வாழ்வின் கடைசி நாட்களில் தன்னும் தெரிந்து கொண்டுதான் இறக்க போகிறார். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
போராடி வென்ற கியூப தலைவர் காஸ்ரோ போராடும் மக்களுக்கு எதிராக வாக்களித்து தான் ஒரு சுயநல தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்.
இப்போ கூட்டு சேரும் ஆட்களும் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.