Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

 
தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது.

பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்றுடன் கலந்து வட்டார மொழி என்ற அளவில் டெல்லி பகுதியில் வழங்கப்பட்டது, இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் விரிவு அடைந்த போது ஆதிக்கத்தின் வழி தெற்கே மைசூர், ஹைதராபாத் வரை இந்தி மொழி பரவலாயிற்று.

தாய்மொழியின் பால் அக்கறை இல்லாதவர்கள் ஈரானிய வட இந்திய மொழிகளை கலந்தே பேசி இந்தி என்ற ஒரு கலப்பு மொழியை உருவாக்கினார்கள். இந்தி - அதை செயற்கை மொழி என்றும் சொல்லலாம், காரணம் எந்த ஒரு இயற்கை மொழியும் தோன்றிய காலகட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி தவிர்த்து அவை இயற்கை மொழியாக (வெறும் சொல்லாடல் தான்) அறியப்படுவதற்கு அவற்றை எழுதுவதற்கான எழுத்துகளும் அவை பேசப்படும் காலம் முதலே இருக்க வேண்டும். 

இந்தி ஒரு மொழியாக உணரப்பட்ட போது அவற்றை எழுத்துவடிவில் எழுதும் சிக்கலில் எந்த எழுத்துருவை அதற்கு கொடுக்க வேண்டும் என்று முனைந்ததில், சமாஸ்கிரத கிரந்த எழுத்துக்களையே இந்தியை எழுதுவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதுவும் உலக வழக்குதான். எழுத்தில்லாமல் 100க் கணக்கான மொழிகள் எழுத்துவடிவம் பெற்றது எப்படி என்றால் அவை அந்த பகுதியில் எழுத்துடன் புழங்கிவரும் மற்றொரு மொழியின் எழுத்துக்களை ஏற்றுக் கொண்டு அதன் வழியே எழுத்து மொழியாக மாறும். தெற்காசிய மொழிகளில் பாசா மலாய், பாசா இந்தோனேசியா போன்றவைகளுக்கு எழுத்து கிடையாது, அவை ஆங்கில் 26 எழுத்துக்களையே பயன்படுத்தி எழுதப்பட்டு வருகிறது. ஐரோப்பிய மொழி பிரிவுகளிலும் இதே நிலைதான். அவற்றில் எழுத்துக்களின் எண்ணிக்கையும் வடிவத்தில் சற்று மாறுபட்டு இருக்கும்.

பதியப்பட்டுள்ள இந்திய 3000 ஆண்டு வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தி, செயற்கையாக உருவானது அதாவது உருது மொழியின் ஒரு பிரிவு, அவற்றில் பழம்பெரும் காப்பியங்களோ, இதிகாச புராணங்களோ இல்லை, இந்தி இலக்கியம் அத்தனையும் 500 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவையே, இந்தியில் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிரதம் அல்லது உருது மொழியைச் சார்ந்தே அமைக்க முடியும். இந்தி சொம்மொழி கிடையாது.

இந்தியும் உருதுவும் சகோதர மொழிகள் என்பது பலருக்கு தெரியுமா ? உருது பேசுபவர்களுக்கு இந்தி புரியும். இந்தி பேசுபவர்களுக்கு உருதும் புரியும், 60 விழுக்காடு சொற்கள் வரை இரண்டிற்கும் பொதுவாக உள்ளவை. இந்திக்கும் உருதுக்கும் ஒரே பெரிய வேறுபாடு எழுத்து வடிவம் மட்டுமே, உருது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, இந்தி சமஸ்கிரத எழுத்துக்களை பயன்படுத்துகிறது. 

எந்த ஒரு பழம்பெருமையும், முன்னோர்வழி (பாரம்பரிய) இலக்கியமும் அற்ற ஒரு மொழியை தேசிய மொழி என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அனைவராலும் பேசப்படும் ஒரு மொழி தேசியமொழியாக வரவேண்டும், அதனால அனைவரும் பயன்பெற வேண்டும், அந்த மொழி தாக்கத்தால் மாநில மொழி சீர்கெடக் கூடாது என்றால் அதற்கு சரியான மொழி ஆங்கிலம் தவிர்த்து வேறொரு மொழி இந்தியாவில் இல்லை. 'இந்திய மொழிகளில் உள்ள பழமையான ஒரு மொழியை மட்டுமே, இந்தியாவின் பொது மொழியாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு பெருமை' என்றால் Sorry to Say அந்த தகுதி இந்திக்கு இல்லவே இல்லை. அதற்கான காரணம் மேற்கண்டது தான்.

இந்தியாவின் தேசிய மொழியாக ஆங்கிலம் இருக்கக் கூடாதா ? என்னைப் பொருத்து இருக்கலாம், அதற்கான பயனும் அளவிடப் பெரியது, அதைவிட மற்றொரு முதன்மைக் காரணம் இந்தி இந்தியாவில் நுழைந்தற்கும் ஆங்கிலம் நுழைந்தற்கும் இடையே உள்ள ஆண்டுகள் வேறுபாடு வெறும் 200 ஆண்டுகளே.

இந்தி வலியுறுத்தப்படுவதற்கு உண்மையிலேயே தேசிய வாதம், பொதுமொழி என்ற காரணங்கள் மட்டும் தானா ? இன்னொரு மறைமுக காரணமும் உண்டு, இந்தி மொழி ஆதிக்க அரசியலும் அதைச் சார்ந்ததே, இந்தி எழுத்துக்களைப் பார்க்கும் போது அது வடமொழி எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் (இறந்தவர்களின் நிழல்படத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்வது போல) விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்க்காவே, வடமொழியின் வடிவமாகவே பார்த்து, வடமொழி தேவ பாசை என்று உயர்வு கற்பித்தவர்களே, இந்திக்கு தேசிய அடையாளம் கொடுக்க வேண்டும், இந்தி தேசிய மொழி என்றெல்லாம் பரப்புகிறார்கள், வெறொன்றும் பெரிய காரணம் இல்லை.

வடமொழியை இந்திவழி உயிர்கொடுத்து நடமாட வைக்க முடியும் என்று நினைப்பது வெறும் கற்பனையே, இந்தியைப் போல் வடமொழி பேசப்படும் மொழியாக இருந்ததே இல்லை, எழுதுவத்ற்கு பயன்பட்ட எழுத்து மொழி மட்டுமே, வடமொழி எந்த காலத்திலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேசப்பட்ட மொழியாக அறியப்பட்ட வரலாறுகள் இல்லை. அதற்கு உயர்வு கற்பித்து ஒரு குழுவுக்குள் வழங்கி வந்ததாலேயே அதன் வளர்ச்சியும், பரவலும் முடங்கி, கோவில் கருவரை என்ற அளவில் சுறுங்கிவிட்டது.

கிட்டதட்ட மறைந்துவிட்ட மொழியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வடமொழிப் பற்றாளர்களுக்கு இருக்கும் பதட்டம் / பொறுப்புணர்வு கூட வாழும் மொழியை பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இல்லை. மொழிக்கலப்பால் தமிழ் அழிந்துவிடுமா கற்பனை பண்ணாதீர்கள் என்கிறார்கள். மொழிக்கலப்பால் மட்டுமே மொழி அழிவதில்லை, புழக்கத்தில் இல்லாமல் போனாலும் கூட மறையும் என்பதற்கு 'நமது' தேவபாசையே சான்றாக இருக்கிறது.

மீண்டும் இடுகை தலைப்பிற்கு வருகிறேன். இந்தியும் இந்தியாவிற்குள் நுழைந்த மொழி, செயற்கை மொழி, எழுத்தில்லாமல் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்திவரும் மொழி, குறிப்பாக பழம்பெரும் இலக்கியம் இல்லாத மொழி. எந்த தகுதியை வைத்து இந்தியை தேசிய மொழி என்று சொல்ல முடியும் ? அப்படி சொல்ல முனைந்தால் ஆங்கிலத்தைத்தான் முதலில் அப்படி சொல்ல வேண்டும். ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.

மற்றபடி இந்தி மொழி பரவலை தேசிய மொழி என்ற பெயரில் அனுமதித்தால் எப்போதும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று புலம்பலில் இருக்க வேண்டியதுதான். மொழிகள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவே பரப்பப்படுகிறது, முகலாயர்கள் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியபோது அங்கெல்லம் இந்தியின் ஆதிக்கமே இருக்கிறது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம், இது வட நாடு முழுவதும், தென்நாட்டில் சில மாநிலங்களிலும் ஆதிக்கதின் 

வழியாக நுழைந்திருப்பது கண்கூடு. 

ஆங்கிலம் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால், இந்தியும் முகலாய (ஈரானிய) ஆதிக்கத்தின் வழியான திணிப்பே. ஆண்டுகள் இடையே தான் வேறுபாடு. இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதது.

தமிழ் சிறந்த மொழிதானே அது ஏன் பரவவில்லை ?

தமிழர்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டதாகவோ அதற்கு கருவியாக(ஆயுதமாக) தமிழை பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு கிடையாது. சோழர்கள் கடாரம் போன்ற நாடுகளை வென்றதுடன் திரும்பிவிட்டார்கள் அங்கேயே தங்கிவிடவில்லை.ஆசிய நாடுகளில் பரவி இருக்கும் தமிழ் ? அதை தமிழகள் தவிர யாரும் பேசுவதும் இல்லை. மக்கள் பரவியதைத் தொடர்ந்து தாய் தமிழையும் பேசிவருகிறார்கள். என் மொழியை பேசுங்கள், உயர்வானது என்று தமிழன் எவரிடமும் வலிந்து தனது மொழியை திணித்தது கிடையாது.

உண்மையான தேச ஒற்றுமை, பொது மொழி வேண்டுமென்றால் ஆங்கிலமே அதற்கான தீர்வு.

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயேயும் பொது மொழியாக ஆங்கிலம் தான் இருந்தது. ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் மூலம் தேச ஒற்றுமை என்ன உலக ஒற்றுமையே போற்ற முடியும் :)

பின்குறிப்பு : இங்கே இந்தி மொழியை குறைத்து மதிப்பிட்டு, அதனை ஏளனம் செய்ய வில்லை. தம்மை ஏளனம் செய்யாத பிறமொழிகளை ஏளனம் செய்யும் தகுதி எவருக்கும் கிடையாது, இங்கே 'இந்தி' அதன் உருவாக்கம் தன்மை, பயன்பாடு, அதன் தாக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். இந்தி மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apartheid of Srilanka Government:

PM of India has taken a political decision.  Whether PM participate or not Tamils in Srilanka (Eelam) are not going to get anything as long as the Apartheid of Srilanka Government  continues. Sri Lanka is following an apartheid towards its section of citizens through its Sinhala Only Act 1956. Due to this

1) 1,47,769 people were killed or missing in the war during 2009 as per UN Report.
2) Thirty (30) years development of SriLanka is completely halted. Around 2 Lakh people were killed during the 30 year struggle. The root is still existing as it is without any change. ie) Sinhala Only Act 1956.
3) Tamils living in Eelam (Eastern & Northern) area are treated as 2nd grade citizens.
4) Srilanka had completely devastated in economics and other wealth have been in complete disorder.
5) Independent country to the Tamils is a only hope now.
6) The International Community must create this independent country.
7) The countries participating the Commonwealth are uplifting the Apartheid of Srilanka.

The root cause of the problem should be rectified or a Free Nation "Tamil Eelam" should be created by bifurcating Today's Srilanka. Could you hear this feeble voice ????????????
 

தமிழ் நாடு சுதந்திரமடையாவிடில் தமிழ் ஈழம் சாத்தியமில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.