Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கை பட்ஜட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மீண்டும் அதிகரிப்பு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

131121112202_mahinda_rajapaksa__304x171_

அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

விவசாயிகளுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், பெண் தொழில் முனைவோர் வட்டியற்ற கடனைப் பெறுமுடியும் என்றும் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப் படியை 1200 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

யுத்தம் முடிவுக்கு வந்து 4 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக்கான செலவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 2014ஆம் ஆண்டில் 5.2 வீதமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது மேலும் குறையும் என்றும் அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அடுத்த மூன்று வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.5 வீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்ட உரையை முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி ஆகியன பகிஸ்கரித்திருந்தன.

இதற்கிடையே அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு போதாது என்று அவர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வரவு செலவுத்திட்டத்தை கடந்த ஆண்டினது தொடர்ச்சியான ஒன்று என்று கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் எம். கணேசலிங்கம். அது மாத்திரமன்றி, இது கிராமிய பொருளாதாரத்தை இலக்கு வைத்ததாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புச் செலவு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு போதாது என்ற அவர்களது கருத்து நியாயமானதாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிலான அரச ஊழியர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்துக்கு இப்படியான அதிகரிப்பை செய்வது கடினமே என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டுகளைப் போல அதிகரித்தே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால், தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்திக்கான துறையும் வருவதால், அதனை பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மாத்திரமல்ல என்ற வகையில் அரசாங்க தரப்பு வாதிடலாம் என்றும் கணேசலிங்கம் கூறுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131121_lankabudget.shtml

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அவசியம்
Posted By Thara On November 23rd, 2013 01:45 AM | தமிழகச் செய்திகள் 
Share on facebook Share on twitter Share on delicious Share on digg Share on stumbleupon Share on reddit Share on email More Sharing Services
manmohansingh
நாட்டின் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முப்படைத் தளபதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் இந்தியா 8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வந்தது. இருந்தாலும், சர்வதேச அளவில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பெருளாதார வளர்ச்சி மந்தமாகக் காணப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து நாம் விடுபடுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனினும், தற்போதைய பொருளாதாரச் சூழலில், பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்குவதில் நாம் மிகுந்த கவனத்தை மேற்கொள்ள வேண்டும். அதாவது, கையிலுள்ள துணிக்கு ஏற்பத்தான் ஆடை தைக்க வேண்டும். நமது ராணுவ தளவாடங்களுக்கும், படைகளுக்கும் நாம் செய்யும் முதலீடு, நாட்டின் கையிருப்பிலுள்ள ஆதாரங்களுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும்’ என்று கூறினார்.

பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பால் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.2.06 கோடி நிதியும் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://tamil24news.com/news/archives/118152

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அவசியம்

Posted By Thara On November 23rd, 2013 01:45 AM | தமிழகச் செய்திகள் 

Share on facebook Share on twitter Share on delicious Share on digg Share on stumbleupon Share on reddit Share on email More Sharing Services

manmohansingh

நாட்டின் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முப்படைத் தளபதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் இந்தியா 8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வந்தது. இருந்தாலும், சர்வதேச அளவில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பெருளாதார வளர்ச்சி மந்தமாகக் காணப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து நாம் விடுபடுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனினும், தற்போதைய பொருளாதாரச் சூழலில், பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்குவதில் நாம் மிகுந்த கவனத்தை மேற்கொள்ள வேண்டும். அதாவது, கையிலுள்ள துணிக்கு ஏற்பத்தான் ஆடை தைக்க வேண்டும். நமது ராணுவ தளவாடங்களுக்கும், படைகளுக்கும் நாம் செய்யும் முதலீடு, நாட்டின் கையிருப்பிலுள்ள ஆதாரங்களுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும்’ என்று கூறினார்.

பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பால் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.2.06 கோடி நிதியும் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://tamil24news.com/news/archives/118152

அண்டை நாடு என்பதற்காக சிங்கு எதுக்கு இலங்கை பஜட் போதாகுறைக்கு தனது பாதுகாப்பு செலவை குறைக்க முனைகிறார்? 

 

:D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.