Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே குண்டு வெடிப்பு: - 7 பேர் பலி, சிலரை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
koodankulam-blast-seithy-1-20131127-150.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 வீடுகள் தரைமட்டமானது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே இடிந்தகரை என்ற மீனவ கிராமம் உள்ளது.

  

கடந்த 2004 ஆம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்தவர்களுக்கு, சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுப்பு வீடுகள் சுனாமி காலனி என்று அழைக்கப்படுகிறது.

சுனாமி காலனிக்கும், அணுமின் நிலைய வளாக சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இடிந்தகரை கிராமத்தில் நடந்து வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் இடிந்தகரை சுனாமி காலனியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி வரை இந்த சத்தம் கேட்டது.

குண்டு வெடித்ததால் பதற்றம் அடைந்த இடிந்தகரை கிராம மக்கள், சுனாமி காலனியை நோக்கி ஓடினார்கள். சுனாமி காலனியில் உள்ள 319 வது வீட்டில் அந்த குண்டு வெடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் அந்த வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. அருகே இருக்கும் மேலும் 2 வீடுகளும் இடிந்தன. எங்கும் புகைமண்டலமாக இருந்தது.

இரவு நேரம் என்பதால் உடனடியாக மீட்பு பணிகள் எதையும் ஊர் மக்களால் மேற்கொள்ள முடியவில்லை.

தீயணைப்பு மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு வெடித்த வீட்டுக்குள் நுழைந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்த சிரமம் ஏற்பட்டது. அந்த வீட்டுக்குள் வெடிக்காத பல நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை தீயணைப்பு படை வீரர்கள் அறிந்தனர்.

எனவே மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியாக முன்வைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு வெடித்த 319 வது வீட்டில் இருந்து தலை, கால்கள் இல்லாமல் ஒருவரது உடல் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. 319 வது எண் வீட்டிற்கு எதிரே உள்ள 329 வீடும் இடிந்து கிடந்தது. அந்த வீட்டில் இருந்த பிரமிளா என்ற பெண்ணை காணவில்லை.

எனவே அவரது செல்போன் எண்ணுக்கு போன் செய்தார்கள். அப்போது இடிபாடுகளுக்கு உள்ளே இருந்து செல்போன் ஒலித்தது. அதன் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்ட போது பிரமிளாவும் பிணமாகி கிடந்தது தெரியவந்தது. அவரது உடலும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 319 வது வீட்டின் அருகே 2 சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்ததாக சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த சிறுமிகள் 2 பேரையும் காணவில்லை. எனவே அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது. 2 சிறுமிகளின் கதி என்னவென்று அறிய இடிபாடுகளுக்குள் தேடினார்கள். வெடிகுண்டு வெடித்ததில் அந்த 2 சிறுமிகளும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் அந்த சிறுமிகளின் தாயார் ரோஸ் என்பவரும், யாகப்பன் என்பவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், செல்லும் வழியில் யாகப்பன் பலியானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரோசும் உயிரிழந்தார்.

எனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் வெடிக்காமல் இருக்கும் வெடிகுண்டுகளை செயல் இழக்கவைக்க வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

குண்டு வெடித்த வீட்டின் அருகே உள்ள வீடுகளைச் சேர்ந்த மேலும் சிலரை காணவில்லை. எனவே சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சட்ட விரோதமாக சிலர் வெடிகுண்டு தயாரித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

koodankulam-blast-seithy-1-20131127-400.

 

 

koodankulam-blast-seithy-2-20131127-400.

 

 

koodankulam-blast-seithy-3-20131127-373.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97774&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே.. என்ன நடக்குது அங்கே..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலைக்கு அருகே உள்ள, இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அணு உலை எதிர்ப்பு அமைப்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அணு உலையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு குடிசையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் சில நபர்கள் வெடி மருந்துகள் தயாரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததாக, புது தில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

131127103701_indinthakarai_tamilnadu_304

இடிந்த கட்டிடம்

5 வயதிற்கு உட்பட்ட 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டு வெடிப்பில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. உடனடியாக மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் உயர் காவல் அதிகாரிகள் சுமித் சரன் மற்றும் விஜேந்திரா பிதாரி தலைமையிலான வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

120324171341_koodankulam_udayakumar_304x

குண்டு வெடிப்பு வழக்கு

அணு உலை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக செயல்பட்டுவருவதாக அணுசக்தித் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களக்கும் மேலாக கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி கிராமவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இதற்கு தலைமை தாங்கி நடத்தி வருகின்றது. இடிந்தகரைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து இந்த வருடம் முன்னதாக போலிசார் பல நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும், அணு உலை எதிர்ப்பு அமைப்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலிசார் அறிவித்துள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131127_koodankulam.shtml

அந்த கிராம மக்களை ஒட்டு மொத்தமாக அங்கு இருந்து அகற்ற அரசின் சதியாக கூட இருக்கலாம்...  

இந்திய மத்திய அரசின் குள்ளநரித்தனமான வேலை இது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.