Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலா காலமானார் South Africa's Nelson Mandela dies

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MR1(40).jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்காவிற்கு இன்று திங்கட்கிழமை நண்பகல் பயணமாகியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினுடைய இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்காவிற்கு பயணமாகியுள்ளார்.

அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92542-2013-12-09-09-35-48.html


piranab-sonia-seithy-20131209.jpg

நெல்சன் மண்டேலா நினைவு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, சோனியா காந்தி மற்றும் தலைவர்கள் இன்று இரவு தென்ஆபிரிக்காவுக்கு செல்கின்றனர்.

  

பிரார்த்தனை நிகழ்ச்சி

நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் 95 வயது நெல்சன் மண்டேலா கடந்த வியாழக்கிழமை அன்று மரணம் அடைந்தார். உலக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதை பெற்றவருமான மண்டேலாவின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் செய்தி விடுத்தனர்.இந்திய அரசு சார்பில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மண்டேலாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி வருகிற 15-ஆந் திகதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பிறந்த குனு நகரில் நடக்கிறது. இதில் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்திய தலைவர்கள் பயணம்

முன்னதாக நாளை ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் மண்டேலா நினைவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர். அவர்கள் இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தென்ஆப்பிரிக்கா செல்கின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய மந்திரி ஆனந்த்சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுகின்றனர்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்கும் இந்த குழுவுடன் சேர்ந்து தென்ஆப்பிரிக்கா செல்வார் என்று தெரிகிறது. இவர்கள் நாளை நடக்கும், மண்டேலாவின் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்துகின்றனர். மத்திய அரசு சார்பில் வருகிற 11&ந்தேதி முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98658&category=IndianNews&language=tamil

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

piranab-sonia-seithy-20131209.jpgMR1(40).jpg

விடுதலை, சுதந்திரவாழ்க்கையை என்னெண்டு தெரியாததுகள் எல்லாம் எந்தமுகத்தை வைச்சுக்கொண்டு அங்கை போகுதுகள்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.