Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தீவகப் பகுதிகளில் EPDPயின் அஸ்தமனம் ஆரம்பமா? குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தீவகப் பகுதிகளை கடந்த இருபத்திரண்டு வருடங்களிற்கு மேலாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது கட்சிசார் அரசியற் செயற்பாடுகளை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ கைவிடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விகிதாசார அடிப்படையில் நெடுந்தீவிலேயே மஹிந்த கூடிய வாக்குகளை பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக மாற்றப்போவதாக அரசும் ஈபிடிபியும் கூறி வந்திருந்தன. எனினும் 22 வருடங்கள் ஆளும் தரப்புகளோடு அமைச்சரவையை பகிர்ந்து கொண்ட ஈபீடீப்பியினால் தீவகத்தில் மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளையோ அல்லது உட்கட்டுமானங்களையோ குறிப்பிடும்படியாக  கட்டியெழுப்ப முடியவில்லை. பெரும்பாலான வேளைகளில் படகுப் போக்குவரத்துகள் கூட 5 மணித்தியாலத்திற்கு ஒரு தடவை அல்லது பல மணி நேரங்களுக்கு ஒரு தடவை செல்லும் நிலை காணப்பட்டது. பஸ் போக்குவரத்துகள் வீதிகள் பல மூன்று தசாப்த்த காலமாக அப்படியே இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இவ்வாறானதொரு சூழலில் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் இருந்து தீவகப்பகுதி ஈபிடிபியின் கைகளை விட்டு செல்லத் தொடங்கியது.

குறிப்பாக நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் படுகொலையை தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்தும் நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறியுள்ளனர்.   அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறியுள்ளனர். நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறிய அதே நேரத்தில் தீவகத்தில் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை தற்காலிகமாகவேனும் மூடுவது எனவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை ஈபீடீபியிடம் இருந்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

1991ம் ஆண்டில் தீவகப்பகுதிகளை இலங்கை அரசு கைப்பற்றியிருந்த நிலையில் அவர்களுடன் ஈபிடிபியினரும் தீவகத்தில்   தரையிறங்கியிருந்தனர். அதன் பின்னராக  22 வருடங்களாக மாற்று அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தீவகத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது இருந்தது. இரும்புப்பிடிக்குள் தீவகத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருந்த ஈபிடிபி   2002ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவகத்திற்கு சென்ற கூட்டமைப்பின் வேட்பாளர்களை தாக்கி அதில் சிவாஜிலிங்கம் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தீவகத்தை கிறுங்குப்பிடியில் வைத்திருந்த ஈபிடிபி   இப்போது பாரிய பின்னடைவை சந்திக்கத் தொடங்ஙி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

1990 களில் இருந்து கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திய மூத்த உறுப்பினர் டானியல் றெக்சின் கொலை ஈபிடிபியின் அஸ்தமனமா என்ற கேள்வியைக் கூட தீவகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கமலேந்திரன் தொடர்பாக டானியல் பல முறைப்பாடுகளை கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிவித்த போதும் அவர் அதனைக் கண்டு கொள்ளவில்லை என்பதால், டானியல் கடும் அதிரு;ப்தி கொண்டு இருந்தார் என நெடுந்தீவுத் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் கடந்த மாகாண சபைத் தேர்தலில் டானியல் ஒதுங்கியிருந்தார் எனவும் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

கமலேந்திரனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டுகொள்ளமைக்கு காரணங்கள் நிறைய உண்டு என கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள்.

கமலேந்திரனின் இரண்டு சகோதரர்கள் தாய் தந்தை என அனைவரும் ஈபிடிபி   கட்சியினரின் உறுப்பினர்கள். நீண்ட கால விசுவாசிகள். விடுதலைப் புலிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்த போது பல இடங்களில் அமைச்சரை மரணத்தில் இருந்து பாதுகாத்த மெய்பாதுகாவலர்களில் மிக முக்கியமானவர் கமலேந்திரன் எனவும் கூறுகிறார்கள்.

இதே வேளை கொலை நடந்த அன்று டானியல் றெக்ஸியனின் மனைவி அனிதாவிடம் தொலைபேசியில் பேசிய கமலேந்திரன் 'நான் வருகிறேன் நாயை கட்டி வை அது குலைக்கும் நீயும் நிற்க வேண்டாம் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு அயல் வீட்டிற்கு செல்' எனக் கூறி ஆயத்தங்களை மேற்கொண்டே சென்றிருக்கிறார். தனது மற்றைய கட்சி நண்பரோடு மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் வீ;ட்டின் முன்பாக அவரை நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று அவருடன் உரையாடிய அதே நேரம் தண்ணீர் கொண்டு வா என கூறி அவர் செல்லும் போது பின்புறமாக 9 எம் எம் துப்பாக்கியால் அருகிருந்து சுட்டு, இரத்தக் கறைகளை அகற்றி தான் வாங்கிச் சென்ற நச்சு  மருந்துப் போத்தலை கையில் செருகி அதற்கான பற்றுச் சீட்டையும் பொக்கற்றில் வைத்து சென்றிருக்கிறார். 

இந்தக் கொலை பெரிய சர்ச்சைகளை உருவாக்கியதோடு சைலன்சர் பூட்டிய 9 எம் எம் துப்பாக்கியால் மிகவும் கைதேர்ந்தவர் அருகிருந்து சுட்டு இருக்கிறார் என்பது படைப் புலனாய்வாளர்களையும் சற்று கதிகலங்கச் செய்ததாக கூறப்படுகிறது.

புலிகளின் மீள் வருகையா? ஏன்ற கேள்விகளும் படையினரைத் துளைக்க நேரடியாக கோத்தாபய ராஜபக்ஸவின் கைகளுக்குள் இந்தக் கொலை பற்றிய விடயங்கள் சென்றதனால், வழமையாக குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது.

மிகவும் இறுக்கமாகவும் துரிதமாகவும் விசாரணைகள் புலனாய்வுகள் முடக்கி விடப்பட்டதனால் இரகசியமான முறையில் கமலேந்திரன் கொழும்புக்கு சென்று ஈபிடீபியின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகம் அல்லது விடுதி ஒன்றிலேயே இவர் தங்கியிருந்திருக்கிறார். இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தெரியும்.

ஒரு சில நாட்கள் கால தாமதமாகியிருந்தால் அவர் அயல் நாடுகளுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அறிக்கை ஒன்றில் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தமை கட்சியின் உண்மை நிலமையினை வெளிக்காட்டி உள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

தவிரவும் கமலேந்திரனின் கைதுடன் யாழில் இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட விடயங்களுக்கும் ஈபீடீபியினருக்கும் தொடர்பிருக்கிறதா? ஏன்ற கோணத்திலும் விசாரணைகள் தொடர்வதாக யாழ் பொலிஸ் அத்தியட்சகரும் ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைதாகியிருக்கும் கமலேந்திரன் கடந்த காலங்களில் ஈபிடிபியினரால் மேற்கொள்ளப்பட்ட தனக்கு தெரிந்த விடயங்களையும் தனது விசாரணைகளில் தெரிவிக்க வாய்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகக் குறைந்தது அரசாங்கத்திடம் அறிக்கை வாயிலாக கேட்கும் அரசியல் கோரிக்கைகளைக் கூட இனி முன்வைக்க முடியாத, அல்லது இனி எக்காலத்திலும் ஈபிடிபி   தனியாகச் சென்று தேர்தலில் போட்டியிடப் போகிறது என ஆளும் தரப்பிடம் சொல்ல முடியாத அளவிற்கு மிரட்டல்களையும் நிபந்தனைகளையும் விதித்து இந்த சிக்கலில் இருந்து ஈபிடிபியை தற்காலிகமாக விடுவிக்கலாம் என்ற கருத்துக்களும் வலுப்பெற்றுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100022/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கட்சிகள் தம்மை தீவக மக்களோடு நெருங்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மக்களின் நீண்ட கால துயருக்கு விடிவு வரனும்.

எல்லாம் வெறும் கதை அண்ணே பிரச்சினை சுடப்பட ஆயுதம் 9 mm இது எப்படி அவர்களிடம் வந்தது என்பதே பாதுகாப்பு தரப்பின் பிரதான பிரச்சினை ஆயுதம் களைய பட்டு போலிஸ் பாதுகாப்பில் திரியும் இவர்களிடம் புலிகள் பாவிக்கும் ஆயுதம் கிடைத்தது எப்படி எங்கிற கேள்வியே கேத்தாவின் கோவமும் கைதுக்கும் காரணம் .

 

வெளியில பேசிக்கிறாங்க :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.