Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக்கொடியினை ஏற்ற மறுத்த விவசாய அமைச்சர்; பரிசளிப்பு விழாவில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bf5fef5f57ac04f82162b7fb82ceb27d.JPG

வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளளார்.

அதன்படி மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அன்றைய நிகழ்வில் அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி வைத்தார்கள். 

அங்கு மாகாணக்கொடிக்கென கொடிக்கம்பம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் பின்னர் இடம்பெற்ற பிரதம விருந்தினர் உரையின்போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையினை அனைத்துத் திணைக்களங்களுக்கும் விடுத்துள்ளார். 
 
இதேவேளை, இலங்கையின் தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கம் நிற்கும் வரையில் தமிழர்களின் தேசியக்கொடியாகவும் அதனைக் கருதமுடியாது.

அத்துடன் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான தேசிய அடையாளமாக சிறுத்தையே பொருத்தமானது என்றும் அவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கூறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

07(9).jpg

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=784812496308253408

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தைக் கொடி நல்ல தேர்வாக இருக்கும்.. :D துணிந்து செயற்பட்ட விவசாய அமைச்சர் தமிழர்களின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை கண்டால் அலர்ச்சி ஆகும் தமிழர்களுக்கும் நல்ல சாட்டை அடி தான். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
துணிந்து செயற்பட்ட விவசாய அமைச்சர் தமிழர்களின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார்.
 
பி;கு : அமைச்சர் உங்களை கடத்துவதற்கு வெள்ளை வான் வரலாம் கவனமாக இருக்கவும் சில வேளை சிறிலங்கா கொலை வெறி கொண்ட புலனாய்வு பிரிவினர் தாக்குதல் நடத்துவர் எச்சரிக்கையாக பார்த்து நடக்கவும்.  
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சிங்கக்கொடியைப்பிடிக்கிறார்

தொண்டர்

அதை தொடமாட்டேன் என்கிறார்.........

 

இருவருமே

நல்ல  தலைவர்கள் அல்ல........ :(  :(  :(

யாழ்.குடாநாட்டில் காணியில் பணமோசடி! மடக்கிப் பிடித்தார் சுரேஸ் MP.

யாழ்.குடாநாட்டில் வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் நேற்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்இவ்வாறான மோசடியாளர்களிடம் மிக அவதானமாக இருக்குமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை கேட்டுள்ளது.

சாவகச்சேரி-கைதடி பகுதியில் காணிகளை வழங்குவதாக தனியாருக்குச் சொந்தமான காணிகளுக்கான போலி ஆவணங்களை பெற்றிருக்கும் ஒரு கும்பல் மக்களிடம் 16ஆயிரம் தொடக்கம் 20ஆயிரம் ரூபா வரையிலான பணத்தை பெற்றிருக்கின்றனர். அதனை உன்மையென நம்பிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிலர், மோசடியாளர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி குழுவினர் கைதடி யில் நேற்று காணிகளை வழங்குவதாக கூறி மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தகவலறிந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் காணி இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்கப் போவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் 16ஆயிரம் தொடக்கம் 20ஆயிரம் ரூபா பணத்தை பெற்றிருக்கின்றார்கள். நாம் அங்கே சென்றபோது அவர்கள் 92பேரின் பெயர்களை பதிவு செய்திருந்தார்கள்.

பதிவு நடவடிக்கையில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருந்தார். நாம் அவரிடம் கேட்டோம் காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? மக்களுக்கு வழங்கும் காணிகள்

யாருடையவை? என ஆனால் இந்தக் கேள்விகளுக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. ஆனால் அங்கு பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர், இருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார்.

ஒருவர் கொழும்பில் இருப்பதாகவும் மற்றவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவர்களால் தங்களை சரியாக அடையாளப்படுத்த முடியாத நிலையில் அங்கே பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இதற்கு முன்னதாக நாம் இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தமக்கு அவ்வாறு எதுவும் தெரியாது. தமக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என கூறினார். பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டபோது அவர்களும் தமக்கு இதில் தொடர்பில்லை என கூறிவிட்டார்கள்.

எனவே மிக மோசடியான முறையில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு கும்பல் குடாநாட்டிற்குள் முகாமிட்டிருக்கின்றது. அங்கே காணி பெற வந்திருந்த பெண் ஒருவர் கூறினார். தன்னிடம் மிச்சமாக இருந்த சில நகைகளை அடகு வைத்தும், விற்றுமே காணிக்கான பணத்தினை அவர்களிடம் வழங்கியதாக.

இவ்வாறு பல மக்கள் தங்கள் இயலாமைக்கும் மத்தியல் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வாழ்ந்து

கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றும் இத்தகைய மோசடி பேர்வழிகளை நாம் அடையாளம் காணவேண்டும். மக்கள் இவர்கள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்கவேண்டும்.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இத்தகைய மோசடி பேர்வழிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.land_mosadi1.jpg land_mosadi2.jpg land_mosadi3.jpg

http://www.jvpnews.com/srilanka/55577.html

130124174845_lanka_national_flag_304x171

இலங்கையின் தேசியக் கொடியிலுள்ள 'வாளேந்திய சிங்கம்' சிங்களவர்களையே குறிக்கிறது: அமைச்சர்

 

இலங்கையின் வடக்கே, மன்னாரில் பள்ளிக்கூட விழாவொன்றின்போது நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர், தம்மால் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

சிங்கக் கொடி சிங்கள மக்களின் அடையாளம் என்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான கொடியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

தேசிய இனங்கள் எல்லாவற்றின் அம்சங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் தேசியக் கொடி அமைய வேண்டும் என்றும், வாளேந்திய சிங்கம் சிங்களவர்களை மட்டுமே குறிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான தேசியச் சூழல்கள் காணப்படுவதாகவும் அப்படி இரண்டு தேசியச் சூழல்களுக்கும் பொருந்தும் விதத்தில் அமையும் கொடியையே தான் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

'மாகாணசபைக் கொடிக்கு முக்கியத்துவம்'

 

131209174310_npc_flag_jaffna_304x171_bbc

வடக்கு மாகாணசபைக் கொடி

 

சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கமுடியாது என்று வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தான் கூறிவந்ததாக ஐங்கரநேசன் கூறினார்.

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நல்லெண்ணத்தைக் காட்டவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், அதற்காக சிங்கக்கொடியை அப்புறப்படுத்திவிட்டு பொருத்தமானதை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கையின் அரசியலமைப்பின்படி சிங்கக் கொடியே நாட்டின் தேசியக் கொடி.

 

அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் அளித்தே, மாகாணசபை பதவியை நீங்கள் பொறுப்பேற்றீர்கள் என்று அமைச்சரிடம் தமிழோசை சுட்டிக்காட்டியது.

 

தான் 'தேசியக் கொடியை அவமதித்ததாகக் கொள்ளமுடியாது' என்றும் தனது மனதுக்கு ஒவ்வாதச் செயலை தான் செய்யவிரும்பவில்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

 

இதேவேளை, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடங்கள், திணைக்களங்கள் போன்ற அரச நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளின்போது மாகாணசபையின் கொடிக்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131209_lionflagiyngaranesan.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.