Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப்பெயர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பெயர்கள்

 

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு.
1456134_649511025107349_1358724850_n.jpg

 

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு சூப்பர் அப்பு. அப்ப வடைக்கு ஆங்கிலத்தில் எப்படி சொல்வது? தமிழ் பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தமிழ் சொல்லாகவே உள்ளது. மற்றவர்களின் உணவை அந்த பெயராலேயே அழையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூல் ட்ரிங்ஸ் = குளிர்பானம் என்று நினைத்திருந்தேன். பானம் என்பது தமிழ் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தமிழர்களுக்கு நாடு ஒன்றை அமைத்துக்கொள்ளுவம் அதற்க்கு பிறகு இந்த தமிழ் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
 
இது எனது ஆதங்கம்.  
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் ஒத்துக்கொள்கிறேன். தமிழனுக்கு இந்த உலகில் நாடு ஒன்று வேண்டும். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கியம் இன்றைய உலகிற்கு பொருந்தாது. ஆனால் இதுவும் நமக்கு வேண்டும் ஏனெனில் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் எடுத்து விட்டாலும் தமிழால் மட்டும்தான் தனியே நிற்க முடியும். தமிழனின் அறிவுச் சொத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. அழிந்தவை போக மீதி. அதை இன்றைக்கு நம்மால் புரிந்து கொள்ளமுடியாததற்கான காரணம் இதுதான். அயல்மொழிச்சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டதுதான். 

 

விரைவில் நம் அறிவுச் சொத்துக்களின் ஒரு பகுதி வெளிவர முயற்சி செய்கிறோம். அதென்னவெனில் உலகின் எப்பகுதியிலும் இயற்கையை உணர்வது. அதாவது மழை பெய்வதை குறைந்த பட்சம் 8 நாடகளுக்கு முன்பே தமிழனின் கணிப்பினால் உறுதியாக சொல்ல முடிய்ம். புயல், சூறாவளி, சுனாமி (ஆழி....) போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. எங்களுக்கு தேவை இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிவாளிகள் (Intellectuals). யாரேனும் இருந்தால் இணைப்பில் வரவும். யாழில் வெளியிடப்படும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...

அது தமிழ் மொழியின் புலமை..

தமிழ் என்ற வார்த்தைக்கு எல்லா மொழியிலும் 'தமிழ்' தான் அது தமிழ் மொழியின் வலிமை..

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகுதமிழில் அர்த்தம் உண்டு..

அது தமிழ் மொழியின் பெருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு கரு என்பது ஒரு ஆண், பெண் இருவரும் சேர்ந்து உருவாக்குவது.

அதாவது இரண்டு உடல்களும் இரண்டு உயிர்கள் ஒன்றாக கலந்து ஒரு கருவை உருவாக்குகிறது. அது போல தமிழ் மொழியில் கரு என்ற வார்தையை உருவாக்க இரண்டு மெய்யும் (மெய் எழுத்துக்களும்) இரண்டு உயிரும் (உயிர் எழுத்துக்களும்) தேவை படுகிறது. கரு உருவாவதை எழுத்து வடிவத்திலேயே சொல்லும் தமிழின் பெருமையை என்னவென்று சொல்வது.

www.eelavenkai.blogspot.com
1473015_730714513607189_1146103461_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1486679_624546497592472_2127990864_n.jpg

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துரிதமான உலகமயமாக்கல்நடைபெறுகையில் நாம் புதிது புதிதாகத் தமிழப்பெயர்களை உருவாக்குவதில் பெரிய பிரயோசனம் வரப்போவதில்லை.  வேற்று நாடுகளுக்கோ வேறு மொழி பேசப்படும் பிரதேசங்களுக்கோ செல்பவர்கள் இத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு எதை வாங்கிச் சாப்பிட முடியும்.  வேண்டுமானால் நமது ஊர்களில் இதனைப் பாவிக்கலாம். வாய்ப்பனை யாழ்ப்பாணத்திற்கு வெளியே போனால் கேட்டு வாங்க முடியாது.

மாணவர்களின் விஞ்ஞான, கலைப் பாடங்களுக்கான கல்வியறிவைத் தாய்மொழி மூலப் போதனையின் மூலம் மேம்படுத்தத் தமிழக் கலைச்சொற்களை உருவாக்கினால் அது உதவியாயிருக்கும்.  அதற்கும் ஒரு எல்லை வேண்டும். தற்போது ஜெனிவாப் பெயரீட்டுத் திட்டத்தைச் சர்வதேசம் ஏற்றுக்கொண்டு பல விஞ்ஞானப் பெயர்களைக் குறிப்பாக இரசாயனப்பெயர்களையும், இனப் பாகுபாட்டுப் பெயர்களையும்  எல்லா மொழிகளிலும் ஒன்றாகவே பாவிக்கின்றனர்.

சுவாமி விபுலானந்தர் இந்த விடயத்தில் முயன்று அது தனது அரிய நேரத்தைச்செலவிட்டார்.  ஆனால் அவரது முயற்சி விழலுக்கிறைத்த நீராய்ப் போனது.  உதாரணமாக ஒட்சிசனுக்குத் தீயகமென்றும், நைதரசனுக்குக் காலகமென்றும் பெயரிட்டு நைதரசனீரொட்சைட்டுக்குக் காலகத் தீயதை எனப் பெயரிட்டார்.  இந்த முயற்சி பின்னர் யூனிவேசல் விஞ்ஞானப்பெயர்கள் உருவாக்கப்பட்ட பின்னர் கருத்தற்ற முயற்சியாகிவிட்டது. 

 

இப்படித்தான் விசுக்கோத்துக்குப் பெயர் வைத்தாலும் எதிர்காலத்தில் நடக்கும்.  ஆகவே கண்ணை மூடிக்கொண்டு பெயர்களை உற்பத்தி செய்வதைவிடத் தேவையறிந்து  தமிழ்ப் பெயர்களையுருவாக்குவதே அறிவு பூர்வமானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.