Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நிமிடங்களில், இந்தியாவின் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
05-gslv-d51-600.jpg

 

இன்னும் சில நிமிடங்களில்,  விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5

 

ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது.

 

ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது.

 

இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜிஎஸ்எல்வி. 50 மீட்டர் உயரமும், 415 டன் எடை கொண்டதும் இது. அதாவது 80 பெரிய சைஸ் யானைகளின் எடைக்குச் சமமானதாகும். இதை நிறுத்தி வைத்தால் அது 17 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்கு வரும்.

 

மூன்று அடுக்குகளைக் கொண்ட ராக்கெட், ரூ. 350 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டு ஏவப்படவுள்ளது.

 

2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரத்தை ஜிஎஸ்எல்விக்காக பயன்படுத்துகிறது இந்தியா என்பது முக்கியமானது. அனைத்தும் நல்லபடியாக நடந்து ஏவுதலும் சிறப்பாக வெற்றி பெற்றால், இதுபோன்ற ராக்கெட்டுகளை வைத்துள்ள வெகு சில நாடுகளில் இந்தியாவும் இணையும். மேலும் இது இந்தியாவுக்கு மார்க்கெட் சாதகத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியே இது ஏவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏவுவதற்கு 74 நிமிடங்களுக்கு முன்பு எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

கடா வெட்டி கறிச்சோறு படைக்கனும் அப்பத்தான்   ராக்கட் கிளம்பும் இல்லாவிட்டால் ராக்கட் செய்தவன் வீட்டிற்க்கு மேல் விழுந்து பழி வாங்கும் என ஒரு சாமியாடியிம் இம்முறை சொல்லவில்லையாக்கும் :D  :D

திருப்பதியில் இன்று ஏதாவது ஸ்பெஷல் அபிசேகம், யாகம் செய்தார்களோ தெரியாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதியில் இன்று ஏதாவது ஸ்பெஷல் அபிசேகம், யாகம் செய்தார்களோ தெரியாது...

 

isro_rocket_launch_prayer.jpg

 

மங்களாயன் விண்ணிற்கு செலுத்த முதல், திருப்பதியில் நடை பெற்ற விசேட பூஜை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=KIvOEkJhRME

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ISRO.jpg

 

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி டி 5 ..

தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினும் வெற்றி!

 

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி டி 5 ராக்கெட்.. தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினும் வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று மாலை 4.18 மணிக்கு ஏவப்பட்டது.

 

05-gslv-d5-1221-600-jpg.jpg

 

ராக்கெட் ஏவுதல் முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

 

05-gslv-2-600-jpg.jpg

 

ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்துப் பிரிந்தன. குறிப்பாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் சிறப்பாக செயல்பட்டு கடைசியில், ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஜிசாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

 

05-glsv-3-600-jpg.jpg

 

தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜின்

இன்று வெற்றிகரமாக செயல்பட்ட கிரையோஜெனிக் என்ஜின், இந்தியாவின், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டின் முதல் அடுக்கு வெற்றிகரமாக முதலில் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது அடுக்கு பிரிந்தது. கடைசியாக கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது.

 

05-cryogenic-600-jpg.jpg

 

முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி. டி5 50 மீட்டர் உயரமும், 415 டன் எடை கொண்டதும் இது. அதாவது 80 பெரிய சைஸ் யானைகளின் எடைக்குச் சமமானதாகும். இதை நிறுத்தி வைத்தால் அது 17 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்கு வரும். மூன்று அடுக்குகளைக் கொண்ட ராக்கெட், ரூ. 350 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை ஜிஎஸ்எல்விக்காக பயன்படுத்தியுள்ளது இந்தியா என்பது முக்கியமானது.

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியே இது ஏவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏவுவதற்கு 74 நிமிடங்களுக்கு முன்பு எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.