Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி

 
indexhjhkhkh.jpg

Tributes were paid Thursday to a high school student who officials say foiled a suicide bomb attack in an act of “bravery” that cost him his life.

Aitazaz Hassan, 17, was killed instantly - but police and school officials said the lives of up to 1,500 other students at the school in Pakistan had been saved.

"My son did a heroic job and I am proud of his bravery,” said the boy’s grieving father, Mujahid Ali. பெஷாவர், ஜன. 10–

பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர்.

140108-pakistan-boy-02.photoblog600.jpgஇந்த நிலையில், ஒரு பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஒரு தீவிரவாதியை மாணவன் ஒருவன் தடுத்து நிறுத்தி தனது உயிரை தியாகம் செய்தான். அதன் மூலம் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.

அவனது பெயர் அய்த் ஜாஷ் ஹசன் (14). இவன் கைபர்–பக்துன்கவா மாகாணத்தின் ஹன்சு மாவட்டத்தில் இப்ராகிம் ஷாயில் என்ற இடத்தை சேர்ந்தவன். அவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான்.

நேற்று அவன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தான். அப்போது சந்தேகப்படும் நிலையில் ஒரு மர்ம நபர் அங்கு வந்தான்.

அவன் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி என்பதை அறிந்த ஹசன் பரபரப்பானான். அவன் பள்ளிக்குள் நுழைந்து விடாதபடி ஓடோடிச் சென்று ‘கேட்’ வாசலில் அவனை தடுத்து நிறுத்தினான்.

அதற்குள் தற்கொலை படை தீவிரவாதி தான் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.

அதில், தீவிரவாதியுடன் சேர்ந்து மாணவன் ஹசனும் உடல் சிதறி பலியானான். இதன் மூலம் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.

அவனது தைரியத்தையும், தியாகத்தையும் கிராம மக்கள் பாராட்டினார்கள். தற்போது இவன் பாகிஸ்தானின் ‘ஹீரோ’ என புகழப்படுகிறான்.

 

.maalaimalar.com

 

  • கருத்துக்கள உறவுகள்

தைரியமான இளைஞன்..! ஆழ்ந்த இரங்கல்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்
பெஷாவர்: பாகிஸ்தானில் தான் படிக்கும் பள்ளியை தகர்க்க வந்த தற்கொலைப்படை தீவிரவாதியை தன்னுயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்திய 14 வயது மாணவனை அரசு ஹீரோவாக அறிவித்துள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள கைபர்-படுங்கவா மாகாணம் ஹங்கு மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்சாயில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தவர் ஐட்ஜாஸ் ஹஸன்(14). ஹஸன் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால் அவரை காலை வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. 
 
காலதாமதமாக வந்ததற்கு தண்டனையாக அவர் பள்ளி நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் பள்ளி வாயில் நோக்கி வந்தார். அவரை தடுத்து நிறுத்த ஹஸன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினார். ஆனால் அது அந்த நபர் மீது படவில்லை. இதையடுத்து ஹஸன் ஓடிப் போய் அந்த நபரை பிடித்து அவர் பள்ளிக்குள் நுழைய முடியாமல் தடுத்தார். உடனே அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். 
 
இந்த சம்பவத்தில் ஹஸன் உயிர் இழந்தார். ஹஸன் அந்த தற்கொலைப்படை தீவிரவாதியை வாசலில் தடுத்து நிறுத்தியதால் பள்ளிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிர் தப்பினர். ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இப்ராஹிம்சாயில் நடந்த இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ ஜாங்வி பொறுப்பேற்றுள்ளது. 
 
இந்நிலையில் தன்னுயிரைக் கொடுத்து பல மாணவர்களின் உயிரைக் காத்த ஹஸன் ஒரு சிறந்த வீரர் என்று கைபர்-படுங்வா அரசு தெரிவித்துள்து. 
 
 

தற்கொலை தீவிரவாதியை தடுக்க உயிர்த்தியாகம் செய்த மாணவனுக்கு நாட்டின் உயரிய விருது: பாகிஸ்தான் அரசு கவுரவம்
 

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹங்கு மாவட்டம் இம்ராம்சாயில் உள்ள அரசுப் பள்ளியில் தாக்குதல் நடத்வந்த தற்கொலைப்படை தீவிரவாதியை, 9-ம் வகுப்பு மாணவனான அயத்சாஜ் ஹசன் துணிச்சலுடன் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளான். அப்போது அந்த தீவிரவாதி, திடீரென தனது குண்டை வெடிக்கச் செய்ததில் தீவிரவாதியுடன், மாணவன் ஹசனும் உடல் சிதறி பலியானான்.

தக்க சமயத்தில் தீவிரவாதியை தடுத்து நிறுத்தி, தனது உயிரை தியாகம் செய்ததன் மூலம், ஏராளமான மாணவர்களை ஹசன் காப்பாற்றியுள்ளான். அவனது இந்த தியாகத்தைப் பாராட்டி, இறப்புக்குப் பின் வழங்கப்படும் உயரிய விருதினை அவனுக்கு வழங்க காவல்துறை தலைவர் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற பிரதமர் நவாஸ் ஷெரீப், இறந்தபின் வழங்கப்படும் சிடாரா-இ-சஜ்ஜத் என்ற உயரிய விருதினை அயத்சாஜ் ஹசனுக்கு வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் பாகிஸ்தான் தேசிய தினமான மார்ச் 23-ம் தேதி ஹசனின் குடும்பத்தினரிடம் இந்த உயரிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய், ஹசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தனது உயிரை தியாகம் செய்து மாணவர்களை காப்பாற்றிய ஹசனின் வீரத்தை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள மலாலா, ஹசனுக்கு உயரிய தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.maalaimalar.com/2014/01/11201708/Pakistan-honours-teenage-bomb.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.