Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் பேசுறது உண்மை..!

Featured Replies

மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும்.

இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெரி டீ சில்வா, சிறிலங்கா இராணுவத்தில் ஆட்பலம் போதாமல் இருப்பதால் எல்லா இடங்களையும் தக்கவைக்க முடியாத நெருக்கடி நிலை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். ஆகையினால் சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆக்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெரி டீ சில்வாவும் முன்னர் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்கப் பெரும் முயற்சி மேற்கொண்டவர்தான். முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும் இராணுவத் தீர்வில் காட்டிய ஆர்வத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாழ். குடாநாட்டில் பாரிய சூரியகதிர் நடவடிக்கையும் இவர் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.

அன்று சூரியகதிர் நடவடிக்கை முடிவுற்றபோது சிறிலங்கா ஆட்சியாளர்கள் குறிப்பாக சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ஆகியோரும் இராணுவத் தளபதி ஜெரி டீ சில்வாவும் விடுதலைப்புலிகளில் 60 சதவீதம்பேர் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றார்கள். இன்னமும் மிகுதி 40 சதவீதமே உள்ளனர். அவர்களையும் விரைவில் ஒழித்துக் கட்டிவிடுவோம் என்பது அவர்களின் கூற்றுக்களாகவும் மதிப்பீடாகவும் இருந்ததெனலாம்.

ஆனால் தற்பொழுதோ, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என ஜெரி டீ சில்வா கூறுகின்றார். இவ்வாறானால் அன்று அவர் கூறியது என்ன? பல வீனப்பட்டுப்போன விடுதலைப் புலிகள் எவ்வாறு பலம் பெற்றவர்கள் ஆனார்கள்? 60 வீதம் பலவீனப்பட்டுபோன விடுதலைப் புலிகளால் பாரிய ஜயசிக்குறு நடவடிக்கையை எவ்வாறு வெற்றிகொள்ளவும், ஆனையிறவுப் படைத்தளத்தைத் தாக்கி அழிக்கவும் முடிந்தது?

இது ஒருபுறம் இருக்கத் தற்போதைய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறுவதற்கும் முன்னாள் இராணுவத் தளபதியின் கூற்றுக்கும் இடையில் முரண்பாடு இல்லையா? இதில் யார் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது? அதாவது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறுவது தவறா? அன்றி முன்னாள் இராணுவத்தளபதியின் மதிப்பீடு தவறா?

ஆனால் இதில் தான் கூறுவது உண்மைக்கு மாறானது என்பது சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நன்கே தெரியும். ஆனால் அவர் தனது பதவிக்காலம் வரையில் அவ்வாறே பேசுவார். ஏனெனில் அதுவே சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பின் மரபாகிவிட்டது.

அதாவது பதவியில் இருக்கும்போது விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியும் என்றும், புலிகளைத் தோற்கடிக்கப்படக்கூடிய கட்டத்திற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் பேசிக்கொள்வது உண்டு. அதாவது சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் இணைந்து மக்களை ஏமாற்றுவதற்கான இராணுவத் தளபதியின் பேச்சே இதுவாகும்.

அதாவது ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்தளபதிக்கும் யுத்தம் தேவையானதாக இருக்கையில் வெற்றியின் விளிம்பில் இராணுவம் இருப்பதாகப் பிரச்சாரம் செய்வதன் மூலமே யுத்தத்தைத் தொடரவும் அதன்மூலம் அனுகூலங்களை அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்புக்கிட்டுகின்றது. அதாவது அரசியல்வாதிகள் மக்களை யுத்தம் நோக்கித்திருப்பி விடுவதன் மூலம் ஏனைய நெருக்கடிகளில் இருந்து தப்பித்து ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கும் அதேவேளை, இராணுவத்தளபதிகளை யுத்தம் பெரும் வசதி படைத்தவர்களாக்கி விடுகின்றது.

ஆனால் பதவிக்காலம் முடிந்ததும் ஓரளவு யதார்த்தத்தையும் உண்மைகளையும் பேசுவதற்கு அவர்கள் முற்படுகின்றனர். ஏனெனில் தற்பொழுது அவர்கள் யதார்த்தத்தைப் பேசுவதால் நட்டம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் இனப்பிரச்சினை போன்ற விடயத்தில் இராணுவ நோக்கிலான மதிப்பீடுகளினால் மட்டும் தீர்வை எட்டிவிடமுடியாது. ஏனெனில் இனப்பிரச்சினை என்பது ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. ஓர் இனத்துடன் சம்பந்தப்பட்டதாகும்.

நன்றி: ஈழநாதம்

இது பிபிஸில் வந்த செய்தியா? :roll: :?: :!:

நம்ம மதியை தவிர யாரும் உண்மை பேசறமே இல்லை :D:D:D

  • தொடங்கியவர்

சரியாச் சொன்னிங்கள்..உங்கட மதிக்குத்தான் தெரியும் எது உண்மை என்று..! :wink: :P

உண்மைகளைப் போட்டுடைச்சிடும் என்றுதானே மதிக்கு NO ENTRY

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு என்ன சொல்கின்றீர்கள்?

மதி உண்மை பேசினதால் தான் வெளியேற்றப்பட்டார் என்றா சொல்கின்றீர்கள்? அப்படி என்ன உண்மை பேசினவர் என்று சொல்லமுடியுமா?

சும்மா, தடை விழுந்தவுடன், தியாகி, தீர்க்கதரிசி பட்டம் கொடுப்பதை நிறுத்துகின்றீர்களா? அவர் கதைத்த உண்மை பற்றி அறிய ஆவலாக இருக்கின்றேன்!

ஆனால், ஒன்று மட்டும் விளங்குது. உங்களுக்கு ஏன் தடை விளவில்லை என்று!

வசம்பு என்ன சொல்கின்றீர்கள்?

மதி உண்மை பேசினதால் தான் வெளியேற்றப்பட்டார் என்றா சொல்கின்றீர்கள்? அப்படி என்ன உண்மை பேசினவர் என்று சொல்லமுடியுமா?

சும்மா, தடை விழுந்தவுடன், தியாகி, தீர்க்கதரிசி பட்டம் கொடுப்பதை நிறுத்துகின்றீர்களா? அவர் கதைத்த உண்மை பற்றி அறிய ஆவலாக இருக்கின்றேன்!

ஆனால், ஒன்று மட்டும் விளங்குது. உங்களுக்கு ஏன் தடை விளவில்லை என்று!

மாமனிதர் பட்டத்தை கூட விளாசினவ இப்போ தங்களில் ஒருவருக்கு தியாகி வேடம் கொடுக்க படுகிறது... அப்படியானால் இது எந்த உறை வாள் எண்று தெரிய வில்லையா...??? :idea:

வசம்பு என்ன சொல்கின்றீர்கள்?

மதி உண்மை பேசினதால் தான் வெளியேற்றப்பட்டார் என்றா சொல்கின்றீர்கள்? அப்படி என்ன உண்மை பேசினவர் என்று சொல்லமுடியுமா?

சும்மா, தடை விழுந்தவுடன், தியாகி, தீர்க்கதரிசி பட்டம் கொடுப்பதை நிறுத்துகின்றீர்களா? அவர் கதைத்த உண்மை பற்றி அறிய ஆவலாக இருக்கின்றேன்!

ஆனால், ஒன்று மட்டும் விளங்குது. உங்களுக்கு ஏன் தடை விளவில்லை என்று!

பரவாயில்லை மதிக்கும் இங்கு இரசிகர் மன்றம் இருக்கு இப்பத்தானே விளங்குது நம்ம வம்புவும் மதியும் ஒரே கட்சியென்று. வாழ்க மனிதாபிமானம்.

இராணுவம் பொதுமக்களை கொன்றால் அது யுத்தம்.

புலிகள் இராணுவத்தை கொன்றால் அது பயங்கரவாதம்

இப்படித்தான் வம்புவும் மதியும் வளர்க்கப்பட்டுள்ளனர்.

அவங்களும் என்ன செய்வாங்கள்

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாரடா

சரியாச் சொன்னிங்கள்..உங்கட மதிக்குத்தான் தெரியும் எது உண்மை என்று..! :wink: :P

தெரிந்த படியால தானே இப்பவும் உம்மை ஊருக்குளே சேர்ப்பது இல்லை

:P :D:D

நரிவாழும் இடம்
:P

மேற்கோள்:

வசம்பு என்ன சொல்கின்றீர்கள்?

மதி உண்மை பேசினதால் தான் வெளியேற்றப்பட்டார் என்றா சொல்கின்றீர்கள்? அப்படி என்ன உண்மை பேசினவர் என்று சொல்லமுடியுமா?

சும்மாஇ தடை விழுந்தவுடன்இ தியாகிஇ தீர்க்கதரிசி பட்டம் கொடுப்பதை நிறுத்துகின்றீர்களா? அவர் கதைத்த உண்மை பற்றி அறிய ஆவலாக இருக்கின்றேன்!

ஆனால்இ ஒன்று மட்டும் விளங்குது. உங்களுக்கு ஏன் தடை விளவில்லை என்று!

மதி எழுதியது எல்லாம் சரி என்று நான் வாதிடவில்லை. ஆனால் பலவேளைகளில் பலர் தமது அதீத கற்பனைகளில் கொண்டு வந்து பரபரப்பிற்காக போட்ட செய்திகளின் உண்மைத் தன்மைகளை போட்டுடைத்தவர். அது தான் பலருக்கு இங்கு பிரைச்சினையாகவிருந்தது.

எனக்குத் தடை போடுவதா?? உந்த புூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை. முடிந்தால் முயன்று பாருமன்

  • கருத்துக்கள உறவுகள்

மதி சொல்வதே கற்பனைக் கதைகள். அவர், மற்றவர்களின் கற்பனைக்கு தெளிவாக்கினார் என்றால் நம்ப முடியுமா? எதற்கெடுத்தாலும், கறுணாக்கும்பலையும், டக்ளஸ் கும்பலையும் ஆகா, ஓகோ என்று புகழ்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அதில் உள்ள உண்மைத்தன்மை அனைவருக்கும் தெரியும். கறுணா பெட்டிக்கடை திறந்தாலே, மக்களின் சேவை அது என்று கதை அளக்கும் அவரின் கதையை உண்மை என்கின்றீர். காலமடா சாமி!

மற்றது. நான் சின்னப்பையன். ஒண்டிக்கொண்டி வாறியா" ஸ்ரைலில் மிரட்டாதீர்கள்! நான் சொன்னது."மதி உண்மை சொல்வதால் தான் தடை செய்யப்பட்டதாக நீர் சொல்கின்றீர் என்றால், உம்மைத் தடை செய்யததற்கு, நீர் பொய் சொல்கின்றீர் என்றா அர்த்தம் என்று தான் கேட்டேன்.

இதற்குப் போய்ச் சின்னப்பயலை மிராட்டாதையுங்கோ!

அட நீர் சின்னப்பயலா????? பல சின்னப்பயல்களுக்கு அப்பாவென்றல்லோ அறிந்தேன். :roll: :lol: நான் போய் உம்மை மிரட்டுவதா?? அப்படியெல்லாம் இல்லை ஒரு அண்ணன் தம்பி பாசம் தான். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.