Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா போர்க்களத்தில், தமிழினம் வெல்வது உறுதி! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Genewa-meeting-150news.jpg

ஜெனிவா காச்சல் சிங்கள ஆட்சியாளர்களை தேசங்கள் எங்கும் ஓட வைத்துள்ளது. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே ஆபிரிக்க - இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறி வைத்து தனக்கான பாதுகாப்பு வளையத்தை அமைக்க முயற்சி செய்துவரும் காலத்தில், அவரது துதர்களாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார். தற்போது, மகிந்த ராஜபக்சேயின் செயலாளது லலித் வீரதுங்க அமெரிக்கா சென்றுள்ளார்.

  

ஜெனிவா காச்சலால் சிங்கள ஆட்சியாளர்கள் திசை எங்கும் ஓடித் திரிய, இந்திய காங்கிரஸ் கட்சியோ தாங்க முடியாத வயிற்று வலியுடன் துடிக்கின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் காலத்தை அண்டியே, இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், ஏற்பட்ட கிலி காங்கிரஸ் காரர்களுக்கு வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையில் காங்கிரஸ் கட்சி வகித்த பாகம் மிக அதிகம். இதனை, சிங்கள ஆட்சியாளர்களே நன்றியுடன் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டிருந்தார்கள். இதனை நிராகரிக்க முடியாத காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் பெரும் எதிர் விழைவினையும், வாக்குச் சரிவினையும் எதிர்கொண்டுள்ளது. அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக் கணிப்பில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 1 இலிருந்து, 3 இடங்களே கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இதுவும், தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்படுத்திக்கொள்ளும் அணியினைப் பெறுத்தே சாத்தியப்படும். பெரும்பாலும், தமிழக கட்சிகளால் கைவிடப்பட்ட, தீண்டத்தகாத கட்சியாகக் குறுகிப்போயுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலிருந்து முற்றாகவே துடைத்து எறியப்படும் என்றே தமிழ் உணர்வாளர்கள் நம்புகின்றனர்.

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில், மேற்குலகின் ஆதரவோடு அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நீதியின் பக்கம் நிற்கவேண்டிய அழுத்தத்தை தமிழகம் உருவாக்கும். அந்த நிலையில், சிறிலங்கா அரசுக்கெதிரான தீர்மானத்தை அப்படியே ஆதரிக்க இந்தியா முடிவு செய்யுமானால், சிறிலங்கா தனது போர்க் குற்றப் பங்காளிகள் குறித்த உண்மையை ஆதாரங்களோடு வெளிப்படுத்தும் கட்டாயத்துக்குள் தள்ளப்படும். தமிழினப் படுகொலையில் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வகித்த பங்கு அம்பலத்திற்கு வந்தால், நிச்சயம் அது தமிழகத்தில் மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரைக்கு அது பயன்படுத்தப்படும். இதுவே, காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுள்ள ஒரே ஆறுதல், பேர்லின் நகரில் நடைபெற்று முடிந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மட்டுமே. இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, அமெரிக்காவும், பிரித்தானியாவும் சிங்கள அரசுக்கு ஆயுத, புலனாய்வுத் தகவல்களை வழங்கி போரில் பங்கேற்று, அங்கு நடந்த இனப் படுகொலைக்கு உதவியது என்ற குற்றச்சாட்டைப் பதிவு செய்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இந்தப் போரில் இந்தியாவின் வகிபாம் தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை என்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணைகள் இன்னமும் முடிவடைந்து விடவில்லை. இறுதிப் போரில் இந்தியாவின் வகிபாகம் மிக அதிகம் என்பதனால், மக்கள் தீர்ப்பாயம் அதனை முழுமையாகத் திரட்டாமல், எழுந்தமான ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்பதனாலேயே அவர்களது அறிக்கையில் இந்தியாவின் வகிபாகம் அடக்கப்படவில்லை என்றே மக்கள் தீர்ப்பாயம் தொடர்பான அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிங்கள தேசமும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களும் நிலை கொள்ள முடியாத சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், புலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது. அதை நோக்கியே அனைத்துத் தமிழர்களும் தங்கள் கவனத்தைக் குவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் கங்கணம் கட்டி நிற்கின்றன. 10 ஆம் திகதியைக் குறி வைத்து, பெரும்பாலான அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தம் நடை பயணங்கள், வாகன பவனிகளுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கனடாவில், இதற்கான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களைக் குறி வைத்த ஒரு நகர்வும் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவான தமிழ்க் குழு உறுப்பினர்களையும், சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்ட சில வர்த்தகர்களையும் இணைத்து, ஒரு அணியை உருவாக்கி, புலம்பெயர் சிங்கள மக்களுடன் களத்தில் இறக்கி ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஜெனிவாவில் நடாத்துவதற்கும் சிங்கள ஆட்சியாளர்கள் பாரிய முயற்சி செய்து வருகின்றது.

கடந்த மனித உரிமைகள் மாநாட்டின்போதும், இப்படியான ஒரு தமிழின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம், போதிய மக்கள் பங்கேற்பு இல்லாத காரணத்தால் பிசு பிசுத்துப் போய்விட்ட்து. அதனால், மிகக் கடுமையான கண்டனத் தீர்மானம் ஒன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்படலாம் என nதிர்பார்க்கும் சிங்கள அரசு, தனது வளம் அனைத்தையும் செலவிட்டு, மேற்குலகில் வாழும் சிங்கள மக்களை இந்த வருட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அமைச்சர்கள் அடங்கிய ராஜதந்திரிகள் குழுக்கள் பிரித்தானியாவிலும், இத்தாலியிலும் தங்கியிருந்து, சிங்கள மக்களை அணி திரட்டும் முயற்சியினை மேற்கொண்டுள்ளனர். பிரான்சிலும், இது தொடர்பான சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒன்றின்மூலம் முள்ளிவாய்க்காலில் தமிழர்களைத் தோற்கடித்த சிங்கள இனவாதம், இப்போது, ஜெனிவா மன்றத்தில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர்களது ஜனநாயகப் போர்க் களத்தைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தப் போர்க்களத்தில், தமிழினம் வெல்வது உறுதி!

 

-இசைப்பிரியா-

 

 

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=102094&category=Article&language=tamil

எப்படி எம்மக்கள் துடிக்க பதைக்க முள்ளிவாய்காலில் வேதனைகளை அணுபவித்த துன்பங்களுக்கு நிச்சயம் இவர்களுக்கு மறக்க முடியாத தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.. இதன் மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வுக்கு வழி செய்யவேண்டும்.. எந்தவழியாலும் எலி தப்பாமல் பொந்துகள் அடைக்கப்படவேண்டும். சுதந்திரம் கேட்டவனுக்கு 4 வருடங்களாக தார் ரோட்டும், பாலங்கள் கட்டியுள்ளோம் என மனிதவுரிமை மகா நாட்டை திசை திருப்பி பேய்காட்டும், காதில் பூ சுத்தும் அறிக்கைகளுடன் வந்தாலும் எம்மக்கள் சரியாக நாடுகளை அணுகினால் எம்மக்கள் சரியான பலனைப்பெறுவார்கள்.. அல்லது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகும்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ 2015, 2016 என்று ஜெனிவா கூட்டம் தொடர்ந்தாலும் தொடரலாம். காங்கிரஸ் திமுக, தேதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் இக்கட்டுரையில் எழுதப்பட்டதினைவிட சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கலாம்.

வெற்றி பெற பாடுபடும் எல்லா ஈழ ஆதரவாளர்களுக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.