Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவிகளின் அமெரிக்க கைது

Featured Replies

அமெரிக்க தமிழர்கள் கைது ஒரு சத்தியத்திற்கு மாறான கொடூர நிகழ்வை அறிந்தவன், அவன் ஒரு கோழையாக இருந்தாலும் அதற்குரிய எதிர்ப்புணர்வை காட்டியே தீருவான். - FBI யின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை.

தம் சொந்தங்களின் தாங்கமுடியாத இழப்பின் காரணமாக உணர்வுகளால் உந்தப்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிலரை ஏமாற்றி, தம் சதிவலைக்குள் சிக்கவைத்து அதனை தம் புலனாய்வு வெற்றியாக தம்பட்டமடிக்கும் தரங்குறைந்த புலனாய்வு செயற்பாடொன்றை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சமஷ்டிப் புலனாய்வுப் பணியகம் (FBI) அரங்கேற்றியுள்ளது.

இந்த வகையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் எனக் கூறி எட்டு அப்பாவித் தமிழர்களை (FBI) கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மட்டுமன்றி, மனச்சாட்சியுள்ள மனித மனங்களின் நெஞ்சையே உருக்கத்தக்கதான கோரப்படுகொலைச் சம்பவம் ஒன்று கடந்த 14.08.2006 அன்று இலங்கையின் வடபகுதியான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவிகள் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சு மூலமான இந்தக் கோரக் கொலைவெறியாட்டத்தில் 50ற்கு மேற்பட்ட அப்பாவி பாடசாலை மாணவிகள் உடல் சிதறிப் பலியானதுடன் இருநூறிற்கு மேற்பட்ட மாணவிகள் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகினர்.

சிறிலங்கா அரசின் இப் பயங்கரவாதச் செயல், அரசின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களையும் மீறி உலகின் பார்வைக்கு அம்பலமாகின. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெப் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உண்மையை வெளிப்படுத்தியமையால் சிறிலங்கா அரசின் கோரத்தன்மை உலகின் முன் அம்பலமாகியது.

இந்தக் கொடூரம் ஐ.நா.செயலர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு உட்பட்டிருந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழர் மீதான விமானக் குண்டு வீச்சுக் கொலைகள் முடிவுக்கு வரவில்லை. மாறாக அல்லைப்பிட்டி, மூதூர், மன்னார் என அப்பாவி மக்களையும், மாணவர்களையும், சிறார்களையும் இலக்குவைத்து கொலைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

அரச பயங்கரவாதத்தால் தம் உறவுகளும் தம் இனமும் அழிக்கப்படுவதையிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடித்து தாம் வாழும் நாட்டின் அரசுகளிடம் இது தொடர்பாக முறையிட்ட வண்ணம் உள்ளனர்.

ஆனால் அந்த அரசுகள் அவர்களை சிறு அனுதாபத்துடன் பார்த்துவிட்டு தாமுண்டு தம்வேலையுண்டு என்று மெத்தனமாக நடக்கின்றனர். சிறிலங்கா அரசின் இத்தகைய கொலை வெறியாட்டத்தை நிறுத்த எத்தகைய அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

இதனால் சிறிலங்கா அரசு அதனை தனது கொலை வெறியாட்டத்திற்கான உலக அங்கீகாரமாக நினைத்து விமானத் தாக்குதல்களை அதிகரித்து தொடர் கொலை வெறியாட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் தம் இனமும் உறவுகளும் அழிக்கப்படுவதை பொறுக்க முடியாத சில அப்பாவி புலம்பெயர் உறவுகள் உணர்ச்சி வசப்பட்டனர். தமது உறவுகளை காக்கவேண்டுமெனில் கொடூரம் புரியும் விமானங்கள் அழிக்கப்படவேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் தாம் ஏதாவது செய்யவேண்டுமென முனைந்தனர்.இவ்வாறு உணர்வுகளால் உந்தப்பட்டவர்களை ஏவுகணைகளை காட்டி அவர்களை அதை வாங்கத் தூண்டிவிட்டு பின்னர் அவர்களைக் கைது செய்துவிட்டு அதைத் தமது புலனாய்வு வெற்றியாகக் காட்டி தனது கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டியுள்ளது (FBI).

இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு, (FBI) இன் சில வக்குரோத்துத் தனமான தகவலாளர்களாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்ட நயவஞ்சக சதித்திட்டத்தால் தற்போது எட்டு அப்பாவி புலம்பெயர் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

ஏதுமறியா, வெறும் மன உணர்ச்சி வேகத்துக்கு உட்பட்டிருந்த இந்த அப்பாவிகளுக்கு, தாமே ஏவுகணைகளை வாங்கித் தருவதாகக் கூறி (FBI) யின் செயற்பாட்டாளர்கள் நாடகமாடி கடைசியாக அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

ஒரு அரசியல் கட்சிக்கோ போராட்ட அமைப்புக்கோ கொள்கை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் பல்லாயிரம் ஆதரவாளர்கள் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அவ்வாறானவர்கள் எல்லோரும் அவ்வமைப்பின் உத்தியோக செயற்பாட்டாளர்களாக இருக்கமாட்டார்கள்.

ஒரு சத்தியத்திற்கு மாறான கொடூர நிகழ்வை அறிந்தவன், அவன் ஒரு கோழையாக இருந்தாலும் அதற்குரிய எதிர்ப்புணர்வை காட்டியே தீருவான்.

தனது தாய் நிலத்தில், அதுவும் அப்பாவி பாடசாலை மாணவிகள் விமானக் குண்டுவீச்சால் இவ்வளவு பெருந்தொகையில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டத

  • தொடங்கியவர்

நானும் அவ்வறே நினத்தேன் எனெனின் புலிகளுக்கு அமெரிக்கவிடம் இருந்து ஆயுதம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை இது உணர்ச்சி மேலீட்டால் வந்த வினையோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அமெரிக்க நண்பர் கூறிய கருத்தின்படி. இந்நாடகம் கனேடிய-அமெரிக்க கூட்டுத்தயாரிப்பாகுமாம்!!!!

இதில் கூறப்படும் கனேடிய, அமெரிக்க சம்பவங்கள் ஒன்றுக்கொன்று உண்மையிலேயே தொடர்பேயில்லாமல் முடிச்சுப் போடப்பட்டுள்ளதாம்!!!

மேலும் அமெரிக்க சம்பவத்தை விசாரித்த இடத்தில் .... கைது செய்யப்பட்ட பலர் இந்தியத் தமிழர்களாம்!!! தமிழ் உணர்வுள்ள அவர்கள், விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்க மண்ணில் தடை போடப்பட்டதுமே, அதற்கெதிராக பலமாக வேலை செய்த உண்மையான தமிழ் உணர்வாளர்கள்!! இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக சோக்கிரட்டீஸ் எனும் உணர்வாளர் பல லொபி குறூப்புகளை அமெரிக்காவில் நிறுவி, தடையை எடுக்க போராடியவராம்!! மற்றும் அமெரிக்க எப்.பி.ஐயினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பல வருடங்களுக்கு முற்பட்டதாம்!! சிலவேளை ஒரு கதையாக "காசை, அமெரிக்க ஸ்டேட் டிப்பாட்மெற்றிலுள்ள எவருக்காவது கொடுத்தாவது தடையை எடுப்போம்" கூறியிருக்கலாமேயன்றி, உண்மையில் அவ்வாறு முயற்சிக்க வில்லையாம்!!!

மற்றும் கடந்த காலங்களில் கனேடிய அரசு எத்தனை தடவை தடைகளை எவ்வாறு ஏற்படுத்தியது என்பது புரியும். கனடாவில் அண்மைக்காலங்கலாக தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் விரிவடைந்தது மட்டுமல்லாமல் அது ஏனைய ஐரோப்பாக்கும் பரவியது. இந்த த.இ.அ க்கு போட முற்பட்ட முட்டுக்கட்டை "ஆயுதக் கொள்வனவு" எனும் நாடக மூலம் அரங்கேறியுள்ளது.

ஒண்று மட்டும் உண்மை!! உது போன்ற ஆயிரம் ஆப்புக்கள் எம் மீது விழலாம்!!! விழும்!! .... அடுத்தது ஐரோப்பாவிலுமாக இருக்கலாம்!! .... ஆனால் எம் பயணம் தொடர வேண்டும்!!! கல்லும், முள்ளும்தான் எங்கள் பயணத்தில்!!!

இது அமெரிக்க கனேடிய அரசுகளின் கூட்டுச்சதியாக இருந்தாலும் அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால்கூட தமிழி இளைஞர்கள் இவர்கள் குற்றம் சொல்லமுடியாது. அதாவது சும்மா இருந்து இளைஞர்களை ஆயுதம் வாங்கித் தருவதாகவும் புலிகளின் பெயரை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் எடுப்பதாகவும் கூறி ஏமாற்றிய உளவாளிகளைத் தான் கைதுசெய்யவேண்டும்.

சுயிந்தன் இப்ப நடக்கிறதெல்லாம் தமிழர் போராட்டத்தை நசுக்க வல்லரசு பின்னுகிற வலை தமிழர் போராட்டம் செயிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகக்கவனமாக இருக்கிறது. காரணம் வெளிப்படையானது திருகோணமலைத்துறைமுகத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா பிரியப்படுகிறது. தமிழர் கை ஓங்கினால் அமெரிக்கா என்ன? பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கும் அந்த இயற்கைத் துறைமுகம் கிடைக்கப் போவதில்லை. இவர்களின் எண்ணங்களுக்குத் தடையாக இருப்பது விடுதலைப்புலிகளின் அதாவது தமிழ் மக்களின் தாயக மீட்புப் போராட்டம். இந்தப்போராட்டத்திற்கு உலகளாவிய ரீதியில் எத்தனையோ தடைகளும், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆயுத வழங்கல்களும் இன்னும் மிகப்பாரிய அளவில் மறைமுகமாக அமெரிக்கா மற்றைய நாடுகளுக்கு ஊடாக கொடுத்தும் எங்களின் விடுதலைப் போரை அடக்க முடியவில்லை. இப்போது இவர்கள் எடுத்திருக்கும் வழி மிகக் கீழ்த்தரமானது. அமெரிக்க,வடஅமெரிக்க நாடுகளில் எழுச்சி பெற ஆரம்பித்த மக்கள் சக்தியை ஒடுக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் தோன்றுகிறது. நம் மக்களும் இத்தகைய சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் இன்னும் மக்கள் சக்தியைப் பாரிய அளவில் தாயகத்தின்பால் வெளிப்படுத்துவதன் மூலமே மேலும் தொடரக் காத்திருக்கும் பல சூழ்ச்சிகளை வெல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.