Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருநொடியில் பிரபலமான இந்தியர்

Featured Replies

 

2%282671%29.jpg
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்;விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா பொறுப்பேற்றுள்ளார். ஒரு இந்தியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியிருப்பது இதுவே முதல் முறை. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் நாதெல்லாவை பார்த்து பெருமை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து நாதெல்லா நேற்றுதான் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 ஆயிரம் பேர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

தற்போது அவரை மொத்தம் 1 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள், பிரபலங்கள், மாணவர்கள் என்று ஏராளமானோர் தற்போது அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெல்லாவின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். இதுதவிர அவருக்கு பிற சலுகைகளும் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து பணிபுரியும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா அந்த நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள அவரின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். அதில் போனஸ் மட்டும் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இது தவிர அவருக்கு நிறுவனத்தின் பங்குகள் மூலம் 13.2 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். ஆக மொத்தம் அவரது சம்பளம் 18 மில்லியன் டொலர் அதாவது ரூ.112 கோடி. ரொக்கமாக வழங்கப்படும் போனஸ் 0 முதல் 300 சதவீதம் வரை நாதெல்லாவுக்கு வழங்கப்படும். ஆனால் அவரது வேலையை பார்த்து போர்டு உறுப்பினர்கள் தான் போனஸ் சதவீதத்தை முடிவு செய்வார்கள். நாதெல்லாவுக்கு கடந்த ஆண்டு 1.6 மில்லியன் டாலர் போனஸ் கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர் மற்றும் டூல்ஸ் பிசினஸ் பிரிவு தலைவராக இருந்த நாதெல்லாவுக்கு கடந்த 2013ஆம் நிதியாண்டில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 096 சம்பளமாக கிடைத்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/99346-2014-02-07-03-37-21.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

....முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 ஆயிரம் பேர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

தற்போது அவரை மொத்தம் 1 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள், பிரபலங்கள், மாணவர்கள் என்று ஏராளமானோர் தற்போது அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த "பின் தொடர்கிறார்கள்..பின் தொடர்கிறார்கள்" ன்னு வருதே, அப்படியென்றால் இவர்களெல்லாம் பிரேமானந்தா, நித்யானந்தா ஆகியோரின் சீடர்கள் போன்றா? :o

 

பின்னாலேயே போய் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இவர்கள், நடிகர்களின் "கட் அவுட்"டிற்கு பாலாபிஷேகம், சூடம் கொளுத்தும் பாமர சினிமா ரசிகர்கள் போன்றவர்கள். :)

 

இந்த மாதிரி கவர்ச்சிகரமான "விரும்புதல், பின் தொடர்தல்" போன்ற  விளம்பர யுக்திகளால், நிறுவனங்கள் தான் பயனடையுமேயொழிய இந்த பின்னாலேயே திரியும் "ஞே" ரசிகர்களல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய புரிதலின்படி,

 

டுவீட்டரில் "தொடர்பது" என்பது சரியான சொற்பதமில்லை. "கவனிக்கப்படுகிறார்" என்பதே சரியான சொற்பதமென்று நினைக்கிறேன்.

 

அதுசரி இவரை ஏன் ஏனையோர்கள் தலையில் வைத்துக்கொண்டாடுகிறார்கள். இவரைவிட அப்பனான பெருமுதலாழிகளெல்லாம் எம்முடன், சாதாரண நிமிடத்துக்கொருமுறை ஓடும் விரைவுத் தொடரூந்தில் பயணம்செய்வார்கள், எவராலும் கவனிக்கப்படாமலே. தவிர எங்களூரில் மலையகத் தோட்டத்து அப்பாவித் தொழிலாழிகளைக் கண்காணிக்கவும் அவர்களை சாறாகப் பிழிந்து வேலைவாங்கவும் தோட்டத்துரைமார் யாழ்ப்பாணத்துக் கங்காணிகளை வேலைக்கமர்த்துவார்கள், அதுபோலவே இவரும் ஐரி கங்காணி எசமானுக்கு விசுவாசமாக மிகமும் பௌவியமாக நடந்துகொள்ளப்போகும் ஏவலாள். அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.