Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும் நடிகர் சத்யராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

ஆனால், மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு :

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ் இயக்குனர்கள் சங்கம் , நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய நான்கு சங்கங்களும்

( மொத்தத் தமிழ்த் திரையுலகத்தின் பிரதிநிதிகள் ) ஒன்றாக மேடையில் தோன்றி பத்திரிகையாளர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் எழுவரை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் .

இதில் :

சட்ட ரீதியான போராட்டம் தொடரும். அதே வேளையில் காட்டுமிராண்டித்தனமான, பின்பக்க வழியில் மத்திய அரசோ, மாநில காங்கிரசாரோ இறங்கினால் அதைத் தமிழ்த் திரையுலகம் தக்கவாறு எதிர்கொள்ளும் என்பதைத் தெரிவித்திருக்கிறோம். போராட நாங்கள் ஆயத்தமாகி விட்டோம். தவறான தகவல்கள் கொடுத்து மக்களைத் திசை திருப்பி வரும் வட இந்திய ஊடகங்களுக்கு சாட்டையடி !. அமைந்தது என்று கூறினார்கள்.

இதனை தொடர்ந்து அங்கு பேசிய இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, ‘’உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்’’என்று பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது,

‘‘தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்’’ என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசும்போது,

‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்–அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் அமீரின் பேச்சு!!!!

சத்தியராஜின் பேச்சு!
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை ஜெயலலிதாவுக்குப் பின் ஒட்டுமொத்த திரையுலகமும் நிற்கும் - பாரதிராஜா

 

 

barathirajah_CI.jpg

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒட்டு மொத்த தமிழர்களோடு சேர்ந்து தமிழ்த்திரைத்துறையினரும் துணை நிற்பார்கள் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் மரண தண்டனையை இரத்து செய்துகொண்டிருக்கும் கால கட்டம் இதுவெனவும், இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்பிற்கமைய அவர்களின் விடுதலை குறித்து அறிவித்த முதல்வருக்கு, உலக தமிழர்கள் அனைவரும் கண்ணீரால் நன்றி சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் அமீர், தமிழரின் பல வருட போராட்டங்களுக்கு, உச்ச நீதிமன்றில் ஒரு தமிழன் அமர்ந்ததால் விடிவு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

விடுதலை முடிவு அவசரகாலத்தில் எடுத்த முடிவு என்று சிலர் சொல்வது, அரசியல் ஆதாயத்திற்காக கூறப்படும் கருத்து. புத்திசாலித்தனத்தோடும், தொலைநோக்குப்பார்வையோடும் எடுத்த முடிவு இது. முதல்வரின் பின்னால் ஒட்டுமொத்த திரையுலகமும் நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103457/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.